தோல்வியிலும் வெற்றி
தோல்விதனை எழுதிய வரலாறு
வெற்றிதனில் எழுதியது - இவர்கள்
வித்தியாசமானவர்கள் என்று!
ராமகாதை
கல்லைப் பெண்ணாய் ஆக்கியவனே!
காகுந்தனை அழித்தவனே!
கிஷ்கிந்தை சென்றவனே!
கீர்த்தி பல பெற்றவனே!
குகனைச் சோதரனாய் ஏற்றவனே!
கூனிக்கும் அருளியவனே!
கெடுமதி ராவணனை அழித்தவனே!
கேகயன் மகளையும் அன்னையாய் வரித்தவனே!
கைகேயிக்கு வாக்கு தந்தவனே!
கொடுத்த வாக்கு முடித்தவனே!
கோதண்டம் ஏந்தியவனே!
கௌசல்யாவின் மைந்தனே!
எஃகின் வலிமை எமக்குத் தருவாய் நீயே!
தோல்விதனை எழுதிய வரலாறு
வெற்றிதனில் எழுதியது - இவர்கள்
வித்தியாசமானவர்கள் என்று!
ராமகாதை
கல்லைப் பெண்ணாய் ஆக்கியவனே!
காகுந்தனை அழித்தவனே!
கிஷ்கிந்தை சென்றவனே!
கீர்த்தி பல பெற்றவனே!
குகனைச் சோதரனாய் ஏற்றவனே!
கூனிக்கும் அருளியவனே!
கெடுமதி ராவணனை அழித்தவனே!
கேகயன் மகளையும் அன்னையாய் வரித்தவனே!
கைகேயிக்கு வாக்கு தந்தவனே!
கொடுத்த வாக்கு முடித்தவனே!
கோதண்டம் ஏந்தியவனே!
கௌசல்யாவின் மைந்தனே!
எஃகின் வலிமை எமக்குத் தருவாய் நீயே!
புதிய ஆத்திச்சூடி
அகந்தை கொள்ளாதே
ஆத்திரப்படாதே
இயற்கையோடு இயைந்து வாழ்
ஈன்றவரைப் புறக்கணிக்காதே
உயர்ந்த கனவு காண்
ஊருக்கு உபகாரம் செய்
எதிரியிடமும் இரக்கம் காட்டு
ஏணியாய் இரு
ஒற்றுமையாய் இரு
ஓட்டி விடு கவலைகளை
ஔடதமாய் இரு அடுத்தவருக்கு
எஃகாய் இதயம் படைத்திடு
அகந்தை கொள்ளாதே
ஆத்திரப்படாதே
இயற்கையோடு இயைந்து வாழ்
ஈன்றவரைப் புறக்கணிக்காதே
உயர்ந்த கனவு காண்
ஊருக்கு உபகாரம் செய்
எதிரியிடமும் இரக்கம் காட்டு
ஏணியாய் இரு
ஒற்றுமையாய் இரு
ஓட்டி விடு கவலைகளை
ஔடதமாய் இரு அடுத்தவருக்கு
எஃகாய் இதயம் படைத்திடு
தை மகளே வருக!
கே.பாலசுந்தரி.எம்.ஏ
8124394182
சுபிட்சத்தைத் தந்திடும்
சுந்தரத் தை மகள் வருகையால்
மனம் தை தை என்றே சதிராடுது!
நடந்ததை எண்ணி மனம் அசைபோடுது
நடப்பதை எண்ணிக் கவலையுறாது
நடக்கப்போவதை நோக்கி நாம்
புதிய பாதையில் பயணிப்போம். மனிதனாய்ப்
பிறந்ததை எண்ணி மகிழ்வோம். உலகுக்கு
உவந்ததை செய்வதிடவே பிறந்தோம்
என்பதை உணர்வோம்
குழந்தை மனதுடன் குதூகலமாக
நிஜத்தைத் தேடி அடைவோம். அன்பை
யாசிப்பதை விடுத்து இந்த
உலகத்தையே நேசிப்போம்-
என்பதை மட்டுமே யோகிப்போம்!
கே.பாலசுந்தரி.எம்.ஏ
8124394182
சுபிட்சத்தைத் தந்திடும்
சுந்தரத் தை மகள் வருகையால்
மனம் தை தை என்றே சதிராடுது!
நடந்ததை எண்ணி மனம் அசைபோடுது
நடப்பதை எண்ணிக் கவலையுறாது
நடக்கப்போவதை நோக்கி நாம்
புதிய பாதையில் பயணிப்போம். மனிதனாய்ப்
பிறந்ததை எண்ணி மகிழ்வோம். உலகுக்கு
உவந்ததை செய்வதிடவே பிறந்தோம்
என்பதை உணர்வோம்
குழந்தை மனதுடன் குதூகலமாக
நிஜத்தைத் தேடி அடைவோம். அன்பை
யாசிப்பதை விடுத்து இந்த
உலகத்தையே நேசிப்போம்-
என்பதை மட்டுமே யோகிப்போம்!
மழழைப் பேறு
சூரியனின் வெப்பத்தால்
சூல் கொண்டது வெண்மேகம்
கருவைத்தாங்கிக் கனத்த வெண்மேகம்
கருமேகமானது - வலி
மின்னலாய் வெட்ட
உருண்டு புரண்ட கருமேகம்
இடியாய் குரலெழுப்பி அலறித் துடிக்க
மெல்ல வெளிப்பட்டது
மழைக் குழந்தை!
வானுக்கும் பூமிக்குமாய்
தொப்புள் கொடியாய் தூறல் நீள
மண்ணில் விழுந்தது மழைக்குழந்தை!
மழைக்குழந்தை வந்த பின்னே
மண்ணில் எத்தனை எத்தனைப்
பச்சை (நிறக்) குழந்தைகள்!
புல், பூண்டு, செடி - கொடி யென
புதுப் பெயர் சூட்டிப்
புவனமும் அழைக்க
புதுவசந்தமும் வந்தது!
புவியும் செழித்தது!
சூரியனின் அருளால் பிறந்ததால்
மழையும் கர்ணனாய் ஆனதோ?
மடைதிறந்த வெள்ளமாய்
கொடைதனை அருளுதோ?
அன்றும் இன்றும்
கே.பாலசுந்தரி.எம்.ஏ
8124394182
விலங்குகளைக் கொன்று
வேட்டையாடக் கணை கொடுத்தான் அன்று
மனிதர்களைக் கொன்று
பழிதீர்க்க ஏவுகணை கண்டான் இன்று
மனித நேயம் கொண்டோம் அன்று
மனித வெடிகுண்டு கண்டோம் இன்று
ஏன் இந்த மாற்றம் என்று
யோசிப்போமா சற்றே நின்று
மனிதன் விலங்கானான் இன்று
அதனால் வந்த வினை என்று
உணர்ந்து விட்டால் நன்று
உணர போவது என்று?
அடக்கு முறை கண்டு
ஆட்டிப் படைக்கிறோம் இன்று
அன்பு வழி கண்டு
அகிலம் வெல்வது என்று?
விஞ்ஞான அறிவு கொண்டு
அழிவை நாடுகிறோம் இன்று!
மெய்ஞான அறிவு கொண்டு
அமைதி நாடுவதே நன்று!
அகிம்சை வழி நின்று
அன்பை விதைத்தல் நன்று!
கடவுளும் நீயும்
உன்னைக்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
நீ எங்கேயும் இருப்பாய்
எந்த உருவிலும் வருவாய் -நீ
நீரிலும் இருப்பாய்
நெருப்பிலும் இருப்பாய்
மண்ணிலும் இருப்பாய்
விண்ணிலும் இருப்பாய்
காற்றிலும் கரைந்து இருப்பாய்
காலம் காலமாக இருக்கும்
உன்னைக் காட்ட முடியாது
உணர மட்டுமே முடியும்
உணர்ந்த பின்னர்
உன்னில் உறைந்து
மறைந்து உன்னில்
கலந்து கரைந்து விடுவதால்
மரணமே நீயும்
கடவுளும் ஒன்றா ?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
புதிய சிறகுகள்
எண்ணப் பறவை சிறகொடிந்து
மண்ணில் கிடக்கின்றது -பொய்
வேடந்தாங்கு வோரைத் -தன்
வேடந்தாங்கலாய் நம்பியதை
எண்ணித் தவிக்கின்றது
கண்ணீரை வடிக்கின்றது
கடந்த காலம் நினைக்கின்றது
காகிதத்தில் தன் காயம் துடைக்கின்றது
எழுதுகோல் எடுக்கின்றது -அதில்
எண்ணங்களை நிரப்புகின்றது
கற்பனையை விரிக்கின்றது
கவிதை பிறக்கின்றது
சாம்பலிலும் உயிர்க்கும்
"பீனிக்ஸ் " பறவையாய் உயிர்க்கின்றது
புதிய சிறகுகள் முளைக்கின்றது
புதிய சகாப்தம் படைக்கின்றது
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
மரம் நம் வரம்
வான மங்கையின் வண்ணமிகு
ஓசோன் ஆடையைத்
தொட்டிழுத்துத் துகிலுரித்தத்
துச்சாதனர்களே !
வரப்போகும் புவிவெப்பம் எனும்
புதியதொரு குரு சேஷ்த்திரப் போரினால் - நீங்கள்
தோற்காதிருக்கப் புகல்கிறேன்
புதிய கீதை !
வான மங்கையின்
வண்ணச் சேலையின் - ஓசோன்
ஓட்டைகளை ஒட்டுப்போட்டுத்
தைத்திடுங்கள்
நூலும் ஊசியும் இல்லா
நூதனத் தையல் இது
நுட்பமாய் இதனைச் செய்தால்
நுகர்ந்திடலாம் தூயக் காற்று
மரம் வளர்த்து
மனிதம் வளர்ப்போம் !
மரம்தான் இது மனிதற்கு
வரம்தான் என உணர்வோம் !!!
மந்திரம்
கேட்டேன்
கேட்டது கிடைக்கவில்லை
நினைத்தேன்
நினைத்தது நடக்கவில்லை
அழுதேன்
அமைதி கிடைக்கவில்லை
எழுதினேன்
ஏட்டில் வரவல்லை -புறக்
கண்களை மூடினேன் -அகக்
கண் திறந்தது
ஆழ்ந்து யோசித்தேன்
அனுபவங்களை தொடுத்தேன்
அரங்கேற்றம் செய்தேன்
அற்புதம் நிகழ்ந்தது
அச்சில் ஏறியது
கேட்காமலேயே வெற்றி
கிடைத்தது !
நினைக்காமலே வந்தது
நிம்மதி!
மாற்று யோசனையே
மந்திரம் என்ற
தந்திரம் தெரிந்தது !
முதிர்கன்னி
வீணாய் உலர்ந்த
மலருக்கு உண்டு மணம்
வீணாய்ப் போன
விதவைக்கு உண்டு மறுமணம்
குடும்பத் தூணாய் நிற்கும்
முதிர் கன்னிக்கு என்று மனம்?
ஒப்புக்கு வாழ்ந்து
ஓடாய் தேய்கிறாள் தினம்
கைத்தலம் பற்றக்
கனாக்காண்கிறாள் தினம் தினம்
கல்யாண பத்திரிகையில்
தன் பேர் வருமா என
ஏங்குகிறாள் தினம்
கன்னிகாதானம்.ஆனாலும்
கட்டாயம் தரவேண்டும் சீதனம்
நினைக்கையில் நெஞ்சுக்குள் ஆறாதரணம்
இதற்கு என்று நிவாரணம்?
கன்னத்துச் சுருக்கத்தையும்
காதோர நரையையும்
கண்ணாடி காட்டுது
கன்னி கழியாத கழிசடை என
ஊருசனம் தூற்றுது
எப்போது மாறும் இவரது குணம்?
நடைப்பிணம் அவளுக்கும் உண்டு மனம் ,மனம் .....?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்
இனி ஒரு சுதந்திர வேள்வி
இன்று முதல் தொடங்குவோம்
அந்நியரை வெளியேற்றிய நாம்
அந்நிய மோகம் தவிர்க்க மறந்தோம்
தவிர்க்க மறந்ததால்- இன்று
தவித்து நிற்கிறோம்
தாய்ப்பால் தவிர்த்தப்
புட்டிப்பால் குழந்தையாய்
தாய்மொழி மறந்து
தடம் மாறி நின்று
தமிழ்ப்புத்தாண்டும்
தமிழர் திருநாளும் மறந்து
ஆங்கிலப் புத்தாண்டை
ஆலம் சுற்றி வரவேற்கின்றோம்
அந்நியரை மதிப்போம்
அதேசமயம் - நம்
கலாசாரமும் காப்போம்
களை எடுக்கிறோம் எனப் பயிரைப் பிடுங்காது
அந்நிய மோகம் தவிர்ப்போம் -நம்
அன்னை பூமியை மதிப்போம் .
காரையின் புது கவிதை
கவிதைச்சரம்
மாங்குடி
திருவாரூர்
சஞ்சீவி மருந்து!
கொத்துக் கொத்தாய்
செத்துமடியும் தொற்று
நோய்களுக்கு மருந்துகள்
பல கண்டோம்!
இளம்பிள்ளைவாதம் நீக்கப்
போலியோ ஒழிப்பு
முகாம்கள் கண்டோம்
மதவாதம் நீங்க
மருந்தென்ன கண்டோம்?
காலராவுக்கும் மருந்து கண்டோம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கால்வேறு கைவேறு ஆக்கி கதற வைக்கும்
கண்ணிவெடி கலாசாரத்திற்கு
மருந்து கண்டோமா?
பெரியம்மை, தட்டம்மை
பெரிதும் ஒழித்தோம்
அப்பாவிகளைத் தக்கும்
தீவிரவாதம் ஒழிய
மருந்து கண்டோமா?
விஞ்ஞானிகள் மருந்து
காணும் முன்னே - நம்
மெய்ஞானிகள் கண்ட
மருந்தொன்று உண்டு
அத்தனை வாதங்களையும்
அறவே நீக்கும் அற்புத மருந்து
அதுதான் அன்பெனும்
அருமருந்து!
புதிய அந்தாதி
வீரசுதந்திரம் பெற்றிட்டோம்
தீரநெஞ்சினர் போராட்டத்தால்
போராட்டங்கள் ஓய்வதில்லை-எனவேப்
புதிதாய் ஒரு போராட்டம்
போராடும் வேலையில்லா இளைஞர்கள்
வேலைதேடி அலையாமல் - தானே
வேலைவாய்ப்பை உருவாக்கும்
புதியதொரு போராட்டம்
போராட்டம் வென்றிடும்
போர்க்குண இளைஞரணி
புண்ணிய பாரதத்தைத்
திண்ணியதாய் ஆக்கிடும்
ஆக்கிடும் திட்டங்கள்
அத்தனையும் பலித்திடும் - நாட்டை
வல்லரசாய் மாற்றிட
வலிமையான இளைஞர் வரிசை
வரிசையாய்ச் சாதனைகள்
வரிந்து கட்டும் தீரர்கள் - நாளைய
வரலாறு கூறிடும் நம்மையும்
வல்லரசு தான் என்று.
சுமைதாங்கி
சாத்திரங்கள் சொல்லுது
சாகும் வரை பெண் - ஆணைச்
சார்ந்து வாழ வேண்டும் என்று. அந்த
சாணக்கியனும் சொன்னான்
இளமையில் தகப்பனே துணை
வாலிபத்தில் கணவனையே நினை
வயோதிகத்தில் மகனே துணை - என்று
வேதங்களும் சொல்லுது இந்த
வேதனையான சட்டத்தை
வேடிக்கை என்னவெனில். ஆண்கள்
தன்னால் சுமக்க முடியாத
சுமைதனை சுமக்கவே
சுமைதாங்கி ஆக்கினான் பெண்ணினத்தை!
இளமையில் தகப்பனுக்கு உதவியாக
தம்பித் தங்கைகளைச் சுமந்து. பின்
தாலியைச் சுமந்து
தாய் வீட்டை மறந்து
தாரமாய் வாழ்ந்து
புகுந்த வீடு சுமக்கிறான்
கணவனை நெஞ்சில் சுமந்து
கருவை வயிற்றில் சுமந்து. பின்
இடுப்பில் சுமந்து
காலத்துக்கும் மக்களை
மனதில் சுமந்து
அடடா அற்புதம்! அந்த
ஆணல்லவோ பெண்ணை
ஆயுளுக்கும் சார்ந்து நிற்கிறான்
சூரியனின் வெப்பத்தால்
சூல் கொண்டது வெண்மேகம்
கருவைத்தாங்கிக் கனத்த வெண்மேகம்
கருமேகமானது - வலி
மின்னலாய் வெட்ட
உருண்டு புரண்ட கருமேகம்
இடியாய் குரலெழுப்பி அலறித் துடிக்க
மெல்ல வெளிப்பட்டது
மழைக் குழந்தை!
வானுக்கும் பூமிக்குமாய்
தொப்புள் கொடியாய் தூறல் நீள
மண்ணில் விழுந்தது மழைக்குழந்தை!
மழைக்குழந்தை வந்த பின்னே
மண்ணில் எத்தனை எத்தனைப்
பச்சை (நிறக்) குழந்தைகள்!
புல், பூண்டு, செடி - கொடி யென
புதுப் பெயர் சூட்டிப்
புவனமும் அழைக்க
புதுவசந்தமும் வந்தது!
புவியும் செழித்தது!
சூரியனின் அருளால் பிறந்ததால்
மழையும் கர்ணனாய் ஆனதோ?
மடைதிறந்த வெள்ளமாய்
கொடைதனை அருளுதோ?
அன்றும் இன்றும்
கே.பாலசுந்தரி.எம்.ஏ
8124394182
விலங்குகளைக் கொன்று
வேட்டையாடக் கணை கொடுத்தான் அன்று
மனிதர்களைக் கொன்று
பழிதீர்க்க ஏவுகணை கண்டான் இன்று
மனித நேயம் கொண்டோம் அன்று
மனித வெடிகுண்டு கண்டோம் இன்று
ஏன் இந்த மாற்றம் என்று
யோசிப்போமா சற்றே நின்று
மனிதன் விலங்கானான் இன்று
அதனால் வந்த வினை என்று
உணர்ந்து விட்டால் நன்று
உணர போவது என்று?
அடக்கு முறை கண்டு
ஆட்டிப் படைக்கிறோம் இன்று
அன்பு வழி கண்டு
அகிலம் வெல்வது என்று?
விஞ்ஞான அறிவு கொண்டு
அழிவை நாடுகிறோம் இன்று!
மெய்ஞான அறிவு கொண்டு
அமைதி நாடுவதே நன்று!
அகிம்சை வழி நின்று
அன்பை விதைத்தல் நன்று!
கடவுளும் நீயும்
உன்னைக்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
நீ எங்கேயும் இருப்பாய்
எந்த உருவிலும் வருவாய் -நீ
நீரிலும் இருப்பாய்
நெருப்பிலும் இருப்பாய்
மண்ணிலும் இருப்பாய்
விண்ணிலும் இருப்பாய்
காற்றிலும் கரைந்து இருப்பாய்
காலம் காலமாக இருக்கும்
உன்னைக் காட்ட முடியாது
உணர மட்டுமே முடியும்
உணர்ந்த பின்னர்
உன்னில் உறைந்து
மறைந்து உன்னில்
கலந்து கரைந்து விடுவதால்
மரணமே நீயும்
கடவுளும் ஒன்றா ?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
புதிய சிறகுகள்
எண்ணப் பறவை சிறகொடிந்து
மண்ணில் கிடக்கின்றது -பொய்
வேடந்தாங்கு வோரைத் -தன்
வேடந்தாங்கலாய் நம்பியதை
எண்ணித் தவிக்கின்றது
கண்ணீரை வடிக்கின்றது
கடந்த காலம் நினைக்கின்றது
காகிதத்தில் தன் காயம் துடைக்கின்றது
எழுதுகோல் எடுக்கின்றது -அதில்
எண்ணங்களை நிரப்புகின்றது
கற்பனையை விரிக்கின்றது
கவிதை பிறக்கின்றது
சாம்பலிலும் உயிர்க்கும்
"பீனிக்ஸ் " பறவையாய் உயிர்க்கின்றது
புதிய சிறகுகள் முளைக்கின்றது
புதிய சகாப்தம் படைக்கின்றது
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
மரம் நம் வரம்
வான மங்கையின் வண்ணமிகு
ஓசோன் ஆடையைத்
தொட்டிழுத்துத் துகிலுரித்தத்
துச்சாதனர்களே !
வரப்போகும் புவிவெப்பம் எனும்
புதியதொரு குரு சேஷ்த்திரப் போரினால் - நீங்கள்
தோற்காதிருக்கப் புகல்கிறேன்
புதிய கீதை !
வான மங்கையின்
வண்ணச் சேலையின் - ஓசோன்
ஓட்டைகளை ஒட்டுப்போட்டுத்
தைத்திடுங்கள்
நூலும் ஊசியும் இல்லா
நூதனத் தையல் இது
நுட்பமாய் இதனைச் செய்தால்
நுகர்ந்திடலாம் தூயக் காற்று
மரம் வளர்த்து
மனிதம் வளர்ப்போம் !
மரம்தான் இது மனிதற்கு
வரம்தான் என உணர்வோம் !!!
மந்திரம்
கேட்டேன்
கேட்டது கிடைக்கவில்லை
நினைத்தேன்
நினைத்தது நடக்கவில்லை
அழுதேன்
அமைதி கிடைக்கவில்லை
எழுதினேன்
ஏட்டில் வரவல்லை -புறக்
கண்களை மூடினேன் -அகக்
கண் திறந்தது
ஆழ்ந்து யோசித்தேன்
அனுபவங்களை தொடுத்தேன்
அரங்கேற்றம் செய்தேன்
அற்புதம் நிகழ்ந்தது
அச்சில் ஏறியது
கேட்காமலேயே வெற்றி
கிடைத்தது !
நினைக்காமலே வந்தது
நிம்மதி!
மாற்று யோசனையே
மந்திரம் என்ற
தந்திரம் தெரிந்தது !
முதிர்கன்னி
வீணாய் உலர்ந்த
மலருக்கு உண்டு மணம்
வீணாய்ப் போன
விதவைக்கு உண்டு மறுமணம்
குடும்பத் தூணாய் நிற்கும்
முதிர் கன்னிக்கு என்று மனம்?
ஒப்புக்கு வாழ்ந்து
ஓடாய் தேய்கிறாள் தினம்
கைத்தலம் பற்றக்
கனாக்காண்கிறாள் தினம் தினம்
கல்யாண பத்திரிகையில்
தன் பேர் வருமா என
ஏங்குகிறாள் தினம்
கன்னிகாதானம்.ஆனாலும்
கட்டாயம் தரவேண்டும் சீதனம்
நினைக்கையில் நெஞ்சுக்குள் ஆறாதரணம்
இதற்கு என்று நிவாரணம்?
கன்னத்துச் சுருக்கத்தையும்
காதோர நரையையும்
கண்ணாடி காட்டுது
கன்னி கழியாத கழிசடை என
ஊருசனம் தூற்றுது
எப்போது மாறும் இவரது குணம்?
நடைப்பிணம் அவளுக்கும் உண்டு மனம் ,மனம் .....?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்
இனி ஒரு சுதந்திர வேள்வி
இன்று முதல் தொடங்குவோம்
அந்நியரை வெளியேற்றிய நாம்
அந்நிய மோகம் தவிர்க்க மறந்தோம்
தவிர்க்க மறந்ததால்- இன்று
தவித்து நிற்கிறோம்
தாய்ப்பால் தவிர்த்தப்
புட்டிப்பால் குழந்தையாய்
தாய்மொழி மறந்து
தடம் மாறி நின்று
தமிழ்ப்புத்தாண்டும்
தமிழர் திருநாளும் மறந்து
ஆங்கிலப் புத்தாண்டை
ஆலம் சுற்றி வரவேற்கின்றோம்
அந்நியரை மதிப்போம்
அதேசமயம் - நம்
கலாசாரமும் காப்போம்
களை எடுக்கிறோம் எனப் பயிரைப் பிடுங்காது
அந்நிய மோகம் தவிர்ப்போம் -நம்
அன்னை பூமியை மதிப்போம் .
காரையின் புது கவிதை
கவிதைச்சரம்
மாங்குடி
திருவாரூர்
சஞ்சீவி மருந்து!
கொத்துக் கொத்தாய்
செத்துமடியும் தொற்று
நோய்களுக்கு மருந்துகள்
பல கண்டோம்!
இளம்பிள்ளைவாதம் நீக்கப்
போலியோ ஒழிப்பு
முகாம்கள் கண்டோம்
மதவாதம் நீங்க
மருந்தென்ன கண்டோம்?
காலராவுக்கும் மருந்து கண்டோம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கால்வேறு கைவேறு ஆக்கி கதற வைக்கும்
கண்ணிவெடி கலாசாரத்திற்கு
மருந்து கண்டோமா?
பெரியம்மை, தட்டம்மை
பெரிதும் ஒழித்தோம்
அப்பாவிகளைத் தக்கும்
தீவிரவாதம் ஒழிய
மருந்து கண்டோமா?
விஞ்ஞானிகள் மருந்து
காணும் முன்னே - நம்
மெய்ஞானிகள் கண்ட
மருந்தொன்று உண்டு
அத்தனை வாதங்களையும்
அறவே நீக்கும் அற்புத மருந்து
அதுதான் அன்பெனும்
அருமருந்து!
புதிய அந்தாதி
வீரசுதந்திரம் பெற்றிட்டோம்
தீரநெஞ்சினர் போராட்டத்தால்
போராட்டங்கள் ஓய்வதில்லை-எனவேப்
புதிதாய் ஒரு போராட்டம்
போராடும் வேலையில்லா இளைஞர்கள்
வேலைதேடி அலையாமல் - தானே
வேலைவாய்ப்பை உருவாக்கும்
புதியதொரு போராட்டம்
போராட்டம் வென்றிடும்
போர்க்குண இளைஞரணி
புண்ணிய பாரதத்தைத்
திண்ணியதாய் ஆக்கிடும்
ஆக்கிடும் திட்டங்கள்
அத்தனையும் பலித்திடும் - நாட்டை
வல்லரசாய் மாற்றிட
வலிமையான இளைஞர் வரிசை
வரிசையாய்ச் சாதனைகள்
வரிந்து கட்டும் தீரர்கள் - நாளைய
வரலாறு கூறிடும் நம்மையும்
வல்லரசு தான் என்று.
சுமைதாங்கி
சாத்திரங்கள் சொல்லுது
சாகும் வரை பெண் - ஆணைச்
சார்ந்து வாழ வேண்டும் என்று. அந்த
சாணக்கியனும் சொன்னான்
இளமையில் தகப்பனே துணை
வாலிபத்தில் கணவனையே நினை
வயோதிகத்தில் மகனே துணை - என்று
வேதங்களும் சொல்லுது இந்த
வேதனையான சட்டத்தை
வேடிக்கை என்னவெனில். ஆண்கள்
தன்னால் சுமக்க முடியாத
சுமைதனை சுமக்கவே
சுமைதாங்கி ஆக்கினான் பெண்ணினத்தை!
இளமையில் தகப்பனுக்கு உதவியாக
தம்பித் தங்கைகளைச் சுமந்து. பின்
தாலியைச் சுமந்து
தாய் வீட்டை மறந்து
தாரமாய் வாழ்ந்து
புகுந்த வீடு சுமக்கிறான்
கணவனை நெஞ்சில் சுமந்து
கருவை வயிற்றில் சுமந்து. பின்
இடுப்பில் சுமந்து
காலத்துக்கும் மக்களை
மனதில் சுமந்து
அடடா அற்புதம்! அந்த
ஆணல்லவோ பெண்ணை
ஆயுளுக்கும் சார்ந்து நிற்கிறான்