1. மகாபாரதத்தில்
குறளின் குரல்: வாக்கு தவறாதவர்?
மாலை நேரம்: கங்கைக் கரைஓரம். மாமன்னன் சந்தனு நதிக்கரை ஓரம் மெல்ல நடைபயில்கிறான் இயற்கையின் எழிலைப் பருகியபடியே வெகுதூரம் நடக்கிறான். கரையோர மரம் செடிகளின் மீது மாலை நேர மஞ்சள் வெயில் கண்ணா மூச்சி ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மரம் செடிகளுக்குத் தங்க முலாம் பூசியது இயற்கை எனும் இளைய கன்னியின் அதிசயத் தூரிகை.
கங்கையின் நிர்மலமான நீரில் தங்க நிற மரங்களின் பிரதிபலிப்பு அது மிக நீண்ட வெண்பட்டு ஆடையில் தங்க நிற ஜரிகை வேலைப்பாடு போன்ற பிரமிப்பு இது சிருஷ்டியின் அதிசயமோ? பிரமிக்ககிறான். கூடு திரும்பும் நானாவித பட்சிகளின் சப்த ஸ்வரங்கள். சில்லென்று தழுவும் மென்காற்று, பல்வேறு பூக்களின் மணம் நாசியை நிறைக்க மெய்மறந்து நின்றான் சந்தனு.
நதிக்கரை ஓரம் நாணற்புதர் அருகே...
அழகின் மொத்த வடிவாய் ஒரு ஆரனங்கு, காந்தம் இழுபடும் இரும்பென அவள் அருகே செல்கிறான் சந்தனு. அவள் பேரழகு கண்டு பிரமித்து நிற்கிறான் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே அடைக்கலம், என்னை மணப்பாயாக என்று கேட்கிறான். சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்கிறாள் அழகி. உனக்காக எந்த நிபந்தனையும் ஏற்பேன் என்கிறான் சந்தனு. என் பூர்வீகம் பற்றிக் கேட்கக்கூடாது. எனது செயல் எதனையும் தடுக்கக்கூடாது. அது பற்றி விள்க்கம் கேட்கக் கூடாது. அப்படி நீ மீறும் போது உனைவிட்டு விலகுவேன் என்கிறாள் பூடகமாக. சம்மதம் என்று சத்தியம் செய்து அவளை மணக்கிறான். மணவாழ்வின் மாபெரும்,விளைச்சலாக அடுத்தடுத்து ஏழு ஆண்குழந்தைகள். அத்தனையையும் கங்கையில் வீசி எறிகிறாள் அவர் எட்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறக்க அதனையும் கங்கையில் வீச முற்படுகிறாள் அழகி தடுக்கிறான் மன்னன்
தாய்மை நலன் கொண்ட உனக்கு இது தகுமோ என்று ஏசுகிறான். அழகி சிரிக்கிறாள். பின்னர் பேச ஆரம்பிக்கிறாள்.
மன்னா ! நான் மானுடப் பெண் அல்ல "கங்காதேவி" அஷ்டவசுக்கள் வசிஷ்டரின் பசுவான நந்தினியைக் கவர்ந்தனர். அதன் காரணமாக பூமியில் பிறக்கும்படி சாபம் ஏற்பட்டது. என்னைத் தாயாகும்படி கேட்டுக்கொண்டனர் எனவே உன்னை மணந்து அவர்களைப் பெற்று சாபவிமோசனம் பெற வழி வகுத்தேன். பசுவைத் தொட்டு இழுத்த "பிரபாசனே" எட்டாவது குழந்தை அவன் பூமியில் நெடுங்காலம் வாழ்ந்து செயற்கரிய செயல்கள் செய்வான் என்பன் வசிஷ்டரின் வாக்கு எனவே இவனை உரிய காலத்தில் உன்னிடம் கொண்டு வந்து ஒப்படைப்பேன் என்று கூறி குழந்தையுடன் மறைகிறாள்.
ஆண்டுகள் பல ஆன பின் கல்விக் கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து தேவவிரதன் என்று பெயர் சூட்டி மன்னனிடம் ஒப்படைக்கிறாள்.
தேவ விரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி இனிதே வாழ்கிறான்.
நாட்கள் கழிகின்றன ஒரு நாள் யமுனையில் நீராடும் போது ஒரு தெய்வீக மணத்தால் ஈர்க்கப்படுகிறான் சந்தனு மன்னன். மணம் வந்த திசை நோக்கி மனம் அலைபாயச் செல்கிறான். முனிவரின் அருளால் திருமேனியில் தெய்வீக மணத்தைப் பெற்றப் பரதவகுமங்கை சத்தியவதியைக் காண்கிறான்.
என்னை மணந்துகொள் என்று மன்றாடுகிறான் தந்தையைக் கேளுங்கள் என்கிறாள்.
பரிமளசுகந்தியான சத்யவதியின் தந்தை விதித்த நிபந்தனை. கேட்டு மன்னனின் தலை சுழல்கிறது. காதல் வசப்படவில்லையே என்ற வேதனையால் உடல் மெலிகிறான்.
விஷயம் அறிந்து தெளிகிறான் தேவ விரதன். சத்தியவதியிடம் செல்கிறான். அவள் தந்தை கேட்டபடியே சத்தியவதியின் வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடிக்காது பிரம்மச்சியம் அனுஷ்டிப்பேன் என்று உறுதி கூறுகிறான். தந்தைக்குச் சத்தியவதியை வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடித்துவைக்கிறான். ' பீஷ்வ ' என்று
போற்றி தேவர்கள் மலர்மாரி தூவுகின்றனர்.
கங்கையை மணந்து எட்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் சிற்றின்பம் நுகர்வதைத் தறக்க இயலாத தந்தைக்காகத் தான் சிற்றின்பம் பேரின்பமாகக் கருதியவன் தேவவிரதன். பீஷ்மன் என்றால் செயற்கரியசெயல் செய்பவன் என்று பொருள். இதைவிட செயற்கரிய செயல் யாரால் செய்ய இயலும்?
" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
-குறள்
திருக்குறட் செல்வர் - 2
அன்னம்
இது எல்லா உயிர்க்கும் பொதுவானது. " பசி வந்திடப் பத்தும் பறந்து போம் " என்பது பழமொழி. பத்து விதமான உயர் குணங்களைப் பறந்திடச் செய்யும் பசி தீர உணவிட்டவரை, "உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்" எனப் போற்றுகிறோம்.
எனவே தான் பாரதி "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என கர்ஜிக்கிறான். பண்டைக் காலத்தில் மன்னர்கள் அன்னசத்திரம் அமைத்துப் பசிப்பிணி தீர்த்தனர். மணிமேகலை அமுதசுரபி கொண்டு அமுது படைத்ததை அறிகிறோம். இதிகாசகாலத்தில் குருஷேத்திர யுத்தம் நடந்த போது சேரமன்னன்
உதியன் போரிடும் வீரர்களுக்கு சோறிடும் சேவை செய்தான். அதன் காரணமாகப் "பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்" எனப் புகழ் பெற்றான். என வரலாறு கூறுகிறது அவன் அன்னதானச் சிறப்பை.
இந்த அன்னதானச் சிறப்பினை உணர்ந்த இராமலிங்க அடிகளார் வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். பற்றற்ற வள்ளலார் பற்ற வைத்த நெருப்பு மக்களின் பசித்தீயை அணைத்தது. இப்படி சிறப்பாகத் தமிழ் மண்ணில் நடந்து வந்த அன்னதானம் இடைக்காலத்தில் சற்றே குன்ற ஆரம்பித்தது.
ஆயினும் தற்போது புதுப்பொலிவுடன் அன்னதானம் சிறப்புடன் நடைபெறுகிறது. ஆலயங்களுக்குப் புதியதோர் லயம் ஏற்பட்டு உள்ளது. உலகுக்கு அமுதூட்டும் உமையை அன்னபூரணியாகக் கண்டவர்கள் அல்லவா நமது முன்னோர்கள்.
"விதைக்கு இல்லாது விற்பது கூடாது" என்பது வேளாண்மை செய்பவருக்கான பழமொழி. அதற்கு மாறாக விதைத்த நெல்லையே விருந்தாக்கி மகிழ்ந்த வேளாளரும் உண்டு.
இளையாங்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். பயிர்த்தொழில செய்யும் வேளாளர் குலத்தவர். செல்வச் செழிப்புடன் சிறப்புடன் வாழ்ந்து வந்தவர். அடியவருக்கு அன்னம் பாலிப்பதே அவர் தம் முழுநேரப்பணி. இப்பணிக்குத் தக்கத் துணையாக நின்றவர் இவருடைய துணைவியார். இவர்கள் இட்ட உணவை உண்டவர்களின் மனமகிழ்வே தொட்டனைத்து ஊறும் மணற்கேணியெனப் பெருஞ் செல்வமாய் இவரிடம் பெருகியது. அடியவர்க்கு சோறிடுவதே பெரும் தொண்டு எனக் கருதி வாழ்ந்து வந்தார். திருமகள் இவர் தலைமகள் ஆனாள். மலையெனக் குவிந்த செந்நெல் கண்டு, விருந்தினரைப் போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழும் இவர் நிலத்தில் நெல் விதைக்காமலே விளையும் போலும் எனப் போற்றினர் ஊரார்.
"வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்"
(குறள்)
இவரைச் சோதிக்க எண்ணினான் அந்த ஜோதி வடிவானவன். சோதனை வரும் போது தானே சாதனை வரும். "சோதனை வரும் முன்னே, சாதனை வரும் பின்னே" என்பது புதுமொழி. இறைவன் மாறனாரை விட்டு திருமகளை விலகிடச் செய்தார் ஏன்?
அவர் வறுமையிலும் செம்மையாக அன்னதானம் செய்யும் பாங்கை உலகுக்கு உணர்த்த.
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லார்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"
என்ற மூதுரைக்கிணங்க வறுமையால் கெட்டாலும் மாறனாரின் மேன்மையின் திறத்தை விண்ணவரும் கண்டு வியந்திடச் செய்ய அவரைச் சோதிக்க நாள் குறிக்கிறான் அந்த ஜோதி வடிவானவன்.
செல்வம் மகிமை அனைத்தும் "செல்வோம்" என மெல்ல மெல்லக் குறைய, கைப்பொருள் விற்றும், கடன் வாங்கியும் அன்னம் படைக்கிறார். அவர் வளம் சுருங்கினும் மனம் சுருங்கவில்லை. வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்தத் தம்பதியர் தம் வயிற்றுப் பசிக்கே உணவற்ற நிலை. தம் நெஞ்சில் கசியும் ஈரம் கொண்டு தம் வயிற்றில் எரியும் பசித்தீயை அணைக்க முயன்று சோர்கின்றனர்.
ஒரு நாள் இரவு, இறைவன் தன் திருவிளையாடலை அரங்கேற்ற ஆரம்பித்தான். பெருமழை கொட்டியது. அவன் விரிசடையென கருமேகம் சூழ, அவன் கடைக்கண் பார்வையென மின்னல் வெட்ட, அவன் கை உடுக்கை ஒலி போன்று இடி முழங்கி அவன்கருணை போன்று மழை கொட்டியது. அவன் சூடிய கங்கையென வெள்ளப் பெருக்கு. இறைவன் சிவனடியான் வேடம் புனைந்து மாறனார் இல்லம் வருகிறார். பசி எனக் குரல் கொடுக்கிறார்.
தாயினைத் தேடி ஓடும் கன்றென விரைகிறார் மாறனார். கதவு திறக்கிறார். அடியவரை வரவேற்று அமரச் செய்கிறார். உலர்துகில் கொண்டு அவர் உடல் துடைக்கிறார்.
அடியவர்க்கு எப்படி அமுது இடுவது? மனைவியிடம் ஆலோசிக்கிறார். "காலையில் வயலில் விதைத்த நெல்லை அள்ளி வந்தால் சமைக்கலாம்" என்கிறாள் சமயோசிதமாக. "நல்ல மனைவி நன் மந்திரி என்பதை மெய்ப்பித்தாய்" என்று உவகை கொண்டார்.
மனைவி சொல்லை மந்திரமாகக் கொண்டு விதைத்த நெல்லை சேகரிக்க விரைகிறார். கும்மிருட்டு வேளையிலும் அவர் உள்ஓளி கோடாக வழிகாட்டுகிறது. நெல்லை அள்ளி சேறு போக அலசி மனைவியிடம் தருகிறார். விறகு? எனத் தயங்க வீட்டின் ஒரு பகுதியை வெட்டி விறகாகத் தருகிறார். கொல்லையில் படர்ந்த கீரை வகைகள் கறியமுது செய்து, ஈர நெல்லை வறுத்துக் குத்தி சோறாக்கித் தலை வாழை இலையிட்டு அடியவரை அழைக்கிறார் மாறனார். உறங்குவது போன்று நடித்த இறைவன் சிரிக்கிறான். ஜோதி வடிவாகக் காட்சி அளிக்கிறான். திகைக்கின்றனர் தம்பதியர்.
பின்னர் இடப வாகனத்தில் உமையோடு காட்சி அளிக்கிறான். தேவர்கள் பூமாரி பொழிய இறைவன் புகழ்மாரி பொழிகிறான். "மாறா ! விண்ணவர் உண்ணும் அமுதமும் நீபடைத்த அமுதுக்கு ஈடாகாது. இந்த மண்ணுலகு உள்ளவரை உன் புகழ் நிலைக்கும். நீ உன் துணையோடு என்னுலகு அடைவாயாக. அங்குச் சங்க நிதி - பதுமநிதி கையில் ஏந்திய குபேரன் உன்னை வரவேற்று உன் மொழி கேட்டு உன் பணி செய்வான் என அருளி மறைகிறான்.
"செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு"
(குறள்)
திருக்குறட் செல்வர்-3
பசிப்பினி தீர்த்துவிட்டப்பகலவன்
பசி!
இது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. இதன் வலிமையை உணர்ந்தே "தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினையே அழித்திடுவோம்" என்று பாரதி முழைங்கினான் வயிற்றில் பசித்தீ பற்றி எரியும் போது பக்திக்கனல் ஏற்படாது என்று உணர்ந்த வள்ளலார் அனணயா அடுப்பை மூட்டிப் பசித்தீ அனணத்தார். பசி வந்திடப் பத்தும் பறந்து போவும் என்பதே பழமொழி.
எனவேதான் அன்னதானம் பற்றி அனைத்து மதங்களும் வெவ்வேறு நிலையில் போதிக்கின்றன. நதிகள் பிறக்குமிடம் பலவானாலும் கலக்குமிடம் கடல்தானே? அதுபோல சமயங்கள் வேறு வேறு ஆனாலும் பசிப்பினி தீர்க்கும் விஷயத்தில் அனைத்து சமயங்களுமே ஒன்றாக சங்கமிக்கின்றன.உணவுப் பொருள் தட்டுபாடு இல்லாத போது அனனவரின் பசியையும் ஆற்றலாம் தட்டுப்பாடு மிகுந்த பஞ்சகாலத்தில் கிடைப்பதை தனக்கே சேமித்து வைத்துக் கொள்ளவே மனம் வினழயும். மனம் உயர்ந்தவர்க்ளால் மட்டுமே இருப்பதை அனைவருக்கும் கொடுக்கும் மனம் வரும் அப்படி மனம் உயர்ந்த மகாணுபாவன் பற்றிக் காண்போமா?
ஆரூர்!
சுந்தர் பரவை நாச்சியாருடன் வாழ்ந்த தலம். இவருடைய ஆரூயிர் நண்பர் குண்டையூர் கிழார்.ஆண்டு தோறும் சுந்தரருக்கு நெல்லும் பருப்பும் அனுப்பி வைப்பார். சில ஆண்டுக்ளாக வறட்சி. விளைச்சல் குறைவு. இருப்பதை சுந்தரருக்கு அனுப்பி சமாளித்து வந்தார். இவருடைய பக்தியையும்.சுந்தரரின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்த இறைவன் திரு உளம் கொண்டான்.கடும் வறட்சி பிடிதானியம் கூட விளையவில்லை. வேதனையுடன் கோளிலி(திருக்குவளை) இறைவனிடம் முறையிடுகிறார்.இறைவன் குபேரன் மூலமாக குண்டையூர் முழுதும் நெல்லை மலைபோல் குவிக்கஸ் செய்கிறான், மலைக்கிறார் குண்டையூர்க்கிழார்.
இதனை எப்படி ஆருர் கொண்டு சேர்ப்பது என்று சுந்தரருக்குஸ் சேதி சொல்ல விரைகிறார். அதே நேரம் சுந்தரர் கனவில் தோன்றிய எம்பெருமான் குண்டையூரில் நெல்மலை என்று கூறிமறைகிறான். சுந்தரர் குண்டையூர் விரைகிறார். நண்பர்கள் இருவரும் வழியிலேயே சந்திதுக் குண்டையூர் வருகின்றனர். அந்த அடிமுடிகாணாதவன் அருளிய நெல்மலையை அண்ணார்ந்து பார்த்துக் கழுத்து நோகின்றனர் இருவரும். பார்த்தாலே கழுத்துவலி.இவைகளைச்சுமக்க என்ன வழி என்று யோசிக்கிறார். கோளிலி ஆலயம் அடைகிறார்.
கோளிலி எம்பெருமான்-குண்டையூரில்
சில நெல்லு பெற்றேன்
ஆளிலை எம்பெருமான்-அவை
அட்டித் தரப்பணியே
என்று பாடுகிறார். எமது பூத கணங்கள் ஆருர்கொண்டு சேர்க்கும் என்று அருளுகிறார்.இது இன்றும் திருவிழாவாக நடைபெறுகிறது.
புலர்ந்தது காலை! ஆருர் வீதி எங்கும் நெல்மலைகள். சுந்தரர் மனைவியிடம் கூறுகிறார். அவரவர் வீட்டருகில் இருக்கும் நெல்மலையை அவரவரே எடுத்துக் கொள்ளலாம் என்று பறையறிவிக்கப் பணிகிறார். மக்கள் பசிப்பிணி நீங்கி பரவசம் அடைகின்றனர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்)
திருக்குறட் செல்வர்-4
பகைவனுக்கும் அருளிய நன்நெஞ்சர்
பகை!
இந்த இரண்டெழுத்துச் சொல்லால் அழிந்த நாடுகள் எத்தனை? முறிந்த உறவுகள் எத்தனை? சிதைந்த குடும்பங்கள் எத்தனை? எத்தனை? பகைமை தொடர்கதையாவதின் விளைவே இது. இந்தத் தொடர்கதை தொடராதிருக்க என்ன வழி இப்பகை உணர்வை வேறோடு மாய்க்க மாற்று வழி என்ன. அன்புதான் மாற்று வழி. மாற்றம் ஏற்படுத்தும் வழி.
"பகையாளி குடியை உறவாடிக்கெடு" என்பது பழமொழி. அதாவது பகைவனிடம் நட்பு கொண்டது போல நடித்து அவன் குடியைக் கெடுக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றனர். அப்படி உறவாடிக் கெடுத்த நம் குடியை வெறொருவர் உறவாடிக் கெடுக்கமாட்டாரா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, என்பதும் பழமொழி தானே? நாம் செய்யும் காரியம் காரணமாக மாறி நம்மைக் கெடுக்கும் என்பதே உண்மை. இதனையே என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பகையாளி குடியுடன் உறவாடிப் பகையைக் கெடு என்பதே உண்மையான பழமொழி. அதன் அர்த்தம் மாறி அனர்த்தமாகக் கூறப்பட்டு வருகிறது. எனவே பகை தொடர்கதையாகிறது. இந்தத் தொடர்கதைக்கு முடிவுரைதான் என்ன? முடிவுரை மட்டுமல்ல - முகவுரையும் தருகிறான் அந்த முண்டாசுக் கவிஞன்.
"பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான்
- பாரதி"
பகையை வெல்லும் வெற்றி அன்று மட்டும் அவனுக்கு மட்டும் இன்பம் பயப்பது. பகைவனுக்கு அருளுவதால் ஏற்படும் வெற்றி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது. ஆம் ! மனிதனும் தெய்வமாகலாம்!! பகைவனுக்கு அருளும் போது!!! அப்படிப் பகைவனையும் பரமசிவன் வடிவாகவே கண்டவர் ஒருவர்.
சேது நாட்டின் தலைநகர் திருக்கோவிலூர். அங்கு மலாடர் மரபில் வந்த மன்னன் ஒருவன் வாழ்ந்து நன்னெறியுடன் ஆண்டு வந்தான். மிகச் சிறந்தவீரன். வெற்றிகள் பல கண்டவன். சிவநேசச்செல்வன். சிவனடியார்களின் திருவுருவே மெய்ப் பொருள் என்று நம்பியவன் சிவனடியார்களுக்குப் பண் செய்து மகிழ்ந்தவன் அவர்களின் திருவுருவே மெய்ப்பொருள் என்று கருதியதால் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கப்பட்டார்.
இதனிடையே முத்தநாதன் என்ற பகை மன்னன் சேது நாட்டை வெற்றி கொள்ள விரும்பினான். பலமுறை போரிட்டும் - பலனில்லை. தொடர்ந்து தோல்வியே கண்டான். சேது நாட்டின் வளம் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது. நேர் வழியில் கிடைக்காத வெற்றியை குறுக்கு வழியில் அடைய முடிவு செய்தான். என்ன செய்வது? குறுகியபுத்தி உள்ளவன் தேர்வு செய்வது குறுக்கு வழியைத்தானே?
குறுக்கு வழியில் வாழ்வு தேடிட கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு மனிதன் ஆனான் முத்தநாதன். குணத்திற்கு ஏற்ப திருட்டுத்தனமாய் ஒரு திட்டம் தீட்டுகிறான். அதன்படி சிவனடியார் வேடம் பூண்டு திருக்கோவிலூர் அடைகிறான். வேடம் தந்த துணிவில் அந்தப்புர வாசல் வரை வருகிறான். காவல் காக்கும் தத்தன் தடுக்கிறான். உறங்கும் வேளை என உரைக்கிறான். மன்னருக்கு வீடுபேறு அளிக்கவல்ல மந்திரம் உபதேசிக்க வந்துள்ளேன் தடுக்காதே எனக் கூறி உள்ளே நுழைகிறான்.அரசி எழுப்ப மன்னன் துடித்து எழுகிறான். தலை வணங்கி வரவேற்கிறான். தங்கள் வருகையின் நோக்கம் என்ன என்று வாஞ்சையுடன் கேட்கிறான்.
இறைவனே இயற்றிய ஆகமநூல் என்னிடம் உள்ளது, வேறு எங்கும் இல்லாத நூல், அதனை உனக்குப் போதிக்கவே வந்தேன். அதைத் தனிமையில் உபதேசிக்க வேண்டும் என்கிறான். குறிப்பறிந்து அரசி அகலுகிறாள்.
தான் பணிந்து வணங்கிக் கண்மூடி அமர்ந்து பாடம் கேட்க ஆயுத்தமாகிறார் மெய்ப்பொருளார். ஓலைச் சுவடியில் மறைத்து வைத்திருந்த வாளால் ஓங்கி வெட்டுகிறான் முத்தநாதன். அப்போதும் அவனது தவ வேடமே மெய்ப்பொருள் என வணங்கித்தானே வென்றவர் ஆகிறார் மெய்ப்பொருளார்.
தத்தன் சந்தேகத்தோடு உள்ளே நோக்க நடந்த விபரீதம் புரிகிறது. முத்தநாதனை வேட்டப் பாய்கிறான்.தடுக்கிறார் மெய்ப்பொருளார். இவரை யாதொரு இடையூறும் இன்றி அனுப்பி வைப்பாய் எனக் கூறுகிறார். செய்தி அறிந்து ஓடி வந்த வீரர்களை தடுக்கிறார் தத்தன். மன்னன் ஆணைப்படி இவரை பாதுகாப்பாக நகர் எல்லையில் கொண்டு விட வேண்டும் என்று கூறி அதன்படியே செய்கிறான். அனுப்பித்த செய்தி கூறுகிறான் மன்னனிடம். செய்தி கேட்டு சிந்தை குளிர்கிறார் மெய்ப்பொருளார். தத்தனை வாழ்த்துகிறார்.
அழுது அரற்றும் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார். திருநீற்றுச் செல்வர்களைப் பேணிப் பாதுகாக்கப் பணிக்கிறார். தன் மன அரங்கில் நடமிடும் தில்லைக் கூந்தனைத் தியானிக்கிறார். தில்லைக் கூத்தன் தரிசனம் தந்து தனது திருவடி நிழலும் தருகிறான்.
"கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார்கோள்"
திருக்குறட் செல்வர்-5
சாதிக்க சாதி தடையில்லை!
சாதி!
ஆரம்ப காலத்தில் தொழில் நிமித்தமாக ஏற்பட்டப் பிரிவினைகள் காலப் போக்கில் வேற்றுமைக்கு வித்திட்டது. இதன் காரணமாகப் பல்வேறு பிரிவினைகள். அதன் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள். நமது இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவரே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அம்பேத்கார்தான். எனவேதான் பாரதி பாடினான்.
சாதிகள் இல்லையடிப் பாப்பா -குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய உடையோர் மேலோர்
இட்டோர் பெரியோர். இடாதோர் இழிகுலத்தோர் என ஔவையார் கூறினார். மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஹரிஜனங்கள் என்றே அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்றே குறிப்பிட்டார்.
மேலும், ஆண்டான் - அடிமை, தொழிலாளி - முதலாளி, ஏழை - பணக்காரன், படித்தவன் - பாமரன் என்ற பாகுபாடுகள் வேறு மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. இந்த சாதிகள் நமக்கு உணர்த்துவது என்ன?
தடைகளை மீறி சாதிக்கப் பிறந்தவன் என்று அறிவுறுத்தும் அடையாளமே சாதிப்பாகுபாடுகள்.
இதை உணர்ந்தவர் சாதித்தனர். சாதியைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தனர். முன்னுதாரணமாய்த் திகழ்ந்தனர். அப்படி சாதித்து உயர்ந்த சாதனையாளரைக் காண்போமா?
ஆதனூர்!
இங்கு புலைச்சேரியில் வாழ்ந்தவர் நந்தனார். இறைவன் மீது இணையில்லா நாட்டம் கொண்டவர். இருந்தும் ஆலய தரிசனம் செய்ய அக்காலத்தில் தடை. இருப்பினும் தன் நிலைக்கு ஏற்ப மத்தளம் - பேரிகை போன்ற இசைக்கருவிகளுக்குத் தோலும் - யாழ் - வீணை போன்ற இசைக்கருவிகளுக்கு நரம்பும் - சிவ பூஜைக்குக் கோரோசனையும் வழங்கி வந்தார் இதைப்பல கோவில்களுக்கு அளித்து ஆனந்தக் களிப்பு அடைந்தார்.
ஒரு சமயம் திருப்புங்கூர் ஆலயம் சென்று வழிபட ஆசை கொண்டார். ஆலயம் சென்றார். இருப்பினும் சாதிக் கொடுமை காரணமாக வெளியே நின்றே தரிசிக்கும் நிலை. நந்தி மறைக்க கண்கள் பனிக்கிறார். பசு வானைத்தரிசிக்க முடியாமல் இறைவன் சற்றே விலகி இரும்பிள்ளாய் என்று நந்திக்கு ஆணையிட நந்தி விலகி நந்தனார் கண்குளிர தரிசிக்கிறார். இன்றும் அங்கு நந்தி சற்று விலகியே காட்சி அளிக்கிறது சாட்சியாக. அங்கு திருக்குளம் செப்பனிடுகிறார். பின் பல ஆலயங்கள் தரிசிக்கிறார் வெளியில் இருந்தபடியே!
தில்லைக் கூத்தனைத் தரிசிக்க ஆவல் கொள்கிறார். பண்ணையார் பல்வேறு தடைகள் செய்கிறார். "நாளைப் போவேன்" என்று நாள்தோறும் தம் மனதை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார். எனவே இவருடைய பெயரே மறைந்து "நாளைப் போவார்" என்று கேலியாக அழைக்கப்பட்டார். ஒருநாள் துணிந்து புறப்படுகிறார். தில்லையின் எல்லையை அடைகிறார். எல்லையில்லாப் பரவசத்துடன் நகரை வலம் வந்து மரத்தடியில் துயில்கிறார். கனவில் ஈசன் காட்சி அளிக்கிறான். "உன் சாதிப்பிழை நீங்க தீக்குளித்து சாதிப்பாயாக" என்று அருளி மறைகிறான். அதே போல் தில்லைவாழ் அந்தணர் அனைவரின் கனவிலும் தோன்றி நந்தன் தீக்குளிக்க ஏற்பாடு செய்யும்படி பணிக்கிறார்.
பொழுது விடிந்தது. தெற்கு கோபுரவாயில் அருகே தீ வளர்க்கப்பட்டது. அண்ணலைத் தொழுதபடி தீயில் இறங்குகிறார் நந்தனர். புடம் போட்ட பொன்னாக ஜொலித்து வெளிப்படுகிறார். தேவர்கள் பூமாரி பொழிய அந்தணர் அதிசயிக்கின்றனர். கைகூப்பி ஆலயத்துள் அழைத்துச் செல்கின்றனர். பொன்னம்பலம் தரிசித்து சோதியில் கலக்கிறார். சாதியை வென்று சாதித்த நந்தனார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-குறள்.
திருக்குறட் செல்வர் - 6
பெரியாரைத்துணையாய் கொண்டவர்
பெரியோர்!
வயதில் மட்டுமல்ல; அறிவு ஆற்றல் மிகக் கொண்டவர்களும் பெரியவர்களே. அவர்கள் வழி காட்டுதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும். இதையேத் துணைவி என்று கூறுகிறோம். உதாரணமாக மாகபாரதத்தில் ஒரு செய்தி.
குருஷேத்திர யுத்தம் முடிவாகி விட்டது. துரியோதனனும், அர்ச்சுனனும் உதவிகேட்டுக் கண்ணனைக் காணச் செல்கின்றனர். அரிதுயிலில் இருந்தான் கண்ணன். காலடியில் அமர்ந்தான் அர்ஜீனன். தலைமாட்டில் அமர்ந்தான் துரியோதனன். மெல்லக் கண் மலர்கிறான் கண்ணன். எல்லாம் அறிந்த அவன் எதுவும் தெரியாதது போல் "என்ன விஷயம்' என்று கேட்கிறான். எங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்கின்றனர் இருவரும். "என்னுடைய அனைத்துச் சேனைகளும் ஒருவருக்கு. ஆயுதம் எடுக்காத நான் மட்டும் ஒருவருக்கு எது வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யுங்கள்". முதலில் பார்த்த அர்ஜீனனுக்கு முன்னுரிமை என்கின்றான் கண்ணன் அளப்பரிய சேனையை அர்ஜீனன் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று துரியோதனனுக்குப்பயம். "கண்ணா நீ மட்டும் எனக்குத் துணையாக நின்றால் போதும்" என்கிறான் அர்ஜீனன். சேனை கிடைத்ததில் மகிழ்கிறான் துரியோதனன். அப்புறம் என்ன?
கண்ணன் துணை நின்ற பாண்டவர் வென்றனர் - துரியோதனன் கூட்டம் வீழ்ந்தது. அதுபோன்று பெரியாரைத் துணை கொண்டவரின் மாண்ட மகன் மீண்ட கதைதெரியுமா?
அப்பூதி அடிகள்!
இவர் திங்களுரில் வாழ்ந்தவர். நாவுக்கரசர் மீது மாளாக் காதல் கொண்டவர். நேரில் கண்டதில்லை. நாவுக்கரசர் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அவருடைய வியாபாரம் - அன்னதானம் -தண்ணீர்பந்தல் அனைத்துக்கும் நாவுக்கரசரின் நாமம். பிள்ளைகளுக்கு மூத்தத் திருநாவுக்கரசு - இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். ஒரு நாள் நாவுக்கரசர் திங்களூ வந்தார் - தன் பெயர் எங்கும் வழங்குவதைக் கண்டு அதிசயித்து விசாரிக்கிறார் ஊர்மக்கள் அப்பூதி அடிகளை அறிமுகப் படுத்துகின்றனர். நாவுக்கரசர்பெயர் ஏன் என்று வினவுகிறார். அவருக்கு அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறார்?.
வெகுண்டு எழுகிறார் அப்பூதி அடிகள். வயதில் பெரியவர் என்ற காரணத்திற்காக மட்டுமே உம்மை மன்னிக்கிறேன். எனது ஆதர்சதுணையான நாவுக்கரசரை நிந்தித்த உம் நாவை அறுத்து இருப்பேன்" என்று கர்ஜிக்கிறார்.
"நாயேன்தான் அந்த நாவுக்கரசன்" என்று கூற, "அபச்சாரம் - அபச்சாரம்" என்று பாதம் பணிந்தார் அப்பூதி அடிகள். தன் இல்லத்திற்கு உணவு உண்ண அழைத்துச் செல்கிறார். பெரிய மகன் மூத்தத்திரு நாவுக் கரசரை இலை நறுக்கி வரும்படி பணிக்கிறார். இலை நறுக்கும் போது நாகம் தீண்ட இலையுடன் தாயிடம் வருகிறான். இலை தந்து இறக்கிறான் மகன்.
மகனைப் பெற்றோர் மறைத்து வைக்கின்றனர். துக்கத்தை உள்ளத்தில் புதைத்து வைக்கின்றனர். நாவுக்கரசரை உணவு உண்ண அழைக்கின்றனர். வந்து அமர்கிறார். உங்கள் பெரிய மகனையும் உணவு உண்ண கூப்பிடுங்கள் என்கிறார் நாவுக்கரசர்.
விபரம் கூறிக் கதறுகின்றனர் பெற்றோர். அதிர்ந்த அடிகளார் அப்பூதி அடிகளின் பக்தியை எண்ணி உருகுகிறார். நாவுக்கரசர் பதிகம் பாடுகிறார். என் அன்பனின் இடர்களை வாய் என்று கூறுகிறார். விஷம் இரங்க மகன் உயிர் பிழைக்கிறான். அனைவரும் மகிழ்கின்றனர். நமனை விரட்டிய நாவுக்கரசின் மகத்தான துணையை எண்ணி எண்ணி உருகுகின்றனர். நாமும் தான்
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளர்
குறள்
குறளின் குரல்: வாக்கு தவறாதவர்?
மாலை நேரம்: கங்கைக் கரைஓரம். மாமன்னன் சந்தனு நதிக்கரை ஓரம் மெல்ல நடைபயில்கிறான் இயற்கையின் எழிலைப் பருகியபடியே வெகுதூரம் நடக்கிறான். கரையோர மரம் செடிகளின் மீது மாலை நேர மஞ்சள் வெயில் கண்ணா மூச்சி ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மரம் செடிகளுக்குத் தங்க முலாம் பூசியது இயற்கை எனும் இளைய கன்னியின் அதிசயத் தூரிகை.
கங்கையின் நிர்மலமான நீரில் தங்க நிற மரங்களின் பிரதிபலிப்பு அது மிக நீண்ட வெண்பட்டு ஆடையில் தங்க நிற ஜரிகை வேலைப்பாடு போன்ற பிரமிப்பு இது சிருஷ்டியின் அதிசயமோ? பிரமிக்ககிறான். கூடு திரும்பும் நானாவித பட்சிகளின் சப்த ஸ்வரங்கள். சில்லென்று தழுவும் மென்காற்று, பல்வேறு பூக்களின் மணம் நாசியை நிறைக்க மெய்மறந்து நின்றான் சந்தனு.
நதிக்கரை ஓரம் நாணற்புதர் அருகே...
அழகின் மொத்த வடிவாய் ஒரு ஆரனங்கு, காந்தம் இழுபடும் இரும்பென அவள் அருகே செல்கிறான் சந்தனு. அவள் பேரழகு கண்டு பிரமித்து நிற்கிறான் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே அடைக்கலம், என்னை மணப்பாயாக என்று கேட்கிறான். சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்கிறாள் அழகி. உனக்காக எந்த நிபந்தனையும் ஏற்பேன் என்கிறான் சந்தனு. என் பூர்வீகம் பற்றிக் கேட்கக்கூடாது. எனது செயல் எதனையும் தடுக்கக்கூடாது. அது பற்றி விள்க்கம் கேட்கக் கூடாது. அப்படி நீ மீறும் போது உனைவிட்டு விலகுவேன் என்கிறாள் பூடகமாக. சம்மதம் என்று சத்தியம் செய்து அவளை மணக்கிறான். மணவாழ்வின் மாபெரும்,விளைச்சலாக அடுத்தடுத்து ஏழு ஆண்குழந்தைகள். அத்தனையையும் கங்கையில் வீசி எறிகிறாள் அவர் எட்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறக்க அதனையும் கங்கையில் வீச முற்படுகிறாள் அழகி தடுக்கிறான் மன்னன்
தாய்மை நலன் கொண்ட உனக்கு இது தகுமோ என்று ஏசுகிறான். அழகி சிரிக்கிறாள். பின்னர் பேச ஆரம்பிக்கிறாள்.
மன்னா ! நான் மானுடப் பெண் அல்ல "கங்காதேவி" அஷ்டவசுக்கள் வசிஷ்டரின் பசுவான நந்தினியைக் கவர்ந்தனர். அதன் காரணமாக பூமியில் பிறக்கும்படி சாபம் ஏற்பட்டது. என்னைத் தாயாகும்படி கேட்டுக்கொண்டனர் எனவே உன்னை மணந்து அவர்களைப் பெற்று சாபவிமோசனம் பெற வழி வகுத்தேன். பசுவைத் தொட்டு இழுத்த "பிரபாசனே" எட்டாவது குழந்தை அவன் பூமியில் நெடுங்காலம் வாழ்ந்து செயற்கரிய செயல்கள் செய்வான் என்பன் வசிஷ்டரின் வாக்கு எனவே இவனை உரிய காலத்தில் உன்னிடம் கொண்டு வந்து ஒப்படைப்பேன் என்று கூறி குழந்தையுடன் மறைகிறாள்.
ஆண்டுகள் பல ஆன பின் கல்விக் கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து தேவவிரதன் என்று பெயர் சூட்டி மன்னனிடம் ஒப்படைக்கிறாள்.
தேவ விரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி இனிதே வாழ்கிறான்.
நாட்கள் கழிகின்றன ஒரு நாள் யமுனையில் நீராடும் போது ஒரு தெய்வீக மணத்தால் ஈர்க்கப்படுகிறான் சந்தனு மன்னன். மணம் வந்த திசை நோக்கி மனம் அலைபாயச் செல்கிறான். முனிவரின் அருளால் திருமேனியில் தெய்வீக மணத்தைப் பெற்றப் பரதவகுமங்கை சத்தியவதியைக் காண்கிறான்.
என்னை மணந்துகொள் என்று மன்றாடுகிறான் தந்தையைக் கேளுங்கள் என்கிறாள்.
பரிமளசுகந்தியான சத்யவதியின் தந்தை விதித்த நிபந்தனை. கேட்டு மன்னனின் தலை சுழல்கிறது. காதல் வசப்படவில்லையே என்ற வேதனையால் உடல் மெலிகிறான்.
விஷயம் அறிந்து தெளிகிறான் தேவ விரதன். சத்தியவதியிடம் செல்கிறான். அவள் தந்தை கேட்டபடியே சத்தியவதியின் வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடிக்காது பிரம்மச்சியம் அனுஷ்டிப்பேன் என்று உறுதி கூறுகிறான். தந்தைக்குச் சத்தியவதியை வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடித்துவைக்கிறான். ' பீஷ்வ ' என்று
போற்றி தேவர்கள் மலர்மாரி தூவுகின்றனர்.
கங்கையை மணந்து எட்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் சிற்றின்பம் நுகர்வதைத் தறக்க இயலாத தந்தைக்காகத் தான் சிற்றின்பம் பேரின்பமாகக் கருதியவன் தேவவிரதன். பீஷ்மன் என்றால் செயற்கரியசெயல் செய்பவன் என்று பொருள். இதைவிட செயற்கரிய செயல் யாரால் செய்ய இயலும்?
" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
-குறள்
திருக்குறட் செல்வர் - 2
அன்னம்
இது எல்லா உயிர்க்கும் பொதுவானது. " பசி வந்திடப் பத்தும் பறந்து போம் " என்பது பழமொழி. பத்து விதமான உயர் குணங்களைப் பறந்திடச் செய்யும் பசி தீர உணவிட்டவரை, "உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்" எனப் போற்றுகிறோம்.
எனவே தான் பாரதி "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என கர்ஜிக்கிறான். பண்டைக் காலத்தில் மன்னர்கள் அன்னசத்திரம் அமைத்துப் பசிப்பிணி தீர்த்தனர். மணிமேகலை அமுதசுரபி கொண்டு அமுது படைத்ததை அறிகிறோம். இதிகாசகாலத்தில் குருஷேத்திர யுத்தம் நடந்த போது சேரமன்னன்
உதியன் போரிடும் வீரர்களுக்கு சோறிடும் சேவை செய்தான். அதன் காரணமாகப் "பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்" எனப் புகழ் பெற்றான். என வரலாறு கூறுகிறது அவன் அன்னதானச் சிறப்பை.
இந்த அன்னதானச் சிறப்பினை உணர்ந்த இராமலிங்க அடிகளார் வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். பற்றற்ற வள்ளலார் பற்ற வைத்த நெருப்பு மக்களின் பசித்தீயை அணைத்தது. இப்படி சிறப்பாகத் தமிழ் மண்ணில் நடந்து வந்த அன்னதானம் இடைக்காலத்தில் சற்றே குன்ற ஆரம்பித்தது.
ஆயினும் தற்போது புதுப்பொலிவுடன் அன்னதானம் சிறப்புடன் நடைபெறுகிறது. ஆலயங்களுக்குப் புதியதோர் லயம் ஏற்பட்டு உள்ளது. உலகுக்கு அமுதூட்டும் உமையை அன்னபூரணியாகக் கண்டவர்கள் அல்லவா நமது முன்னோர்கள்.
"விதைக்கு இல்லாது விற்பது கூடாது" என்பது வேளாண்மை செய்பவருக்கான பழமொழி. அதற்கு மாறாக விதைத்த நெல்லையே விருந்தாக்கி மகிழ்ந்த வேளாளரும் உண்டு.
இளையாங்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். பயிர்த்தொழில செய்யும் வேளாளர் குலத்தவர். செல்வச் செழிப்புடன் சிறப்புடன் வாழ்ந்து வந்தவர். அடியவருக்கு அன்னம் பாலிப்பதே அவர் தம் முழுநேரப்பணி. இப்பணிக்குத் தக்கத் துணையாக நின்றவர் இவருடைய துணைவியார். இவர்கள் இட்ட உணவை உண்டவர்களின் மனமகிழ்வே தொட்டனைத்து ஊறும் மணற்கேணியெனப் பெருஞ் செல்வமாய் இவரிடம் பெருகியது. அடியவர்க்கு சோறிடுவதே பெரும் தொண்டு எனக் கருதி வாழ்ந்து வந்தார். திருமகள் இவர் தலைமகள் ஆனாள். மலையெனக் குவிந்த செந்நெல் கண்டு, விருந்தினரைப் போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழும் இவர் நிலத்தில் நெல் விதைக்காமலே விளையும் போலும் எனப் போற்றினர் ஊரார்.
"வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்"
(குறள்)
இவரைச் சோதிக்க எண்ணினான் அந்த ஜோதி வடிவானவன். சோதனை வரும் போது தானே சாதனை வரும். "சோதனை வரும் முன்னே, சாதனை வரும் பின்னே" என்பது புதுமொழி. இறைவன் மாறனாரை விட்டு திருமகளை விலகிடச் செய்தார் ஏன்?
அவர் வறுமையிலும் செம்மையாக அன்னதானம் செய்யும் பாங்கை உலகுக்கு உணர்த்த.
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லார்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"
என்ற மூதுரைக்கிணங்க வறுமையால் கெட்டாலும் மாறனாரின் மேன்மையின் திறத்தை விண்ணவரும் கண்டு வியந்திடச் செய்ய அவரைச் சோதிக்க நாள் குறிக்கிறான் அந்த ஜோதி வடிவானவன்.
செல்வம் மகிமை அனைத்தும் "செல்வோம்" என மெல்ல மெல்லக் குறைய, கைப்பொருள் விற்றும், கடன் வாங்கியும் அன்னம் படைக்கிறார். அவர் வளம் சுருங்கினும் மனம் சுருங்கவில்லை. வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்தத் தம்பதியர் தம் வயிற்றுப் பசிக்கே உணவற்ற நிலை. தம் நெஞ்சில் கசியும் ஈரம் கொண்டு தம் வயிற்றில் எரியும் பசித்தீயை அணைக்க முயன்று சோர்கின்றனர்.
ஒரு நாள் இரவு, இறைவன் தன் திருவிளையாடலை அரங்கேற்ற ஆரம்பித்தான். பெருமழை கொட்டியது. அவன் விரிசடையென கருமேகம் சூழ, அவன் கடைக்கண் பார்வையென மின்னல் வெட்ட, அவன் கை உடுக்கை ஒலி போன்று இடி முழங்கி அவன்கருணை போன்று மழை கொட்டியது. அவன் சூடிய கங்கையென வெள்ளப் பெருக்கு. இறைவன் சிவனடியான் வேடம் புனைந்து மாறனார் இல்லம் வருகிறார். பசி எனக் குரல் கொடுக்கிறார்.
தாயினைத் தேடி ஓடும் கன்றென விரைகிறார் மாறனார். கதவு திறக்கிறார். அடியவரை வரவேற்று அமரச் செய்கிறார். உலர்துகில் கொண்டு அவர் உடல் துடைக்கிறார்.
அடியவர்க்கு எப்படி அமுது இடுவது? மனைவியிடம் ஆலோசிக்கிறார். "காலையில் வயலில் விதைத்த நெல்லை அள்ளி வந்தால் சமைக்கலாம்" என்கிறாள் சமயோசிதமாக. "நல்ல மனைவி நன் மந்திரி என்பதை மெய்ப்பித்தாய்" என்று உவகை கொண்டார்.
மனைவி சொல்லை மந்திரமாகக் கொண்டு விதைத்த நெல்லை சேகரிக்க விரைகிறார். கும்மிருட்டு வேளையிலும் அவர் உள்ஓளி கோடாக வழிகாட்டுகிறது. நெல்லை அள்ளி சேறு போக அலசி மனைவியிடம் தருகிறார். விறகு? எனத் தயங்க வீட்டின் ஒரு பகுதியை வெட்டி விறகாகத் தருகிறார். கொல்லையில் படர்ந்த கீரை வகைகள் கறியமுது செய்து, ஈர நெல்லை வறுத்துக் குத்தி சோறாக்கித் தலை வாழை இலையிட்டு அடியவரை அழைக்கிறார் மாறனார். உறங்குவது போன்று நடித்த இறைவன் சிரிக்கிறான். ஜோதி வடிவாகக் காட்சி அளிக்கிறான். திகைக்கின்றனர் தம்பதியர்.
பின்னர் இடப வாகனத்தில் உமையோடு காட்சி அளிக்கிறான். தேவர்கள் பூமாரி பொழிய இறைவன் புகழ்மாரி பொழிகிறான். "மாறா ! விண்ணவர் உண்ணும் அமுதமும் நீபடைத்த அமுதுக்கு ஈடாகாது. இந்த மண்ணுலகு உள்ளவரை உன் புகழ் நிலைக்கும். நீ உன் துணையோடு என்னுலகு அடைவாயாக. அங்குச் சங்க நிதி - பதுமநிதி கையில் ஏந்திய குபேரன் உன்னை வரவேற்று உன் மொழி கேட்டு உன் பணி செய்வான் என அருளி மறைகிறான்.
"செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு"
(குறள்)
திருக்குறட் செல்வர்-3
பசிப்பினி தீர்த்துவிட்டப்பகலவன்
பசி!
இது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. இதன் வலிமையை உணர்ந்தே "தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினையே அழித்திடுவோம்" என்று பாரதி முழைங்கினான் வயிற்றில் பசித்தீ பற்றி எரியும் போது பக்திக்கனல் ஏற்படாது என்று உணர்ந்த வள்ளலார் அனணயா அடுப்பை மூட்டிப் பசித்தீ அனணத்தார். பசி வந்திடப் பத்தும் பறந்து போவும் என்பதே பழமொழி.
எனவேதான் அன்னதானம் பற்றி அனைத்து மதங்களும் வெவ்வேறு நிலையில் போதிக்கின்றன. நதிகள் பிறக்குமிடம் பலவானாலும் கலக்குமிடம் கடல்தானே? அதுபோல சமயங்கள் வேறு வேறு ஆனாலும் பசிப்பினி தீர்க்கும் விஷயத்தில் அனைத்து சமயங்களுமே ஒன்றாக சங்கமிக்கின்றன.உணவுப் பொருள் தட்டுபாடு இல்லாத போது அனனவரின் பசியையும் ஆற்றலாம் தட்டுப்பாடு மிகுந்த பஞ்சகாலத்தில் கிடைப்பதை தனக்கே சேமித்து வைத்துக் கொள்ளவே மனம் வினழயும். மனம் உயர்ந்தவர்க்ளால் மட்டுமே இருப்பதை அனைவருக்கும் கொடுக்கும் மனம் வரும் அப்படி மனம் உயர்ந்த மகாணுபாவன் பற்றிக் காண்போமா?
ஆரூர்!
சுந்தர் பரவை நாச்சியாருடன் வாழ்ந்த தலம். இவருடைய ஆரூயிர் நண்பர் குண்டையூர் கிழார்.ஆண்டு தோறும் சுந்தரருக்கு நெல்லும் பருப்பும் அனுப்பி வைப்பார். சில ஆண்டுக்ளாக வறட்சி. விளைச்சல் குறைவு. இருப்பதை சுந்தரருக்கு அனுப்பி சமாளித்து வந்தார். இவருடைய பக்தியையும்.சுந்தரரின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்த இறைவன் திரு உளம் கொண்டான்.கடும் வறட்சி பிடிதானியம் கூட விளையவில்லை. வேதனையுடன் கோளிலி(திருக்குவளை) இறைவனிடம் முறையிடுகிறார்.இறைவன் குபேரன் மூலமாக குண்டையூர் முழுதும் நெல்லை மலைபோல் குவிக்கஸ் செய்கிறான், மலைக்கிறார் குண்டையூர்க்கிழார்.
இதனை எப்படி ஆருர் கொண்டு சேர்ப்பது என்று சுந்தரருக்குஸ் சேதி சொல்ல விரைகிறார். அதே நேரம் சுந்தரர் கனவில் தோன்றிய எம்பெருமான் குண்டையூரில் நெல்மலை என்று கூறிமறைகிறான். சுந்தரர் குண்டையூர் விரைகிறார். நண்பர்கள் இருவரும் வழியிலேயே சந்திதுக் குண்டையூர் வருகின்றனர். அந்த அடிமுடிகாணாதவன் அருளிய நெல்மலையை அண்ணார்ந்து பார்த்துக் கழுத்து நோகின்றனர் இருவரும். பார்த்தாலே கழுத்துவலி.இவைகளைச்சுமக்க என்ன வழி என்று யோசிக்கிறார். கோளிலி ஆலயம் அடைகிறார்.
கோளிலி எம்பெருமான்-குண்டையூரில்
சில நெல்லு பெற்றேன்
ஆளிலை எம்பெருமான்-அவை
அட்டித் தரப்பணியே
என்று பாடுகிறார். எமது பூத கணங்கள் ஆருர்கொண்டு சேர்க்கும் என்று அருளுகிறார்.இது இன்றும் திருவிழாவாக நடைபெறுகிறது.
புலர்ந்தது காலை! ஆருர் வீதி எங்கும் நெல்மலைகள். சுந்தரர் மனைவியிடம் கூறுகிறார். அவரவர் வீட்டருகில் இருக்கும் நெல்மலையை அவரவரே எடுத்துக் கொள்ளலாம் என்று பறையறிவிக்கப் பணிகிறார். மக்கள் பசிப்பிணி நீங்கி பரவசம் அடைகின்றனர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்)
திருக்குறட் செல்வர்-4
பகைவனுக்கும் அருளிய நன்நெஞ்சர்
பகை!
இந்த இரண்டெழுத்துச் சொல்லால் அழிந்த நாடுகள் எத்தனை? முறிந்த உறவுகள் எத்தனை? சிதைந்த குடும்பங்கள் எத்தனை? எத்தனை? பகைமை தொடர்கதையாவதின் விளைவே இது. இந்தத் தொடர்கதை தொடராதிருக்க என்ன வழி இப்பகை உணர்வை வேறோடு மாய்க்க மாற்று வழி என்ன. அன்புதான் மாற்று வழி. மாற்றம் ஏற்படுத்தும் வழி.
"பகையாளி குடியை உறவாடிக்கெடு" என்பது பழமொழி. அதாவது பகைவனிடம் நட்பு கொண்டது போல நடித்து அவன் குடியைக் கெடுக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றனர். அப்படி உறவாடிக் கெடுத்த நம் குடியை வெறொருவர் உறவாடிக் கெடுக்கமாட்டாரா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, என்பதும் பழமொழி தானே? நாம் செய்யும் காரியம் காரணமாக மாறி நம்மைக் கெடுக்கும் என்பதே உண்மை. இதனையே என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பகையாளி குடியுடன் உறவாடிப் பகையைக் கெடு என்பதே உண்மையான பழமொழி. அதன் அர்த்தம் மாறி அனர்த்தமாகக் கூறப்பட்டு வருகிறது. எனவே பகை தொடர்கதையாகிறது. இந்தத் தொடர்கதைக்கு முடிவுரைதான் என்ன? முடிவுரை மட்டுமல்ல - முகவுரையும் தருகிறான் அந்த முண்டாசுக் கவிஞன்.
"பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான்
- பாரதி"
பகையை வெல்லும் வெற்றி அன்று மட்டும் அவனுக்கு மட்டும் இன்பம் பயப்பது. பகைவனுக்கு அருளுவதால் ஏற்படும் வெற்றி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது. ஆம் ! மனிதனும் தெய்வமாகலாம்!! பகைவனுக்கு அருளும் போது!!! அப்படிப் பகைவனையும் பரமசிவன் வடிவாகவே கண்டவர் ஒருவர்.
சேது நாட்டின் தலைநகர் திருக்கோவிலூர். அங்கு மலாடர் மரபில் வந்த மன்னன் ஒருவன் வாழ்ந்து நன்னெறியுடன் ஆண்டு வந்தான். மிகச் சிறந்தவீரன். வெற்றிகள் பல கண்டவன். சிவநேசச்செல்வன். சிவனடியார்களின் திருவுருவே மெய்ப் பொருள் என்று நம்பியவன் சிவனடியார்களுக்குப் பண் செய்து மகிழ்ந்தவன் அவர்களின் திருவுருவே மெய்ப்பொருள் என்று கருதியதால் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கப்பட்டார்.
இதனிடையே முத்தநாதன் என்ற பகை மன்னன் சேது நாட்டை வெற்றி கொள்ள விரும்பினான். பலமுறை போரிட்டும் - பலனில்லை. தொடர்ந்து தோல்வியே கண்டான். சேது நாட்டின் வளம் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது. நேர் வழியில் கிடைக்காத வெற்றியை குறுக்கு வழியில் அடைய முடிவு செய்தான். என்ன செய்வது? குறுகியபுத்தி உள்ளவன் தேர்வு செய்வது குறுக்கு வழியைத்தானே?
குறுக்கு வழியில் வாழ்வு தேடிட கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு மனிதன் ஆனான் முத்தநாதன். குணத்திற்கு ஏற்ப திருட்டுத்தனமாய் ஒரு திட்டம் தீட்டுகிறான். அதன்படி சிவனடியார் வேடம் பூண்டு திருக்கோவிலூர் அடைகிறான். வேடம் தந்த துணிவில் அந்தப்புர வாசல் வரை வருகிறான். காவல் காக்கும் தத்தன் தடுக்கிறான். உறங்கும் வேளை என உரைக்கிறான். மன்னருக்கு வீடுபேறு அளிக்கவல்ல மந்திரம் உபதேசிக்க வந்துள்ளேன் தடுக்காதே எனக் கூறி உள்ளே நுழைகிறான்.அரசி எழுப்ப மன்னன் துடித்து எழுகிறான். தலை வணங்கி வரவேற்கிறான். தங்கள் வருகையின் நோக்கம் என்ன என்று வாஞ்சையுடன் கேட்கிறான்.
இறைவனே இயற்றிய ஆகமநூல் என்னிடம் உள்ளது, வேறு எங்கும் இல்லாத நூல், அதனை உனக்குப் போதிக்கவே வந்தேன். அதைத் தனிமையில் உபதேசிக்க வேண்டும் என்கிறான். குறிப்பறிந்து அரசி அகலுகிறாள்.
தான் பணிந்து வணங்கிக் கண்மூடி அமர்ந்து பாடம் கேட்க ஆயுத்தமாகிறார் மெய்ப்பொருளார். ஓலைச் சுவடியில் மறைத்து வைத்திருந்த வாளால் ஓங்கி வெட்டுகிறான் முத்தநாதன். அப்போதும் அவனது தவ வேடமே மெய்ப்பொருள் என வணங்கித்தானே வென்றவர் ஆகிறார் மெய்ப்பொருளார்.
தத்தன் சந்தேகத்தோடு உள்ளே நோக்க நடந்த விபரீதம் புரிகிறது. முத்தநாதனை வேட்டப் பாய்கிறான்.தடுக்கிறார் மெய்ப்பொருளார். இவரை யாதொரு இடையூறும் இன்றி அனுப்பி வைப்பாய் எனக் கூறுகிறார். செய்தி அறிந்து ஓடி வந்த வீரர்களை தடுக்கிறார் தத்தன். மன்னன் ஆணைப்படி இவரை பாதுகாப்பாக நகர் எல்லையில் கொண்டு விட வேண்டும் என்று கூறி அதன்படியே செய்கிறான். அனுப்பித்த செய்தி கூறுகிறான் மன்னனிடம். செய்தி கேட்டு சிந்தை குளிர்கிறார் மெய்ப்பொருளார். தத்தனை வாழ்த்துகிறார்.
அழுது அரற்றும் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார். திருநீற்றுச் செல்வர்களைப் பேணிப் பாதுகாக்கப் பணிக்கிறார். தன் மன அரங்கில் நடமிடும் தில்லைக் கூந்தனைத் தியானிக்கிறார். தில்லைக் கூத்தன் தரிசனம் தந்து தனது திருவடி நிழலும் தருகிறான்.
"கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார்கோள்"
திருக்குறட் செல்வர்-5
சாதிக்க சாதி தடையில்லை!
சாதி!
ஆரம்ப காலத்தில் தொழில் நிமித்தமாக ஏற்பட்டப் பிரிவினைகள் காலப் போக்கில் வேற்றுமைக்கு வித்திட்டது. இதன் காரணமாகப் பல்வேறு பிரிவினைகள். அதன் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள். நமது இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவரே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அம்பேத்கார்தான். எனவேதான் பாரதி பாடினான்.
சாதிகள் இல்லையடிப் பாப்பா -குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய உடையோர் மேலோர்
இட்டோர் பெரியோர். இடாதோர் இழிகுலத்தோர் என ஔவையார் கூறினார். மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஹரிஜனங்கள் என்றே அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்றே குறிப்பிட்டார்.
மேலும், ஆண்டான் - அடிமை, தொழிலாளி - முதலாளி, ஏழை - பணக்காரன், படித்தவன் - பாமரன் என்ற பாகுபாடுகள் வேறு மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. இந்த சாதிகள் நமக்கு உணர்த்துவது என்ன?
தடைகளை மீறி சாதிக்கப் பிறந்தவன் என்று அறிவுறுத்தும் அடையாளமே சாதிப்பாகுபாடுகள்.
இதை உணர்ந்தவர் சாதித்தனர். சாதியைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தனர். முன்னுதாரணமாய்த் திகழ்ந்தனர். அப்படி சாதித்து உயர்ந்த சாதனையாளரைக் காண்போமா?
ஆதனூர்!
இங்கு புலைச்சேரியில் வாழ்ந்தவர் நந்தனார். இறைவன் மீது இணையில்லா நாட்டம் கொண்டவர். இருந்தும் ஆலய தரிசனம் செய்ய அக்காலத்தில் தடை. இருப்பினும் தன் நிலைக்கு ஏற்ப மத்தளம் - பேரிகை போன்ற இசைக்கருவிகளுக்குத் தோலும் - யாழ் - வீணை போன்ற இசைக்கருவிகளுக்கு நரம்பும் - சிவ பூஜைக்குக் கோரோசனையும் வழங்கி வந்தார் இதைப்பல கோவில்களுக்கு அளித்து ஆனந்தக் களிப்பு அடைந்தார்.
ஒரு சமயம் திருப்புங்கூர் ஆலயம் சென்று வழிபட ஆசை கொண்டார். ஆலயம் சென்றார். இருப்பினும் சாதிக் கொடுமை காரணமாக வெளியே நின்றே தரிசிக்கும் நிலை. நந்தி மறைக்க கண்கள் பனிக்கிறார். பசு வானைத்தரிசிக்க முடியாமல் இறைவன் சற்றே விலகி இரும்பிள்ளாய் என்று நந்திக்கு ஆணையிட நந்தி விலகி நந்தனார் கண்குளிர தரிசிக்கிறார். இன்றும் அங்கு நந்தி சற்று விலகியே காட்சி அளிக்கிறது சாட்சியாக. அங்கு திருக்குளம் செப்பனிடுகிறார். பின் பல ஆலயங்கள் தரிசிக்கிறார் வெளியில் இருந்தபடியே!
தில்லைக் கூத்தனைத் தரிசிக்க ஆவல் கொள்கிறார். பண்ணையார் பல்வேறு தடைகள் செய்கிறார். "நாளைப் போவேன்" என்று நாள்தோறும் தம் மனதை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார். எனவே இவருடைய பெயரே மறைந்து "நாளைப் போவார்" என்று கேலியாக அழைக்கப்பட்டார். ஒருநாள் துணிந்து புறப்படுகிறார். தில்லையின் எல்லையை அடைகிறார். எல்லையில்லாப் பரவசத்துடன் நகரை வலம் வந்து மரத்தடியில் துயில்கிறார். கனவில் ஈசன் காட்சி அளிக்கிறான். "உன் சாதிப்பிழை நீங்க தீக்குளித்து சாதிப்பாயாக" என்று அருளி மறைகிறான். அதே போல் தில்லைவாழ் அந்தணர் அனைவரின் கனவிலும் தோன்றி நந்தன் தீக்குளிக்க ஏற்பாடு செய்யும்படி பணிக்கிறார்.
பொழுது விடிந்தது. தெற்கு கோபுரவாயில் அருகே தீ வளர்க்கப்பட்டது. அண்ணலைத் தொழுதபடி தீயில் இறங்குகிறார் நந்தனர். புடம் போட்ட பொன்னாக ஜொலித்து வெளிப்படுகிறார். தேவர்கள் பூமாரி பொழிய அந்தணர் அதிசயிக்கின்றனர். கைகூப்பி ஆலயத்துள் அழைத்துச் செல்கின்றனர். பொன்னம்பலம் தரிசித்து சோதியில் கலக்கிறார். சாதியை வென்று சாதித்த நந்தனார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-குறள்.
திருக்குறட் செல்வர் - 6
பெரியாரைத்துணையாய் கொண்டவர்
பெரியோர்!
வயதில் மட்டுமல்ல; அறிவு ஆற்றல் மிகக் கொண்டவர்களும் பெரியவர்களே. அவர்கள் வழி காட்டுதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும். இதையேத் துணைவி என்று கூறுகிறோம். உதாரணமாக மாகபாரதத்தில் ஒரு செய்தி.
குருஷேத்திர யுத்தம் முடிவாகி விட்டது. துரியோதனனும், அர்ச்சுனனும் உதவிகேட்டுக் கண்ணனைக் காணச் செல்கின்றனர். அரிதுயிலில் இருந்தான் கண்ணன். காலடியில் அமர்ந்தான் அர்ஜீனன். தலைமாட்டில் அமர்ந்தான் துரியோதனன். மெல்லக் கண் மலர்கிறான் கண்ணன். எல்லாம் அறிந்த அவன் எதுவும் தெரியாதது போல் "என்ன விஷயம்' என்று கேட்கிறான். எங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்கின்றனர் இருவரும். "என்னுடைய அனைத்துச் சேனைகளும் ஒருவருக்கு. ஆயுதம் எடுக்காத நான் மட்டும் ஒருவருக்கு எது வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யுங்கள்". முதலில் பார்த்த அர்ஜீனனுக்கு முன்னுரிமை என்கின்றான் கண்ணன் அளப்பரிய சேனையை அர்ஜீனன் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று துரியோதனனுக்குப்பயம். "கண்ணா நீ மட்டும் எனக்குத் துணையாக நின்றால் போதும்" என்கிறான் அர்ஜீனன். சேனை கிடைத்ததில் மகிழ்கிறான் துரியோதனன். அப்புறம் என்ன?
கண்ணன் துணை நின்ற பாண்டவர் வென்றனர் - துரியோதனன் கூட்டம் வீழ்ந்தது. அதுபோன்று பெரியாரைத் துணை கொண்டவரின் மாண்ட மகன் மீண்ட கதைதெரியுமா?
அப்பூதி அடிகள்!
இவர் திங்களுரில் வாழ்ந்தவர். நாவுக்கரசர் மீது மாளாக் காதல் கொண்டவர். நேரில் கண்டதில்லை. நாவுக்கரசர் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அவருடைய வியாபாரம் - அன்னதானம் -தண்ணீர்பந்தல் அனைத்துக்கும் நாவுக்கரசரின் நாமம். பிள்ளைகளுக்கு மூத்தத் திருநாவுக்கரசு - இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். ஒரு நாள் நாவுக்கரசர் திங்களூ வந்தார் - தன் பெயர் எங்கும் வழங்குவதைக் கண்டு அதிசயித்து விசாரிக்கிறார் ஊர்மக்கள் அப்பூதி அடிகளை அறிமுகப் படுத்துகின்றனர். நாவுக்கரசர்பெயர் ஏன் என்று வினவுகிறார். அவருக்கு அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறார்?.
வெகுண்டு எழுகிறார் அப்பூதி அடிகள். வயதில் பெரியவர் என்ற காரணத்திற்காக மட்டுமே உம்மை மன்னிக்கிறேன். எனது ஆதர்சதுணையான நாவுக்கரசரை நிந்தித்த உம் நாவை அறுத்து இருப்பேன்" என்று கர்ஜிக்கிறார்.
"நாயேன்தான் அந்த நாவுக்கரசன்" என்று கூற, "அபச்சாரம் - அபச்சாரம்" என்று பாதம் பணிந்தார் அப்பூதி அடிகள். தன் இல்லத்திற்கு உணவு உண்ண அழைத்துச் செல்கிறார். பெரிய மகன் மூத்தத்திரு நாவுக் கரசரை இலை நறுக்கி வரும்படி பணிக்கிறார். இலை நறுக்கும் போது நாகம் தீண்ட இலையுடன் தாயிடம் வருகிறான். இலை தந்து இறக்கிறான் மகன்.
மகனைப் பெற்றோர் மறைத்து வைக்கின்றனர். துக்கத்தை உள்ளத்தில் புதைத்து வைக்கின்றனர். நாவுக்கரசரை உணவு உண்ண அழைக்கின்றனர். வந்து அமர்கிறார். உங்கள் பெரிய மகனையும் உணவு உண்ண கூப்பிடுங்கள் என்கிறார் நாவுக்கரசர்.
விபரம் கூறிக் கதறுகின்றனர் பெற்றோர். அதிர்ந்த அடிகளார் அப்பூதி அடிகளின் பக்தியை எண்ணி உருகுகிறார். நாவுக்கரசர் பதிகம் பாடுகிறார். என் அன்பனின் இடர்களை வாய் என்று கூறுகிறார். விஷம் இரங்க மகன் உயிர் பிழைக்கிறான். அனைவரும் மகிழ்கின்றனர். நமனை விரட்டிய நாவுக்கரசின் மகத்தான துணையை எண்ணி எண்ணி உருகுகின்றனர். நாமும் தான்
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளர்
குறள்
திருக்குறட்செல்வர்!-7
நியாயத்தராசு
இரைதேடுவதோடு இறையும் தேடு என்பது ஆன்றோர் வாக்கு. நமக்கு இறை தேட வழி காட்டியவர்களில் முன்னணி வகிப்பவர்கள் அருபத்து மூவர். அவர்கள் பற்றித் திருக்குறட்செல்வர் என்ற தலைப்பில் நினைவு கூறுவோமா?
நீதி!
நிதி மிகுந்தவர்க்கு ஒரு நீதி. நிதியற்றவர்க்கு ஒரு நீதி என்பதே பொதுவானநியதி. இருந்தாலும் நீதிக்குத் தலைவணங்கி நியாயத் தராசாக நிற்பவரும் உண்டு கோணாத கோல் என்று அவருடடைய செங்கோல் சிறப்பிக்கப் படுகிறது. ஆராயாது கோவலனுக்குக் கொலைதண்டனை வழங்கி விட்டான் பாண்டிய மன்னன். கண்ணகி வந்து வழக்குரைக்க தன் நியாயத் தராசு அநியாயத் தராசாக அமைந்ததை எண்ணி வெட்கித் தன்னுயிர் ஈந்து வளைந்த செங்கோலை நிமிர்த்துகிறான் பாண்டியன். உடன் தன்னுயிர் நீத்து நிமிர்ந்த செங்கோலுக்கு மேலும் மெருகேற்றுகிறாள் பாண்டியனின் பத்தினி.
இப்படிப்பட்ட நியாயவாதிகளிடையே அநியாயவாதிகளும் உண்டு. திருச்சிராப்பள்ளித் தாயுமானசுவாமிக்கு நாகலோகத்திலிருந்து செவ்வந்திமலர் கொணர்ந்து பூஜிப்பவர் சார மாமுனிவர். ஒரு நாள் மலரின் மணம் கண்டு மனம் தடுமாறிய உறையூர்ச்சோழன் அம்மலர்களைப் பறித்துத் தன் மனைவிக்குச்சூட்டி மகிழ்கிறான் ஓலமிடுகிறார் முனிவர்.கோபம்கொண்ட இறைவன் கொற்றவன் வாழும் உறையூர் பக்கம் திரும்பி சினக்க மண்மாரிபெய்தது என்கிறது வரலாறு.
இப்படிப்பட்ட மன்னரிடையே இறைவனுக்குச்சூட வேண்டிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டிய மன்னனின் கதைத் தெரியுமா?
ஆரூர்!
மனுநீதிச்சோழன் ஆண்டமாநகரம், கன்றுக்காக மகனைத் தேர்க்காலில் இட்டு நீதிகாத்த சோழமன்னன் ஆண்ட ஊர்.இங்கு பல்லவ மன்னனின் நீதியும் நிலை பெற்றது. பல்லவ மன்னன் கழற் சிங்கன் ,வீரகழல் அணிந்தசிங்கம் போன்ற மாவீரன் என்பதால்ஏற்பட்டக் காரணப்பெயர் இவனே மூன்றாம் நந்திவர்மன் என்பர். தமிழுக்காகத் தன்னுயிர் நீத்தவனும் இவனே. இவனை வீழ்த்தவே கலம்பகம் பாடினர் கலகக்காரர்கள் என்கின்றனர்
இவன் மனைவி அமோக வர்ஷனின் மகள் சங்கமித்திரை ,பேரழகி. வடதிசை நோக்கிப் படை எடுத்து வெற்றிவாகைச் சூடுகிறான் கழற்சிங்கன்..அந்த வெற்றிக்கு வித்தான வித்தகனை தலங்கள் தோறும் கண்டு வணங்கித் திருத்தல யாத்திரை செய்கிறான் மனைவியுடன். வழியில் ஆரூர் வருகிறான்.ஆலய நிர்வாகம் பற்றியும் புதிய திருப்பணிகள் பற்றியும் மந்திரிப் பிரதானிகளுடன் விவரிக்கிறான்.
அரசி தனியே வலம் வருகிறாள்.புது வகை மலர்களைக் கண்டு அதிசயிக்கிறாள்.வெண்மையான அடுக்கு நந்தியா வட்டை மலர் அவளை ஈர்க்கிறது.தன கணவனின் பெயர் கொண்ட மலரைத் தன்னை அரியது முகர்கிறாள்.அங்கு வந்த செருத்துணை நாயனார்,சிவனுக்கு சூட்ட வேண்டிய மலரை முகர்வதா என்று வெகுண்டு அரசியின் மூக்கைக் காயபடுதுக்கிறார்.
அரசி ஓலமிட ஓடிவருகிறான் காதர்கணவன் கழற்சிங்கன்.விபரம் கூறி விம்முகிறாள் அரசி.என்ன நேரமோ என்று அனைவரும் அஞ்ச சட்டென தன் வாளை எடுக்கிறான் .தேவர்கள் பூமாரி பொழிகின்றனர்.பார்த்த கண்கள் அருவியைப் பொழிய எந்த அதிசயத் தீர்ப்பு அரங்கேறியது.
தக்காங்கு நாடித் தலைச் செல்ல வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
-குறள்
திருக்குறட்செல்வர்!-8
துன்பத்தைத் துன்பப் படுத்தியவர்.
துன்பம்!
இது அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது. சிலருக்கு வாழ்க்கையில் துன்பம் என்பது இன்றி துன்பமே வாழ்க்கையாக அமைவது உண்டு! அவர்கள் அதனை எப்படி வென்றார்கள், எப்படி மீண்டார்கள் என்று ஆய்ந்து அறிந்தோம் என்றால் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப்ங்களை எதிர்கொள்ள ஏதுவாகும்.
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?"
இந்த அருமையான அற்புதத் திரைப்படப்பாடல் ஒர் இரவு படத்தில் அமைந்த பாடலாகும்.துன்பத்திற்க்குத் தீர்வு இசை அதுவும் யாழிசையோடு சேர்ந்து இசை இசைவான இசையாகும். இப்படி தனக்கு ஏற்பட்டத்துன்ப்ங்களையே யாழிசைக்கும், குளிர் நிலவுக்கும் தென்றலுக்கும் ஒப்பிட்டு இசைபாடி பரவசம் கொண்டார் தன் துன்பங்க்களை வென்றார் ஒருவர். அவர்யார்?
நாவுக்கரசர்!
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர்.இளமையில் சமண மதத்தில் ஈடுபட்டு மருள் நீக்கி என்ற பெயரைவிட்டு தருமசேனர் ஆனார். இவருடைய தமக்கை திலகவதியின் முயற்சி காரணமாக சமணத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்.
திலகவதி நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக் கலிப்பகையார் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார்.அதுகேட்டு திலகவதியார் உடங்கட்டை ஏற முயல தம்பியின் நிலைகண்டு உடன்கட்டை ஏறாது கைமை நோன்பு நோற்றார். மலராமலே வாடி உதிர்ந்த அரும்பானார். அருமைத் தம்பிக்கு அன்னையானார். சமணத்தில் இருந்து தம்பி விடுபட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேற்ற இறைவன் விருப்பம் கொண்டான்.
தருமசேனருக்கு சூலை நோயைத் தந்தான். வலியால் துடித்தார் துவண்டார். சமணர்களால் நோயைப் போக்க இயல்வில்லை. தமக்கையை சந்தித்து அரற்றுகிறார். தமக்கைத் தான் வழிபடும் திருவதிகை வீரட்டானேசுவரிடம் முறையிடுகிறார். வலி தீர்ந்தால் சைவமதத்திற்கு வருவேன் என்று உறுதி கூறுகிறார்.
சமணத்தை விட்டு மாறும் சமயம் இதுவே என்று தமக்கை ஆனந்தக் கண்ணீர் செரிகிறார்.திரு நீரு பூச வயிற்றை திருகி எடுத்த வலி நின்றது . சைவத்திற்கு மாறியவர் ஆண்டவனால் "நாவுக்கரசர்" என்று அனழக்கப்பட்டார்.பண்ணி சைத்து இறைவனைப்பாடி மகிழ்ந்தார் நவுக்கரசர்.
சமணர்கள் மன்னன் மகேந்திரவர்மனிடம் கோள் முட்டுகின்றனர். சமணனான மன்னன் நவுக்கரசரை கைது செய்து கல்லில் கட்டிக் கடலில் எறியும் படி ஆனையிடுகிறான். கல் தெப்பமாக மாற கரையேறுகிறார் நம்மைக் கரை யேற்றுகிறார். சுண்ணாம்புக் களவாயில் இட்டு எரிக்கும் படி ஆனையிடுகிறான்.
மாசில் வினணயும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இனணயடி நிழலே
என்று பாடியபடி வெளி வருகிறார். மன்னன் அதிசயித்து தானும் சைவ சமயத்திற்கு மாறுகிறான். குணபர ஈசுவரம் என்ற ஆலயம் அமைத்து அகமகிழ்கிறான்.
இத்தனை துன்ப்ங்களையும் ஏற்று வெற்றி கொண்டு அந்த துன்பத்திற்கே துன்பம் செய்த நாவுக்கரசர் இறுதியில் திருப்புகலூரில் இறையுடன் இரண்டறக் கலந்தார்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
(குறல்)
திருக்குறட்செல்வர்!-9
தவமாய் தவமிருந்து
மக்கட் பேறு!
இந்தப் பேறு அமையாதவர்களின் துயரம் சொல்லில் அடங்காதது.சொல்ல முடியாதது. இந்தப் பேறே சிலருக்கு சொல்ல ஒண்ணாத்துயரை அளிக்கக்கூடியதாகவும் அமைந்து விடுகிறது. அது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப அமைகிறது என்பார்கள் பெரியவர்கள். ஜாதக ரீதியாக குரு பகவான் நல்ல நிலையில் அமைந்தாலே நன்மக்கட்பேறு அமையும் என்பார்கள் ஜோதிடர்கள்.
நமது வாழ்வின் ஆதாரமே மக்கட்பேறுதான். வாழ்ந்த வாழ்வின் வரலாறு கூறுவதும் மக்கட் பேறே. இதையே வம்சாவளி என்கிறோம். நம்முடைய மரபணுக் கூறுகளைத் தாங்கி நம்மை மகிழ்விக்கிறது மக்கட்பேறு. குழலும், யாழும் மழலைக்கு இனையாகாது. ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று உணர்த்துவதும் மக்கட்பேறு தான். என்ன தவம் செய்தாரோ என்று போற்றுவதும், என்ன பாவம் செய்தாரோ இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு என்று விமர்சிக்கப்படுவதும் மக்கட் பேற்றை முன் வைத்தேதான்.
முதலில் வீட்டுக்கு நன்மக்களாக இருக்கவேண்டும். ஊருக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். அடுத்து ஊருக்கே நல்வழி காட்டும் பிள்ளையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிறந்த மகவைப் பெற்றவர் சிறந்த மனிதர் என்று போற்றப்படுகிறார். சீரும் சிறப்பும் பெறுகிறார் தந்தை. அப்படிச்சீரும் சிறப்பும் பெற்றுத் தந்த பிள்ளையைப் பற்றிக் காண்போமா?
காழியூர்.
பெயரிலேயே சீரும் சிறப்பும் அமைந்த ஊர் என்று சீர்காழி வழங்கப்படும் ஊர். பிரளய காலத்தில் இறைவனும், இறைவியும் தோணியில் ஏறி இங்கு வந்து தங்கி மீண்டும் உலகைப் புதுபித்தது இங்கேதான். எனவே தோணிபுரம் என்ற பெயரும் உண்டு. இறைவன் தோணியப்பர். நம் பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் தோணியாய் அமைபவன் இறைவன் தனே!
இத்துனண சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் சிவபாத இருதயர் என்ற அந்தணர் வசித்து வந்தார். பெயரிலேயே எவ்வளவு பாங்கு. சிவ+பாத+இருதயர் அதாவது சிவனடியை மனதிலும்,சிந்தையிலும் இருத்தியவர் என்ற பொருள்.
இவருடைய மகன் சம்பந்தன். வயது மூன்று. ஒரு நாள் குளிக்கச்செல்கிறார் தந்தை சம்பந்தனும் உடன் வருவேன் என்று அடம்பிடிக்க அழைத்துச்செல்கிறர். பிரம்மதீர்த்தக்கரையில் மகனை அமர்த்தி நீராடுகிறார் தந்தை, மூழ்கிக்குள்க்கும் போதுத் தந்தையைக் காணோம் என்று கலங்குகிறார் சம்பந்தன்.அம்மே அப்பா என்று அரற்றி அழ இறைவனும் இறைவியும் தோன்றி பொற்கிண்ணியில் ஞானப்பால் தருகின்றனர். உடன் மறைகின்றனர். கரையேறிய தகப்பன் கடைவாயில் பால் வடிய நிற்கும் மகனைப் பார்க்கிறார்.யார் தந்த பால் என்று அதட்டுகிறார். "தோடுடைய செவியன்" என்று பாடி அடையாளம் காட்டுகிறது குழந்தை இறைவனும் காட்சி அளிக்கிறான் இறைவியுடன். திகைக்கிறார் தந்தை.
மகனுடன் பல ஆலயம் செல்கிறார். திருக்கோலக்காவில் பொற்றாளம் பட்டீஸ்வரத்தில் முத்துப்பந்தல் என பல பரிசுகள் இறைவன் தருகிறான் பல தலங்கள் சென்று திருவாடுதுறை அடைகின்றனர். பெரிய அளவில் யாகம் செய்ய வேண்டும் என்று சிவபாத இருதயருக்கு ஆசை ஆனால் பொருள் இல்லை, சம்பந்தர் இறைவனிடம் முறையிடுகின்றார்.
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழதெழவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞசை
மிடறினில் அடங்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு
ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே!
இவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் தனது பூதகனம் மூலம் உலவாப் பொற்கிழி அனுப்பி வைக்கிறான். உலவா என்றால் அள்ள அள்ளக் குறையாத என்று பொருள். பொற்கிழியைத் தந்தையிடம் சமர்பிக்கிறார் சம்பந்தர்.யாகத்தை விமரிசையாக செய்கிறார் சிவபாத இருதயர். என்ன தவம் செய்தனை என்று ஊரும், உறவும், உலகும் வியக்கிறது. சிவபாத இருதயரைக் கண்ட நாமுந்தான்!
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல்.
(குறள்)
திருக்குறட்செல்வர்!-10
மனைவி அமைவதெல்லாம்.....
மனைவி
நல்ல மனைவி நல்லகுடும்பம் நல்ல பிள்ளை அமைவது தெய்வீகம். நல்ல மனைவி அமைந்து விட்டால் நல்ல குடும்பம் நல்ல பிள்ளைகளும் அமைந்து விடும் எனவே தான் மனைவியை முன் வைத்துப் பாடினான் கவிஞன்.
பிரம்மச்சரிய வாழ்வில் பொறுப்புகள் அற்றுத் திரிகிறான் ஆண். அவனுக்கும் பொறுப்புகளைக் கற்றுக் கொடுக்கவே கால் கட்டுப் போட வேண்டும் என்கிறார் பெரியவர்கள் ஆணுக்குக்கற்றுக் கொடுப்பதலேயே பெண் ஆணுக்குக் குருவாகவும் ஆகிறாள். நல்ல மனைவியின் இலக்கணம் என்ன? பணி விடையில் தாதி பரிவோடு உணவு படைப்பதில் தாய் ஆலோசனை கூறுவதில் மந்திரி-பள்ளியறையில் தாசி என்று பன்முகம் காட்டுபவளே நல்ல பக்குவம் பெற்றபெண் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
தாலிகட்டியவன் தவறான வழி நடந்தால் அவனை மீண்டும் நேர்வழி கொணர்வதும் பெண்ணே. அப்படிப்பட்ட மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம். அப்படிபட்டதெய்வீக மனைவி பற்றி பார்ப்போமா?.
பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை சோழ நாட்டு இளவரசி மங்கையற்கரசி மணக்கிறாள். இவள் சிவ நேயச் செல்வி. செம்பியன் மாதேவி கண்டராதித்தன் வழி வந்தவள். கூன் பாண்டியன் சைவ சமயம் விட்டு சமணர் வழி நின்றவன். சிவாலயங்கள் எல்லாம் சமணர்வசம். சமணர் ஆதிக்கம் மேலோங்கி சைவ நெறி ஒடுக்கப்படுகிறது. ,தடுக்கப்படுகிறது.அரசனும் சமணர் கைப்பாவை ஆகின்றான். மக்களின் பழிக்கு ஆளாகிறான்.
வருந்தி நின்ற மங்கையற்கரசி அமைச்சர் குலுச்சிறையாருடன் ஆலோசனை செய்கிறான்.ஞானசம்பந்தர் ஆலவாய் வந்தால் ஆவண செய்வார் என்று உணர்ந்து அவருக்குத் தூது அனுப்புகிறாள் அரசி.தூதர்கள் வேதாரண்யம் வந்து சம்பந்தரிடம் விபரம் கூறுகின்றனர். உடன் புறப்படுகிறார் சம்பந்தர். தடுக்கிறார் நாவுக்கரசர் நாளும் கோளும் சரியில்லை என்று கூறுகிறார்.
"வேயுறு தோளி பங்கன்" என்ற பதிகம்பாடி மதுரை வருகிறார் சம்பந்தர். அரசி மங்கையற்கரசியை சந்திக்கிறார்.அவரை வியந்து பாடுகிறார்.
மங்கையர்க்கரசி வளவர் கோன்பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச்செல்வி பாண்டிமாதேவி
பனி செய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்க்ண்ணி தன்னொடுமமர்ந்த
ஆலவாயாவது மிதுவே
சைவ நெறி செம்மல் சம்பந்தர் வருகை கண்டு அச்சமுற்ற சமணர் அவர் தங்கியிருந்த திருமடத்திற்குத் தீயிடுகின்றனர்."பையவே சென்று பாண்டியனுக்கு ஆகுக" என்று தீக்கு ஆனையிடுகிறார் சம்ப்ந்தர். பாண்டியன் வெப்பு நோயால் வாடுகிறான். சமணர்களால் அன் நோயைத் தீர்க்க இயலவில்லை சம்பந்தர் வருகிறார்.
"மந்திரமாவது நீறு" என்று பதிகம்பாடி நோயை நீக்கு கிறார். கூன் பாண்டியன் தனது தவறு உணர்ந்து மீண்டும் சைவ நெறியில் இனைகிறான். கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடு மாறனாக உயர்கிறான்.சூழ்ச்சி செய்த சமணரைக் கழுவேற்றுகிறான். சைவ நெறி தவறி சென்ற கணவன் மீண்டும் நேர் வழிக்கு மீட்டக் காரிகையைக் கண்டு உலகே வியக்கிறது. கணவனின் மனக்கூன் நிமிர்த்தி பீடு நடை போட செய்த அவள் தன் பெயருக்கு ஏற்ப மங்கையற்கரசியாக சிறக்கிறாள் வரலாற்றில் இடம் பிடிக்கிறாள்.
புகழ் புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
(குறள்)
திருக்குறட்செல்வர்!-11
கல்லும் மலராகும்
பக்தி!
இது பல வகைப்படும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வங்கள். அதற்கான் தனிவழிபாடுகள். நிவேதனங்கள், குறிப்பிட்ட மலர்கள் அபிஷேகங்கள் என்று பல வழிமுறைகள்.
சிவனுக்கு வில்வ அர்ச்சனை, திருமலுக்குத் துளசி அர்ச்சனை, மாரியம்மனுக்கு வேப்பிலை என வேறுபாடுகள் அர்ச்சிக்கும் பக்தரும் குறிப்பிட்ட முறையிலேயே உடை தரிப்பது வழக்கம். முறைகள் பலவாக இருந்தாலும் பக்தர்கள் சரணாகதி அடைவது இறைவன் திருவடியை மட்டுமே. எந்த வகையில் பூசித்தாலும் அவன் ஏற்பான் ஏனெனில் நாம் அனைவரும் அவன் குழந்தைகளே. குழந்தைகளிடம் பேதம் காட்டாத தாய் அவன். தாய்க்கு முரட்டுக் குழந்தையும் பிடிக்கும். மூடக்குழந்தையும் பிடிக்கும். எனவேதான் "பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பறிந்து" என்று போற்றுகிறோம். நதிகள் பல இடங்களில் பிறந்து பல வழிகளில் ஒடி வந்தாலும் முடிவில் கலப்பது கடலில்தான். அது போல அர்ச்சிக்கும் முறைகள் பல ஆனாலும் அர்ச்சிக்கப்படுவது இறைவனை மட்டுமே. இறைவனுக்கு பக்தனின் மனம் முக்கியமே தவிர அர்ச்சிக்கும் மலர்களின் மணம் முக்கியமல்ல. என்ன நம்ப முடிய வில்லையா?
காஞ்சிபுரத்தை அடுத்த திருச்சங்கமங்கை என்ற ஊரில் சாக்கிய நாயனார் வாழ்ந்து வந்தார் . இவர் சார்ந்த மதத்தின் பெயராலேயே இவர் அழைக்கப் பட்டார். இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் பரசமயங்கள் பற்றி அறிய காஞ்சியை அடைந்தார். அங்கு சாக்கிய (பெளத்த) மதத்தில் சேர்ந்து பெளத்தர்களின் முறைப்படி தலையை மழித்துத் துவராடை அணிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு நிறைவு இல்லை. சிவனை மறக்க இயலவில்லை சிவ நெறியே சிறந்த நெறி என்று தெளிந்தார்.
இருப்பினும் பெளத்த சின்னங்களை நீக்கவில்லை. தோற்றத்தில் பெளத்தத் துறவியாகவேத் திகழ்ந்தார். ஒரு நாள் சாலையோரத்தில் சிவலிங்கத் திருமேனியைக் கண்டார். தாயைக் கண்ட சேயானார் ஆழ் மனதில் அடங்கிக் கிடந்த சிவபக்திப் பொங்கித் ததும்ப அர்ச்சிக்க எண்ணினார். அருகில் கிடந்த சிறுகல்லை மலராக எண்ணி சிவலிங்கத்தின் மீது எறிந்தார்.இது தினமும் தொடர்ந்தது கல்லடி முடிந்த பின்னரே உணவு அருந்துவது என்பதை நியதியாகக் கொண்டார்.
இதனை காளமேகப்புலவர் குறும்பாக விமர்சிக்கிறார் வஞ்ச இகழ்ச்சியாக
கல்லால் அடித்தற்கோ காலால் உதைத்தற்கோ
வில்லால் அடித்தற்கோ வெட்கினீர்-சொல்வீரால்
மஞ்சுதனைச் சுடுமுயர் மதிலானைக்காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன்னாள்
அதாவது இறைவன் ந்ஞ்சு உண்டது தற்கொலை முயற்சியே! கல்லால் சாக்கிய நாயனார் அடித்தற்கா? கண்ணப்பன் செருப்புக் காலை முகத்தில் வைத்ததற்கா? அல்லது அர்ச்சுனன் வில்லால் அடித்தற்கா? எந்த அவமானம் காரணமாக நீ நஞ்சு உண்டாய்? என்று குசும்பாகக் கூறுகிறார். சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
ஒரு நாள் அயர்வு காரணமாக கல்லர்ச்சனை செய்ய மறந்து உணவு அருந்த அமர்ந்து விட்டார். சட்டென நினைவு வர உண்ணாது எழுந்து கல்தேடி அர்ச்சித்தார். இறைவன் காட்சி தந்து அவருக்குச் சிவபதம் அருளினான் பக்திக்கு வேடம் முக்கியமல்ல. மனமே என்று இறைவன் திருவாய் மலர்ந்து அருளினான்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்,-
(குறள்.)
திருக்குறட்செல்வர்!-12
ஞான ஒளி வீசிட்ட நங்கை
மனைவி!
மனையைப் பொலிவுறச்செய்பவள் மனைவி. இதை நலிவுறச்செய்வதும் அவளே. எனவேதான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று திரைப்படபாடலும் இயம்புகிறது. அப்படி சிறப்பான மனைவி அமைந்து அவளை விட்டு விலகி. ஒதுக்கி வைத்துப் வேறோரு புது மனைவியுடன் புது வாழ்வு. கண்டான் ஒருவன். அவன் மனைவி அழவில்லை-புலமபவில்லைத் தன் அழகெல்லாம் நீத்து ஆண்டவனுக்கே அன்னையாக உயர்ந்தாள் அந்த புண்ணியவதியின் கதை தெரியுமா?
காரைக்கால்!
இத்தலத்தில் பரமதத்தனின் மனைவி புனிதவதி, நிதி மிகுந்த பெருவணிகன் பரமதத்தன். இனிதே இல்லறம் நடத்திய புனிதவதி சிந்தையைஸ் சிவன் பால் வைத்தவர். சிவனடியார்களுக்கு உணவு படைக்கும் சிறிய தொண்டை சிறப்பாக செய்து வந்தார். இவருடைய சிறப்பை உலகுக்கு உண்ர்த்த எண்ணினான் சிவன்.
ஒரு நாள் பரமதத்தனின் நண்பன் ஒரு மரத்து மாங்கனிகள் இரண்டினைத் தந்தான்,அதனை வேலையாள் முலம் வீட்டுக்கு அனுப்பிவைத்தான் பரமதத்தன். இறைவன் முதியவர் வேடம் தாங்கி பசி என்று புனிதவதியிடம் யாசிக்க "இன்னும் சமையல் முடியவில்லை, சற்றே பொறுங்கள்" என்கிறார் புனிதவதி புனிதவதியின் பெருமை தெரியும் சமயம் வந்து விட்டது; எனவே "பொறுக்கமுடியாத பசி " என்கிறார் பெரியவர். மோர்சாதம் படைக்கிறாள் மாம்பழத்துடன். உண்டு முடித்து மறைகிறான் இறைவன்.
பின்னர் கணவன் வருகிறான், மாம்பழத்துடன் உணவு படைக்கிறார் புனிதவதி, கனியின் சுவையில் மயங்கியகணவன் இன்னொரு பழத்தையும் கொணர்க என்கிறான். திகைக்கிறாள் மனைவி. இறைவனிடம் முறையிடுகிறாள். இறையருளால் ஒரு மாங்கனிகிடைக்கிறது. அதனையும். கணவனுக்குத்தருகிறாள் காரிகை, சுவைத்தவன் கேட் கிறான்? இந்த பழம் அந்தப் பழத்தைவிட சுவை அதிகம் எப்படி சாத்தியம்? பொய்மை விரும்பாத புனிதவதி நடந்தது நடந்தபடி கூறுகிறாள், நம்பாத கணவன் இன்னொரு முறை கனியை வாங்கிக்காட்டு பார்க்கலாம் என்கிறான் நக்கலாக.
மீண்டும் இறைவனிடம் இறைஞ்சுகிறாள், மீண்டும் ஒரு மாங்கனி மங்கையின் கைகளில் அமர்ந்து மறைகிறது. திகைகிறான் கணவன் இத்தனை சிறப்பு வாய்ந்த வளை மனைவியாக ஏற்கவில்லை மனம் அயல் நாடு செல்லும் முடிவு எடுக்கிறான். சென்று பெரும் பொருள் சேர்த்து தாய் நாடு திரும்புகிறான். சொந்த ஊர் வராமல் பாண்டிய நாடு சென்று புதுவாழ்வு துவங்குகிறான் வேறோரு புது மனைவியுடன். புதியவளிடம் பழையவள் பற்றிக்கூறவில்லை. பழையவளிடம் நாடு திரும்பியதுப் பற்றித் தெரிவிக்கவில்லை இரட்டை வாழ்வு வாழ்கிறான். இருப்பினும் மனசாட்சியின் கூக்குரலுக்குப் பயந்து மகளுக்கு புனிதவதி என்று பெயரிடுகிறான். தான் எந்த சுக போகங்களையும் குறைத்துக் கொள்ள வில்லை, புனிதவதி பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அந்த சுய நலக் கணவன்.
இதே போன்று ஆண் ஞானிகள் விலகிச் சென்ற போது எந்த மனைவியும் புதுமணம் புரிந்ததாக சரித்திரம் இல்லை. ஆணாதிக்க மனோபாவம் அன்று முதல் இன்று வரை தொடர் கதை, செய்தி அறிந்த புனிதவதி கணவனைக்காண வருகிறாள் உறவினர்களுடன், மனைவி மகளுடன் காலில் வீழ்கிறான் கணவன் துடிக்கிறாள் பேதை, கணவனுக்காக் கட்டிகாத்தக் கட்டுடலை நீத்துப் பேயுரு ஏற்கிறாள். கைலாயம் செல்கிறாள் தலையால் நடந்து. அம்மையே என்று எதிர்கொள்கிறான் இறைவன்.
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்-உன்னை
என்றும் மறவாமை வேண்டும்- சேக்கிழார்.
என்று மன்றாடுகிறாள்.உலகியல் பற்றுகளைத்துறந்தவள் இறைவன் மீது கொண்ட பற்றைத் துறக்க இயலாது அவனிடம் யாசிக்கிறாள்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு -
(குறள்)
திருக்குறட்செல்வர்!-13
சொன்னவண்ணம் நின்றவர்.
வாக்குறுதி!
இதை நிறைவேற்றப் பல்வேறு தியாகங்களைஸ் செய்ய வேண்டும். அரிச்சந்திரன் தன் வாக்கைக் காப்பாற்ற எத்தனை இன்னல்களை எதிர்கொண்டான். அதை நாடகமாகக் கண்ட காந்திஜி தானும் அதுபோல சத்ய சந்தராகவே வாழ்ந்து சத்யசோதனையை நமக்குத் தந்தார். மேலும் உண்மையை கடவுள் என்ற உண்மையையும் கண்டறிந்தார்.
சொன்ன வாக்குத் தவறாது உண்மையாக நடந்து கொள்வதே வாக்குறுதி, எனவே தான் பள்ளிக் கூடம் முதல், பதவி ஏற்பு வரை உறுதி மொழி ஏற்கிறோம். கோர்ட்டிலும் நான் சொல்லுவதெல்லாம் உண்மை என்று உறுதி கூறுகிறோம். ஆனால் நாம் கூறும் உறுதிமொழிகளுக்கு ஏற்ப் நடகிறோமா என்பதே கேள்வி? இது ஒரு நடைமுறை சம்பிரதாயம் என்ற முறையிலே நடக்கிறது! சொல்லும் செயலும் ஒன்றாக அமைவதே உண்மையான் வாக்குறுதி.
மகாபாரத் பீஷ்மரும் திரு நீலகண்ட நாயனாரும் சொன்ன வாக்குறுதிக்காகத் தங்கள் இளமையையேத்தொலைத்தவர்கள். பசி வந்த போதுகூடத் தன் வாக்குறுதியிலிருந்து வழுவாது வாழ்ந்த ஒரு பக்தரைக் காண்போமா?
அதிபத்தர்!
இவர் நாகைப்பட்டினத்தை அடுத்த நம்பியார் குப்பத்தின் தலைவர் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்கி பெரும்பொருள் ஈட்டி பெரும் செல்வராக வாழ்ந்து வந்தார். சிவனின் பால் மிகுந்த பக்தி கொண்டவர்.அதனால் அதி பக்தர் என்றே அழைக்கப்பட்டார். இவர் மீன் பிடிக்கும் போது தினமும் ஒரு சிறந்த மீனை சிவனுக்கு அர்ப்பணம் என்ன்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவார், இது நாளும் தொடர்ந்தது. இவரது பக்தி வலையில் வசமாகஸ் சிக்கினான் சிவன். தன் பக்தனின் பெருமையை உலகறியஸ் செய்யத் திரு உளம் கொண்டான் அவன்.
இவர் வலையில் தினமும் ஒரே ஒரு மீன் மட்டுமே அகப்படஸ் செய்தான். அந்த மீனையும் இறைவனுக்கே அர்ப்பணம் எனக் கடலில் விட்டு வீடு திரும்பினார். இருப்பதை விற்று குடும்பம் நடத்தினார். குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதற்கு இணங்க எல்லா வற்றையும் விற்று முடித்து உணவுக்கே வழி இல்லாத நிலை. பசி பட்டினி. குடும்பமே அல்லாடியது. அப்போதும் தன் கொள்கையில் மாறவில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியைப் பொய்யாக்கித் தன் கொள்கையில் மாறாது நின்றார்! எனை ஆளும் ஈசனின் திருவுளம் எதுவோ அது நடக்கட்டும். நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும் என்ற உறுதியுடன் பசிக் களைப்புடன் கடலுக்கு சென்றார்.
என்ன சோதனை அவர் வலையில் எதுவுமே சிக்கவில்லை. அவரது பக்தி வலையில் சிக்கிய சிவனின் லீலை இது. தன் பக்தனின் பிறவித் தளையை அருக்கும் நேரம் வந்து விட்டது என்று எண்ணினான், சிவபெருமான். பொன்மயமான ஒரு மீனைப் படைத்தான் மீனாட்சியின் மணவாளன். பொன்மீன் அதிபத்தர் வலையில் சிக்கியது. அதிசய மீனை கண்டு ஆரவாரம் செய்தனர். உடன் வந்த வலை ஞர்கள்,"வைரமும்,முத்தும் வைத்து இழைத்தத் தங்கமீன்.இதை விற்றால் பெரும் பொருள் கிடைக்கும் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம் " என்றனர்.
இன்று எம்பெருமானுக்கு அர்ப்பணிக்க இந்த மீன் கிடைத்தது. நான் செய்த பேறு" என்று கூறி கடலில் விட்டார் தங்கமீனை, தேவர்கள் பூமாரி பொழிய இறைவன் அம்மையுடன் காட்சி அளித்தான். "உன் பக்தி கண்டு உலகு உய்யவே இந்த ஏற்பாடு. நீ எம் அடியார்களுடன் இனிஸ் சிவலோக வாசி ஆவாயாக" என்று அருளி மறைந்தார் அதி பக்தரின் அதிபக்தி கண்டு உலகே வியந்தது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
(குறள்)
திருக்குறட்செல்வர்!-14
கடையனையும் கடைந்தேற்றியவர்
தண்டனை!
தவறு செய்தவர்களை தட்டிக்கேட்டு ஒறுப்பதே தண்டனையாகும். அதாவது குற்றம் செய்தவனை திருத்துகிறேன் என்று சொல்லி தாமும் தண்டனை என்ற மற்றொரு குற்றம்புரிவதே தண்டிப்பாகும்.
இது பலவகைப்படும் சிறை,அபராதம், சவுக்கடி, நாடு கடத்தல், இது அல்லாது மரணதண்டனை கூட உண்டு. அண்மைக் காலத்தில் மரணதண்டனை கூடாது என ஒரு அலை எழுகிறது. கொலை செய்தவனுக்கு தண்டனை இன்னொரு கொலையா என்பதே இவர்களின் வாதம்!
இந்த பலவகைப்பட்ட தண்டனைகளிலும் மேம்பட்டு கடுமையான ஒரு தண்டனை உண்டு. ஆனால் அந்த தண்டனையை அளிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
ஏன் அந்த தண்டனையை ஒதுக்கி வைக்கின்றனர். அந்த தண்டனையை அளிப்பதற்கு நல்லமன உறுதி வேண்டும். அது இல்லாதவர்களே இந்த தண்டனையை ஒதுக்குகின்றனர். அது என்ன தண்டனை? அதன் பெயர் என்ன என்பதே நம் கேள்வி அதன் பெயர்.................
மன்னிப்பு!
ஆம் மன்னிப்பை விட பெரிய கொட்ந்தண்டனை எதுவும் கிடையாது. தண்டித்தால் வன்மம் தான் வளரும், மன்னித்தால் மனம் தெளியும் சிந்திக்க சிந்திக்க தவறுகளின் அடிப்படை புரியும் திருந்த வாய்ப்பு கிடைக்கும். அப்படி மன்னித்து உயர்ந்த மா மேதையைக் காண்போமா?
திருமுனைப்பாடி!
இதை ஆண்ட குறு நில மன்னர் நரசிங்கமுனையரையர். சிவன் பால் மாறாத காதல் கொண்டவர். சுந்தரரின் வள்ர்ப்பு தந்தை அவரைத் தனது அபிமான் புத்திரராக வரித்தவர்.
திருவாதிரை நட்சதிரத்தன்று விசேஷ பூஜைகள் செய்து சிவனடியார்களுக்கு அன்னமிட்டு பொற்காசுகள் வழங்குவது இவரது வழக்கம் சிவனுக்கு உகந்த நாள். திருவாதிரை பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறான். நான் மாதங்களில் மார்கழியாகவும் நட்சத்திரத்தில் திருவாதிரையாகவும் இருக்கிறேன் என்று.
எனவே தான் மார்கழி திருவாதிரை வெகுவிசேஷம் தில்லையில் அன்று தரிசனம்.
ஒரு திருவாதிரை நாள் அன்று விசேஷ பூஜைகள் செய்து அடியார்க்கு அன்னமிட்டு பொற்கிழி வழங்கி கொண்டு இருந்தபோது, காமக்குரோத களியாட்டங்களில் மூழ்கி தன்னையே இழந்த ஒரு அடியாரும் கலந்து கொண்டார். சிவ சின்னம் தரித்தவர். ஆனாலும் ஒழுக்கம் தவறியவர் என்று அனைவராலும் அறியப்ப்ட்டவர். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க...........
நரசிங்க முனையரையர் அவரையும் உபசரித்து வணங்கி மற்ற அடியார்களுக்கு வழங்கியதை விட அதிகப் பொற்காசு கள் வழங்கினார். அதன் பின்னர் அந்த அடியார் நாணித்தலை கவிழ்ந்து தன் நிலை உணர்ந்து திருந்தினார் என்று சொல்லவும் வேண்டுமா?
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
(குறள்)
திருக்குறட்செல்வர்!-15
பழிக்குப்பயந்தவர்
பழி!
இதற்குப் பயப்படாதவர்கள் பலர் உண்டு, குற்றங்களினால் ஏற்படும் பழிக்குப் பயப்படாது தனது குற்றத்தை நியாயப்படுத்துபவர்கள் இவர்கள் இவர்களைப் பஞ்ச மாபாதகர்கள் என்பர் பெரியவர்கள் தன்னுடைய குற்றங்களை நியாயப் படுத்துபவர்கள் துராத்மாக்கள்.
ஆனால் நல்லவர்கள் பழிக்கு அஞ்சுவார்கள், அதற்குப் பிராய் சித்தம் தேடுவார்கள். அதவது தாங்கள் நேரடியாகத் தவறு செய்யாவிட்டாலும் தன்னைச் சார்ந்தவர்கள் தவறு செய்தாலும் அந்தக் குற்றங்களுக்குத் தாமும் காரணம் என்று தார்மீகப் பொறுப்பு ஏற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மகாத்மாக்கள். வீண் பழியினால் அவச்சொல் அவமானம், மன உளைச்சல் என பல் வேறு நெருக்கடிகள்.
"சாரி செளரா" காவல் நிலையத்துக்குத் தொண்டர்கள் தீ வைத்ததற்குத் தாமே பொறுப்பு என்று உண்ணா விரதம் மேற் கொண்டார் கந்தி அடிகள். அரியலூரில் பெரு வெள்ளம் காரணமாக ஏற்பட்ட ரயில் விபத்துக்குத் தாமே பொறுப்பு என்று கூறி பதவி விலகினார் ரயில்வே அமைச்சர் "லால் பகதூர் சாஸ்திர்" அவர்கள். இப்படி பழிக்கு அஞ்சிய இவர்களால் நாம் பெருமிதம் கொள்கிறோம்! நம் நாட்டின் பெருமை அகில உலகத்திலும் பேசப்படுகிறது!! இது இன்று நேற்று ஏற்பட்டப் பழக்கம் அல்ல! தொன்று தொட்டு நிலவி வரும் நம் பாரம்பரிய பழக்கம் இது!
ஆம்!
பல்லாண்டுகளுக்கு முன்னே புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் இயற்பெயரே புகழ்ச்சோழனா அல்லது பழிக்கு அஞ்சி செயற்கரிய பிராயசித்தம் செய்தமையால் ஏற்பட்டக் காரணப் பெயரா யாமறியோம் நமக்குத் தெரிந்தது எல்லாம் இவனது புகழ்பெற்ற செயல்கள் மட்டுமே.
ஒரு சமயம் இவன் கருவூரில் தங்கி இருந்த போது சிவகமி ஆண்டால் எனும் சிவனடியார் சிவனுக்காக கொண்டு சென்ற பூக்குவலையை பட்டத்து யானை துவைத்து நாசம் செய்து விட்டது. அபயம் என்று அவர் அழுத குரல் கேட்டு எறிபத்த நாயனார் என்னும் அன்பர் மன்னரின் பட்டத்து யானையையும் உடன் வந்த வீரர்களையும் கொன்று குவித்தார். செய்தி கேட்டு வந்த புகழ்ச்சோழன் கோபம் கொண்டான். யானையை வெட்டியது சிவனடியார் என்றும் யானை சிவனுக்கு உரிய மலர்களை சிதைத்ததையும் அறிந்தான். யானையை வெட்டியது போதாது யானையின் உரிமையாளன் என்னையும் வெட்டுக என்று த்லை கொடுக்கிறான்.தடுத்து தன் தலையை வெட்ட எறிபத்த நாயனார் முற்பட இறைவன் காட்சியளித்து இறந்தவர்களையும் யானையையும் உயிர்ப்பிக்கிறான். இவன் புகழ் ஒங்க ஆசி கூறினான்.
அப்படிப்பட்டப் புகழ் சோழன் சிலகாலம் சென்றதும் தனக்குக் கப்பம் கட்ட மறுத்த அதிகன் என்ற மன்னன் மீது போர் தொடுத்தான் போரில் தோற்று அதிகன் ஒடி ஒளிய வீரர்களைக் கொன்று அவன் நாட்டைக் கைகொண்டனர் சோழ வீரர்கள்.
சோழ வீரர்கள் அதிகனின் வீரர்களின் தலைகளைக் கொய்து புகழ்ச்சோழன் காலடியில் சமர்ப்பித்தனர். தலைகளை பார்வையிட்ட மன்னனின் தலையில் இறங்கியது இடி, வெட்டுண்ட ஒரு தலையில் சிவச் சின்னமானசடை இருந்தது.சிவனடியாரைக் கொன்றபழிக்கு ஆளானேன் என்று கூறி வருந்தினான், மெய் கோர்ந்து அழுது அரற்றினான். பின் தெளிந்தான்.
தன் மகனிடம் ஆட்சி ஒப்படைத்து, வெட்டுண்ட சிவனடியார் தலையை தன் தலையில் சுமந்து தீக்குளித்தான். தேவர்கள் தந்துபி முழங்கி மலர் மாரி பொழிய இறைவன் திருவடி நிழலை அடைந்தான்.
தினைத்துனையாம் குற்றம் வரினும் பனைத்துனையாக்
கொள்வர் பழி நானுவார் -
(குறள்)
நியாயத்தராசு
இரைதேடுவதோடு இறையும் தேடு என்பது ஆன்றோர் வாக்கு. நமக்கு இறை தேட வழி காட்டியவர்களில் முன்னணி வகிப்பவர்கள் அருபத்து மூவர். அவர்கள் பற்றித் திருக்குறட்செல்வர் என்ற தலைப்பில் நினைவு கூறுவோமா?
நீதி!
நிதி மிகுந்தவர்க்கு ஒரு நீதி. நிதியற்றவர்க்கு ஒரு நீதி என்பதே பொதுவானநியதி. இருந்தாலும் நீதிக்குத் தலைவணங்கி நியாயத் தராசாக நிற்பவரும் உண்டு கோணாத கோல் என்று அவருடடைய செங்கோல் சிறப்பிக்கப் படுகிறது. ஆராயாது கோவலனுக்குக் கொலைதண்டனை வழங்கி விட்டான் பாண்டிய மன்னன். கண்ணகி வந்து வழக்குரைக்க தன் நியாயத் தராசு அநியாயத் தராசாக அமைந்ததை எண்ணி வெட்கித் தன்னுயிர் ஈந்து வளைந்த செங்கோலை நிமிர்த்துகிறான் பாண்டியன். உடன் தன்னுயிர் நீத்து நிமிர்ந்த செங்கோலுக்கு மேலும் மெருகேற்றுகிறாள் பாண்டியனின் பத்தினி.
இப்படிப்பட்ட நியாயவாதிகளிடையே அநியாயவாதிகளும் உண்டு. திருச்சிராப்பள்ளித் தாயுமானசுவாமிக்கு நாகலோகத்திலிருந்து செவ்வந்திமலர் கொணர்ந்து பூஜிப்பவர் சார மாமுனிவர். ஒரு நாள் மலரின் மணம் கண்டு மனம் தடுமாறிய உறையூர்ச்சோழன் அம்மலர்களைப் பறித்துத் தன் மனைவிக்குச்சூட்டி மகிழ்கிறான் ஓலமிடுகிறார் முனிவர்.கோபம்கொண்ட இறைவன் கொற்றவன் வாழும் உறையூர் பக்கம் திரும்பி சினக்க மண்மாரிபெய்தது என்கிறது வரலாறு.
இப்படிப்பட்ட மன்னரிடையே இறைவனுக்குச்சூட வேண்டிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டிய மன்னனின் கதைத் தெரியுமா?
ஆரூர்!
மனுநீதிச்சோழன் ஆண்டமாநகரம், கன்றுக்காக மகனைத் தேர்க்காலில் இட்டு நீதிகாத்த சோழமன்னன் ஆண்ட ஊர்.இங்கு பல்லவ மன்னனின் நீதியும் நிலை பெற்றது. பல்லவ மன்னன் கழற் சிங்கன் ,வீரகழல் அணிந்தசிங்கம் போன்ற மாவீரன் என்பதால்ஏற்பட்டக் காரணப்பெயர் இவனே மூன்றாம் நந்திவர்மன் என்பர். தமிழுக்காகத் தன்னுயிர் நீத்தவனும் இவனே. இவனை வீழ்த்தவே கலம்பகம் பாடினர் கலகக்காரர்கள் என்கின்றனர்
இவன் மனைவி அமோக வர்ஷனின் மகள் சங்கமித்திரை ,பேரழகி. வடதிசை நோக்கிப் படை எடுத்து வெற்றிவாகைச் சூடுகிறான் கழற்சிங்கன்..அந்த வெற்றிக்கு வித்தான வித்தகனை தலங்கள் தோறும் கண்டு வணங்கித் திருத்தல யாத்திரை செய்கிறான் மனைவியுடன். வழியில் ஆரூர் வருகிறான்.ஆலய நிர்வாகம் பற்றியும் புதிய திருப்பணிகள் பற்றியும் மந்திரிப் பிரதானிகளுடன் விவரிக்கிறான்.
அரசி தனியே வலம் வருகிறாள்.புது வகை மலர்களைக் கண்டு அதிசயிக்கிறாள்.வெண்மையான அடுக்கு நந்தியா வட்டை மலர் அவளை ஈர்க்கிறது.தன கணவனின் பெயர் கொண்ட மலரைத் தன்னை அரியது முகர்கிறாள்.அங்கு வந்த செருத்துணை நாயனார்,சிவனுக்கு சூட்ட வேண்டிய மலரை முகர்வதா என்று வெகுண்டு அரசியின் மூக்கைக் காயபடுதுக்கிறார்.
அரசி ஓலமிட ஓடிவருகிறான் காதர்கணவன் கழற்சிங்கன்.விபரம் கூறி விம்முகிறாள் அரசி.என்ன நேரமோ என்று அனைவரும் அஞ்ச சட்டென தன் வாளை எடுக்கிறான் .தேவர்கள் பூமாரி பொழிகின்றனர்.பார்த்த கண்கள் அருவியைப் பொழிய எந்த அதிசயத் தீர்ப்பு அரங்கேறியது.
தக்காங்கு நாடித் தலைச் செல்ல வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
-குறள்
திருக்குறட்செல்வர்!-8
துன்பத்தைத் துன்பப் படுத்தியவர்.
துன்பம்!
இது அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது. சிலருக்கு வாழ்க்கையில் துன்பம் என்பது இன்றி துன்பமே வாழ்க்கையாக அமைவது உண்டு! அவர்கள் அதனை எப்படி வென்றார்கள், எப்படி மீண்டார்கள் என்று ஆய்ந்து அறிந்தோம் என்றால் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப்ங்களை எதிர்கொள்ள ஏதுவாகும்.
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?"
இந்த அருமையான அற்புதத் திரைப்படப்பாடல் ஒர் இரவு படத்தில் அமைந்த பாடலாகும்.துன்பத்திற்க்குத் தீர்வு இசை அதுவும் யாழிசையோடு சேர்ந்து இசை இசைவான இசையாகும். இப்படி தனக்கு ஏற்பட்டத்துன்ப்ங்களையே யாழிசைக்கும், குளிர் நிலவுக்கும் தென்றலுக்கும் ஒப்பிட்டு இசைபாடி பரவசம் கொண்டார் தன் துன்பங்க்களை வென்றார் ஒருவர். அவர்யார்?
நாவுக்கரசர்!
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர்.இளமையில் சமண மதத்தில் ஈடுபட்டு மருள் நீக்கி என்ற பெயரைவிட்டு தருமசேனர் ஆனார். இவருடைய தமக்கை திலகவதியின் முயற்சி காரணமாக சமணத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்.
திலகவதி நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக் கலிப்பகையார் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார்.அதுகேட்டு திலகவதியார் உடங்கட்டை ஏற முயல தம்பியின் நிலைகண்டு உடன்கட்டை ஏறாது கைமை நோன்பு நோற்றார். மலராமலே வாடி உதிர்ந்த அரும்பானார். அருமைத் தம்பிக்கு அன்னையானார். சமணத்தில் இருந்து தம்பி விடுபட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேற்ற இறைவன் விருப்பம் கொண்டான்.
தருமசேனருக்கு சூலை நோயைத் தந்தான். வலியால் துடித்தார் துவண்டார். சமணர்களால் நோயைப் போக்க இயல்வில்லை. தமக்கையை சந்தித்து அரற்றுகிறார். தமக்கைத் தான் வழிபடும் திருவதிகை வீரட்டானேசுவரிடம் முறையிடுகிறார். வலி தீர்ந்தால் சைவமதத்திற்கு வருவேன் என்று உறுதி கூறுகிறார்.
சமணத்தை விட்டு மாறும் சமயம் இதுவே என்று தமக்கை ஆனந்தக் கண்ணீர் செரிகிறார்.திரு நீரு பூச வயிற்றை திருகி எடுத்த வலி நின்றது . சைவத்திற்கு மாறியவர் ஆண்டவனால் "நாவுக்கரசர்" என்று அனழக்கப்பட்டார்.பண்ணி சைத்து இறைவனைப்பாடி மகிழ்ந்தார் நவுக்கரசர்.
சமணர்கள் மன்னன் மகேந்திரவர்மனிடம் கோள் முட்டுகின்றனர். சமணனான மன்னன் நவுக்கரசரை கைது செய்து கல்லில் கட்டிக் கடலில் எறியும் படி ஆனையிடுகிறான். கல் தெப்பமாக மாற கரையேறுகிறார் நம்மைக் கரை யேற்றுகிறார். சுண்ணாம்புக் களவாயில் இட்டு எரிக்கும் படி ஆனையிடுகிறான்.
மாசில் வினணயும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இனணயடி நிழலே
என்று பாடியபடி வெளி வருகிறார். மன்னன் அதிசயித்து தானும் சைவ சமயத்திற்கு மாறுகிறான். குணபர ஈசுவரம் என்ற ஆலயம் அமைத்து அகமகிழ்கிறான்.
இத்தனை துன்ப்ங்களையும் ஏற்று வெற்றி கொண்டு அந்த துன்பத்திற்கே துன்பம் செய்த நாவுக்கரசர் இறுதியில் திருப்புகலூரில் இறையுடன் இரண்டறக் கலந்தார்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
(குறல்)
திருக்குறட்செல்வர்!-9
தவமாய் தவமிருந்து
மக்கட் பேறு!
இந்தப் பேறு அமையாதவர்களின் துயரம் சொல்லில் அடங்காதது.சொல்ல முடியாதது. இந்தப் பேறே சிலருக்கு சொல்ல ஒண்ணாத்துயரை அளிக்கக்கூடியதாகவும் அமைந்து விடுகிறது. அது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப அமைகிறது என்பார்கள் பெரியவர்கள். ஜாதக ரீதியாக குரு பகவான் நல்ல நிலையில் அமைந்தாலே நன்மக்கட்பேறு அமையும் என்பார்கள் ஜோதிடர்கள்.
நமது வாழ்வின் ஆதாரமே மக்கட்பேறுதான். வாழ்ந்த வாழ்வின் வரலாறு கூறுவதும் மக்கட் பேறே. இதையே வம்சாவளி என்கிறோம். நம்முடைய மரபணுக் கூறுகளைத் தாங்கி நம்மை மகிழ்விக்கிறது மக்கட்பேறு. குழலும், யாழும் மழலைக்கு இனையாகாது. ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று உணர்த்துவதும் மக்கட்பேறு தான். என்ன தவம் செய்தாரோ என்று போற்றுவதும், என்ன பாவம் செய்தாரோ இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு என்று விமர்சிக்கப்படுவதும் மக்கட் பேற்றை முன் வைத்தேதான்.
முதலில் வீட்டுக்கு நன்மக்களாக இருக்கவேண்டும். ஊருக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். அடுத்து ஊருக்கே நல்வழி காட்டும் பிள்ளையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிறந்த மகவைப் பெற்றவர் சிறந்த மனிதர் என்று போற்றப்படுகிறார். சீரும் சிறப்பும் பெறுகிறார் தந்தை. அப்படிச்சீரும் சிறப்பும் பெற்றுத் தந்த பிள்ளையைப் பற்றிக் காண்போமா?
காழியூர்.
பெயரிலேயே சீரும் சிறப்பும் அமைந்த ஊர் என்று சீர்காழி வழங்கப்படும் ஊர். பிரளய காலத்தில் இறைவனும், இறைவியும் தோணியில் ஏறி இங்கு வந்து தங்கி மீண்டும் உலகைப் புதுபித்தது இங்கேதான். எனவே தோணிபுரம் என்ற பெயரும் உண்டு. இறைவன் தோணியப்பர். நம் பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் தோணியாய் அமைபவன் இறைவன் தனே!
இத்துனண சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் சிவபாத இருதயர் என்ற அந்தணர் வசித்து வந்தார். பெயரிலேயே எவ்வளவு பாங்கு. சிவ+பாத+இருதயர் அதாவது சிவனடியை மனதிலும்,சிந்தையிலும் இருத்தியவர் என்ற பொருள்.
இவருடைய மகன் சம்பந்தன். வயது மூன்று. ஒரு நாள் குளிக்கச்செல்கிறார் தந்தை சம்பந்தனும் உடன் வருவேன் என்று அடம்பிடிக்க அழைத்துச்செல்கிறர். பிரம்மதீர்த்தக்கரையில் மகனை அமர்த்தி நீராடுகிறார் தந்தை, மூழ்கிக்குள்க்கும் போதுத் தந்தையைக் காணோம் என்று கலங்குகிறார் சம்பந்தன்.அம்மே அப்பா என்று அரற்றி அழ இறைவனும் இறைவியும் தோன்றி பொற்கிண்ணியில் ஞானப்பால் தருகின்றனர். உடன் மறைகின்றனர். கரையேறிய தகப்பன் கடைவாயில் பால் வடிய நிற்கும் மகனைப் பார்க்கிறார்.யார் தந்த பால் என்று அதட்டுகிறார். "தோடுடைய செவியன்" என்று பாடி அடையாளம் காட்டுகிறது குழந்தை இறைவனும் காட்சி அளிக்கிறான் இறைவியுடன். திகைக்கிறார் தந்தை.
மகனுடன் பல ஆலயம் செல்கிறார். திருக்கோலக்காவில் பொற்றாளம் பட்டீஸ்வரத்தில் முத்துப்பந்தல் என பல பரிசுகள் இறைவன் தருகிறான் பல தலங்கள் சென்று திருவாடுதுறை அடைகின்றனர். பெரிய அளவில் யாகம் செய்ய வேண்டும் என்று சிவபாத இருதயருக்கு ஆசை ஆனால் பொருள் இல்லை, சம்பந்தர் இறைவனிடம் முறையிடுகின்றார்.
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழதெழவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞசை
மிடறினில் அடங்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு
ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே!
இவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் தனது பூதகனம் மூலம் உலவாப் பொற்கிழி அனுப்பி வைக்கிறான். உலவா என்றால் அள்ள அள்ளக் குறையாத என்று பொருள். பொற்கிழியைத் தந்தையிடம் சமர்பிக்கிறார் சம்பந்தர்.யாகத்தை விமரிசையாக செய்கிறார் சிவபாத இருதயர். என்ன தவம் செய்தனை என்று ஊரும், உறவும், உலகும் வியக்கிறது. சிவபாத இருதயரைக் கண்ட நாமுந்தான்!
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல்.
(குறள்)
திருக்குறட்செல்வர்!-10
மனைவி அமைவதெல்லாம்.....
மனைவி
நல்ல மனைவி நல்லகுடும்பம் நல்ல பிள்ளை அமைவது தெய்வீகம். நல்ல மனைவி அமைந்து விட்டால் நல்ல குடும்பம் நல்ல பிள்ளைகளும் அமைந்து விடும் எனவே தான் மனைவியை முன் வைத்துப் பாடினான் கவிஞன்.
பிரம்மச்சரிய வாழ்வில் பொறுப்புகள் அற்றுத் திரிகிறான் ஆண். அவனுக்கும் பொறுப்புகளைக் கற்றுக் கொடுக்கவே கால் கட்டுப் போட வேண்டும் என்கிறார் பெரியவர்கள் ஆணுக்குக்கற்றுக் கொடுப்பதலேயே பெண் ஆணுக்குக் குருவாகவும் ஆகிறாள். நல்ல மனைவியின் இலக்கணம் என்ன? பணி விடையில் தாதி பரிவோடு உணவு படைப்பதில் தாய் ஆலோசனை கூறுவதில் மந்திரி-பள்ளியறையில் தாசி என்று பன்முகம் காட்டுபவளே நல்ல பக்குவம் பெற்றபெண் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
தாலிகட்டியவன் தவறான வழி நடந்தால் அவனை மீண்டும் நேர்வழி கொணர்வதும் பெண்ணே. அப்படிப்பட்ட மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம். அப்படிபட்டதெய்வீக மனைவி பற்றி பார்ப்போமா?.
பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை சோழ நாட்டு இளவரசி மங்கையற்கரசி மணக்கிறாள். இவள் சிவ நேயச் செல்வி. செம்பியன் மாதேவி கண்டராதித்தன் வழி வந்தவள். கூன் பாண்டியன் சைவ சமயம் விட்டு சமணர் வழி நின்றவன். சிவாலயங்கள் எல்லாம் சமணர்வசம். சமணர் ஆதிக்கம் மேலோங்கி சைவ நெறி ஒடுக்கப்படுகிறது. ,தடுக்கப்படுகிறது.அரசனும் சமணர் கைப்பாவை ஆகின்றான். மக்களின் பழிக்கு ஆளாகிறான்.
வருந்தி நின்ற மங்கையற்கரசி அமைச்சர் குலுச்சிறையாருடன் ஆலோசனை செய்கிறான்.ஞானசம்பந்தர் ஆலவாய் வந்தால் ஆவண செய்வார் என்று உணர்ந்து அவருக்குத் தூது அனுப்புகிறாள் அரசி.தூதர்கள் வேதாரண்யம் வந்து சம்பந்தரிடம் விபரம் கூறுகின்றனர். உடன் புறப்படுகிறார் சம்பந்தர். தடுக்கிறார் நாவுக்கரசர் நாளும் கோளும் சரியில்லை என்று கூறுகிறார்.
"வேயுறு தோளி பங்கன்" என்ற பதிகம்பாடி மதுரை வருகிறார் சம்பந்தர். அரசி மங்கையற்கரசியை சந்திக்கிறார்.அவரை வியந்து பாடுகிறார்.
மங்கையர்க்கரசி வளவர் கோன்பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச்செல்வி பாண்டிமாதேவி
பனி செய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்க்ண்ணி தன்னொடுமமர்ந்த
ஆலவாயாவது மிதுவே
சைவ நெறி செம்மல் சம்பந்தர் வருகை கண்டு அச்சமுற்ற சமணர் அவர் தங்கியிருந்த திருமடத்திற்குத் தீயிடுகின்றனர்."பையவே சென்று பாண்டியனுக்கு ஆகுக" என்று தீக்கு ஆனையிடுகிறார் சம்ப்ந்தர். பாண்டியன் வெப்பு நோயால் வாடுகிறான். சமணர்களால் அன் நோயைத் தீர்க்க இயலவில்லை சம்பந்தர் வருகிறார்.
"மந்திரமாவது நீறு" என்று பதிகம்பாடி நோயை நீக்கு கிறார். கூன் பாண்டியன் தனது தவறு உணர்ந்து மீண்டும் சைவ நெறியில் இனைகிறான். கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடு மாறனாக உயர்கிறான்.சூழ்ச்சி செய்த சமணரைக் கழுவேற்றுகிறான். சைவ நெறி தவறி சென்ற கணவன் மீண்டும் நேர் வழிக்கு மீட்டக் காரிகையைக் கண்டு உலகே வியக்கிறது. கணவனின் மனக்கூன் நிமிர்த்தி பீடு நடை போட செய்த அவள் தன் பெயருக்கு ஏற்ப மங்கையற்கரசியாக சிறக்கிறாள் வரலாற்றில் இடம் பிடிக்கிறாள்.
புகழ் புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
(குறள்)
திருக்குறட்செல்வர்!-11
கல்லும் மலராகும்
பக்தி!
இது பல வகைப்படும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வங்கள். அதற்கான் தனிவழிபாடுகள். நிவேதனங்கள், குறிப்பிட்ட மலர்கள் அபிஷேகங்கள் என்று பல வழிமுறைகள்.
சிவனுக்கு வில்வ அர்ச்சனை, திருமலுக்குத் துளசி அர்ச்சனை, மாரியம்மனுக்கு வேப்பிலை என வேறுபாடுகள் அர்ச்சிக்கும் பக்தரும் குறிப்பிட்ட முறையிலேயே உடை தரிப்பது வழக்கம். முறைகள் பலவாக இருந்தாலும் பக்தர்கள் சரணாகதி அடைவது இறைவன் திருவடியை மட்டுமே. எந்த வகையில் பூசித்தாலும் அவன் ஏற்பான் ஏனெனில் நாம் அனைவரும் அவன் குழந்தைகளே. குழந்தைகளிடம் பேதம் காட்டாத தாய் அவன். தாய்க்கு முரட்டுக் குழந்தையும் பிடிக்கும். மூடக்குழந்தையும் பிடிக்கும். எனவேதான் "பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பறிந்து" என்று போற்றுகிறோம். நதிகள் பல இடங்களில் பிறந்து பல வழிகளில் ஒடி வந்தாலும் முடிவில் கலப்பது கடலில்தான். அது போல அர்ச்சிக்கும் முறைகள் பல ஆனாலும் அர்ச்சிக்கப்படுவது இறைவனை மட்டுமே. இறைவனுக்கு பக்தனின் மனம் முக்கியமே தவிர அர்ச்சிக்கும் மலர்களின் மணம் முக்கியமல்ல. என்ன நம்ப முடிய வில்லையா?
காஞ்சிபுரத்தை அடுத்த திருச்சங்கமங்கை என்ற ஊரில் சாக்கிய நாயனார் வாழ்ந்து வந்தார் . இவர் சார்ந்த மதத்தின் பெயராலேயே இவர் அழைக்கப் பட்டார். இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் பரசமயங்கள் பற்றி அறிய காஞ்சியை அடைந்தார். அங்கு சாக்கிய (பெளத்த) மதத்தில் சேர்ந்து பெளத்தர்களின் முறைப்படி தலையை மழித்துத் துவராடை அணிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு நிறைவு இல்லை. சிவனை மறக்க இயலவில்லை சிவ நெறியே சிறந்த நெறி என்று தெளிந்தார்.
இருப்பினும் பெளத்த சின்னங்களை நீக்கவில்லை. தோற்றத்தில் பெளத்தத் துறவியாகவேத் திகழ்ந்தார். ஒரு நாள் சாலையோரத்தில் சிவலிங்கத் திருமேனியைக் கண்டார். தாயைக் கண்ட சேயானார் ஆழ் மனதில் அடங்கிக் கிடந்த சிவபக்திப் பொங்கித் ததும்ப அர்ச்சிக்க எண்ணினார். அருகில் கிடந்த சிறுகல்லை மலராக எண்ணி சிவலிங்கத்தின் மீது எறிந்தார்.இது தினமும் தொடர்ந்தது கல்லடி முடிந்த பின்னரே உணவு அருந்துவது என்பதை நியதியாகக் கொண்டார்.
இதனை காளமேகப்புலவர் குறும்பாக விமர்சிக்கிறார் வஞ்ச இகழ்ச்சியாக
கல்லால் அடித்தற்கோ காலால் உதைத்தற்கோ
வில்லால் அடித்தற்கோ வெட்கினீர்-சொல்வீரால்
மஞ்சுதனைச் சுடுமுயர் மதிலானைக்காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன்னாள்
அதாவது இறைவன் ந்ஞ்சு உண்டது தற்கொலை முயற்சியே! கல்லால் சாக்கிய நாயனார் அடித்தற்கா? கண்ணப்பன் செருப்புக் காலை முகத்தில் வைத்ததற்கா? அல்லது அர்ச்சுனன் வில்லால் அடித்தற்கா? எந்த அவமானம் காரணமாக நீ நஞ்சு உண்டாய்? என்று குசும்பாகக் கூறுகிறார். சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
ஒரு நாள் அயர்வு காரணமாக கல்லர்ச்சனை செய்ய மறந்து உணவு அருந்த அமர்ந்து விட்டார். சட்டென நினைவு வர உண்ணாது எழுந்து கல்தேடி அர்ச்சித்தார். இறைவன் காட்சி தந்து அவருக்குச் சிவபதம் அருளினான் பக்திக்கு வேடம் முக்கியமல்ல. மனமே என்று இறைவன் திருவாய் மலர்ந்து அருளினான்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்,-
(குறள்.)
திருக்குறட்செல்வர்!-12
ஞான ஒளி வீசிட்ட நங்கை
மனைவி!
மனையைப் பொலிவுறச்செய்பவள் மனைவி. இதை நலிவுறச்செய்வதும் அவளே. எனவேதான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று திரைப்படபாடலும் இயம்புகிறது. அப்படி சிறப்பான மனைவி அமைந்து அவளை விட்டு விலகி. ஒதுக்கி வைத்துப் வேறோரு புது மனைவியுடன் புது வாழ்வு. கண்டான் ஒருவன். அவன் மனைவி அழவில்லை-புலமபவில்லைத் தன் அழகெல்லாம் நீத்து ஆண்டவனுக்கே அன்னையாக உயர்ந்தாள் அந்த புண்ணியவதியின் கதை தெரியுமா?
காரைக்கால்!
இத்தலத்தில் பரமதத்தனின் மனைவி புனிதவதி, நிதி மிகுந்த பெருவணிகன் பரமதத்தன். இனிதே இல்லறம் நடத்திய புனிதவதி சிந்தையைஸ் சிவன் பால் வைத்தவர். சிவனடியார்களுக்கு உணவு படைக்கும் சிறிய தொண்டை சிறப்பாக செய்து வந்தார். இவருடைய சிறப்பை உலகுக்கு உண்ர்த்த எண்ணினான் சிவன்.
ஒரு நாள் பரமதத்தனின் நண்பன் ஒரு மரத்து மாங்கனிகள் இரண்டினைத் தந்தான்,அதனை வேலையாள் முலம் வீட்டுக்கு அனுப்பிவைத்தான் பரமதத்தன். இறைவன் முதியவர் வேடம் தாங்கி பசி என்று புனிதவதியிடம் யாசிக்க "இன்னும் சமையல் முடியவில்லை, சற்றே பொறுங்கள்" என்கிறார் புனிதவதி புனிதவதியின் பெருமை தெரியும் சமயம் வந்து விட்டது; எனவே "பொறுக்கமுடியாத பசி " என்கிறார் பெரியவர். மோர்சாதம் படைக்கிறாள் மாம்பழத்துடன். உண்டு முடித்து மறைகிறான் இறைவன்.
பின்னர் கணவன் வருகிறான், மாம்பழத்துடன் உணவு படைக்கிறார் புனிதவதி, கனியின் சுவையில் மயங்கியகணவன் இன்னொரு பழத்தையும் கொணர்க என்கிறான். திகைக்கிறாள் மனைவி. இறைவனிடம் முறையிடுகிறாள். இறையருளால் ஒரு மாங்கனிகிடைக்கிறது. அதனையும். கணவனுக்குத்தருகிறாள் காரிகை, சுவைத்தவன் கேட் கிறான்? இந்த பழம் அந்தப் பழத்தைவிட சுவை அதிகம் எப்படி சாத்தியம்? பொய்மை விரும்பாத புனிதவதி நடந்தது நடந்தபடி கூறுகிறாள், நம்பாத கணவன் இன்னொரு முறை கனியை வாங்கிக்காட்டு பார்க்கலாம் என்கிறான் நக்கலாக.
மீண்டும் இறைவனிடம் இறைஞ்சுகிறாள், மீண்டும் ஒரு மாங்கனி மங்கையின் கைகளில் அமர்ந்து மறைகிறது. திகைகிறான் கணவன் இத்தனை சிறப்பு வாய்ந்த வளை மனைவியாக ஏற்கவில்லை மனம் அயல் நாடு செல்லும் முடிவு எடுக்கிறான். சென்று பெரும் பொருள் சேர்த்து தாய் நாடு திரும்புகிறான். சொந்த ஊர் வராமல் பாண்டிய நாடு சென்று புதுவாழ்வு துவங்குகிறான் வேறோரு புது மனைவியுடன். புதியவளிடம் பழையவள் பற்றிக்கூறவில்லை. பழையவளிடம் நாடு திரும்பியதுப் பற்றித் தெரிவிக்கவில்லை இரட்டை வாழ்வு வாழ்கிறான். இருப்பினும் மனசாட்சியின் கூக்குரலுக்குப் பயந்து மகளுக்கு புனிதவதி என்று பெயரிடுகிறான். தான் எந்த சுக போகங்களையும் குறைத்துக் கொள்ள வில்லை, புனிதவதி பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அந்த சுய நலக் கணவன்.
இதே போன்று ஆண் ஞானிகள் விலகிச் சென்ற போது எந்த மனைவியும் புதுமணம் புரிந்ததாக சரித்திரம் இல்லை. ஆணாதிக்க மனோபாவம் அன்று முதல் இன்று வரை தொடர் கதை, செய்தி அறிந்த புனிதவதி கணவனைக்காண வருகிறாள் உறவினர்களுடன், மனைவி மகளுடன் காலில் வீழ்கிறான் கணவன் துடிக்கிறாள் பேதை, கணவனுக்காக் கட்டிகாத்தக் கட்டுடலை நீத்துப் பேயுரு ஏற்கிறாள். கைலாயம் செல்கிறாள் தலையால் நடந்து. அம்மையே என்று எதிர்கொள்கிறான் இறைவன்.
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்-உன்னை
என்றும் மறவாமை வேண்டும்- சேக்கிழார்.
என்று மன்றாடுகிறாள்.உலகியல் பற்றுகளைத்துறந்தவள் இறைவன் மீது கொண்ட பற்றைத் துறக்க இயலாது அவனிடம் யாசிக்கிறாள்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு -
(குறள்)
திருக்குறட்செல்வர்!-13
சொன்னவண்ணம் நின்றவர்.
வாக்குறுதி!
இதை நிறைவேற்றப் பல்வேறு தியாகங்களைஸ் செய்ய வேண்டும். அரிச்சந்திரன் தன் வாக்கைக் காப்பாற்ற எத்தனை இன்னல்களை எதிர்கொண்டான். அதை நாடகமாகக் கண்ட காந்திஜி தானும் அதுபோல சத்ய சந்தராகவே வாழ்ந்து சத்யசோதனையை நமக்குத் தந்தார். மேலும் உண்மையை கடவுள் என்ற உண்மையையும் கண்டறிந்தார்.
சொன்ன வாக்குத் தவறாது உண்மையாக நடந்து கொள்வதே வாக்குறுதி, எனவே தான் பள்ளிக் கூடம் முதல், பதவி ஏற்பு வரை உறுதி மொழி ஏற்கிறோம். கோர்ட்டிலும் நான் சொல்லுவதெல்லாம் உண்மை என்று உறுதி கூறுகிறோம். ஆனால் நாம் கூறும் உறுதிமொழிகளுக்கு ஏற்ப் நடகிறோமா என்பதே கேள்வி? இது ஒரு நடைமுறை சம்பிரதாயம் என்ற முறையிலே நடக்கிறது! சொல்லும் செயலும் ஒன்றாக அமைவதே உண்மையான் வாக்குறுதி.
மகாபாரத் பீஷ்மரும் திரு நீலகண்ட நாயனாரும் சொன்ன வாக்குறுதிக்காகத் தங்கள் இளமையையேத்தொலைத்தவர்கள். பசி வந்த போதுகூடத் தன் வாக்குறுதியிலிருந்து வழுவாது வாழ்ந்த ஒரு பக்தரைக் காண்போமா?
அதிபத்தர்!
இவர் நாகைப்பட்டினத்தை அடுத்த நம்பியார் குப்பத்தின் தலைவர் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்கி பெரும்பொருள் ஈட்டி பெரும் செல்வராக வாழ்ந்து வந்தார். சிவனின் பால் மிகுந்த பக்தி கொண்டவர்.அதனால் அதி பக்தர் என்றே அழைக்கப்பட்டார். இவர் மீன் பிடிக்கும் போது தினமும் ஒரு சிறந்த மீனை சிவனுக்கு அர்ப்பணம் என்ன்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவார், இது நாளும் தொடர்ந்தது. இவரது பக்தி வலையில் வசமாகஸ் சிக்கினான் சிவன். தன் பக்தனின் பெருமையை உலகறியஸ் செய்யத் திரு உளம் கொண்டான் அவன்.
இவர் வலையில் தினமும் ஒரே ஒரு மீன் மட்டுமே அகப்படஸ் செய்தான். அந்த மீனையும் இறைவனுக்கே அர்ப்பணம் எனக் கடலில் விட்டு வீடு திரும்பினார். இருப்பதை விற்று குடும்பம் நடத்தினார். குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதற்கு இணங்க எல்லா வற்றையும் விற்று முடித்து உணவுக்கே வழி இல்லாத நிலை. பசி பட்டினி. குடும்பமே அல்லாடியது. அப்போதும் தன் கொள்கையில் மாறவில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியைப் பொய்யாக்கித் தன் கொள்கையில் மாறாது நின்றார்! எனை ஆளும் ஈசனின் திருவுளம் எதுவோ அது நடக்கட்டும். நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும் என்ற உறுதியுடன் பசிக் களைப்புடன் கடலுக்கு சென்றார்.
என்ன சோதனை அவர் வலையில் எதுவுமே சிக்கவில்லை. அவரது பக்தி வலையில் சிக்கிய சிவனின் லீலை இது. தன் பக்தனின் பிறவித் தளையை அருக்கும் நேரம் வந்து விட்டது என்று எண்ணினான், சிவபெருமான். பொன்மயமான ஒரு மீனைப் படைத்தான் மீனாட்சியின் மணவாளன். பொன்மீன் அதிபத்தர் வலையில் சிக்கியது. அதிசய மீனை கண்டு ஆரவாரம் செய்தனர். உடன் வந்த வலை ஞர்கள்,"வைரமும்,முத்தும் வைத்து இழைத்தத் தங்கமீன்.இதை விற்றால் பெரும் பொருள் கிடைக்கும் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம் " என்றனர்.
இன்று எம்பெருமானுக்கு அர்ப்பணிக்க இந்த மீன் கிடைத்தது. நான் செய்த பேறு" என்று கூறி கடலில் விட்டார் தங்கமீனை, தேவர்கள் பூமாரி பொழிய இறைவன் அம்மையுடன் காட்சி அளித்தான். "உன் பக்தி கண்டு உலகு உய்யவே இந்த ஏற்பாடு. நீ எம் அடியார்களுடன் இனிஸ் சிவலோக வாசி ஆவாயாக" என்று அருளி மறைந்தார் அதி பக்தரின் அதிபக்தி கண்டு உலகே வியந்தது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
(குறள்)
திருக்குறட்செல்வர்!-14
கடையனையும் கடைந்தேற்றியவர்
தண்டனை!
தவறு செய்தவர்களை தட்டிக்கேட்டு ஒறுப்பதே தண்டனையாகும். அதாவது குற்றம் செய்தவனை திருத்துகிறேன் என்று சொல்லி தாமும் தண்டனை என்ற மற்றொரு குற்றம்புரிவதே தண்டிப்பாகும்.
இது பலவகைப்படும் சிறை,அபராதம், சவுக்கடி, நாடு கடத்தல், இது அல்லாது மரணதண்டனை கூட உண்டு. அண்மைக் காலத்தில் மரணதண்டனை கூடாது என ஒரு அலை எழுகிறது. கொலை செய்தவனுக்கு தண்டனை இன்னொரு கொலையா என்பதே இவர்களின் வாதம்!
இந்த பலவகைப்பட்ட தண்டனைகளிலும் மேம்பட்டு கடுமையான ஒரு தண்டனை உண்டு. ஆனால் அந்த தண்டனையை அளிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
ஏன் அந்த தண்டனையை ஒதுக்கி வைக்கின்றனர். அந்த தண்டனையை அளிப்பதற்கு நல்லமன உறுதி வேண்டும். அது இல்லாதவர்களே இந்த தண்டனையை ஒதுக்குகின்றனர். அது என்ன தண்டனை? அதன் பெயர் என்ன என்பதே நம் கேள்வி அதன் பெயர்.................
மன்னிப்பு!
ஆம் மன்னிப்பை விட பெரிய கொட்ந்தண்டனை எதுவும் கிடையாது. தண்டித்தால் வன்மம் தான் வளரும், மன்னித்தால் மனம் தெளியும் சிந்திக்க சிந்திக்க தவறுகளின் அடிப்படை புரியும் திருந்த வாய்ப்பு கிடைக்கும். அப்படி மன்னித்து உயர்ந்த மா மேதையைக் காண்போமா?
திருமுனைப்பாடி!
இதை ஆண்ட குறு நில மன்னர் நரசிங்கமுனையரையர். சிவன் பால் மாறாத காதல் கொண்டவர். சுந்தரரின் வள்ர்ப்பு தந்தை அவரைத் தனது அபிமான் புத்திரராக வரித்தவர்.
திருவாதிரை நட்சதிரத்தன்று விசேஷ பூஜைகள் செய்து சிவனடியார்களுக்கு அன்னமிட்டு பொற்காசுகள் வழங்குவது இவரது வழக்கம் சிவனுக்கு உகந்த நாள். திருவாதிரை பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறான். நான் மாதங்களில் மார்கழியாகவும் நட்சத்திரத்தில் திருவாதிரையாகவும் இருக்கிறேன் என்று.
எனவே தான் மார்கழி திருவாதிரை வெகுவிசேஷம் தில்லையில் அன்று தரிசனம்.
ஒரு திருவாதிரை நாள் அன்று விசேஷ பூஜைகள் செய்து அடியார்க்கு அன்னமிட்டு பொற்கிழி வழங்கி கொண்டு இருந்தபோது, காமக்குரோத களியாட்டங்களில் மூழ்கி தன்னையே இழந்த ஒரு அடியாரும் கலந்து கொண்டார். சிவ சின்னம் தரித்தவர். ஆனாலும் ஒழுக்கம் தவறியவர் என்று அனைவராலும் அறியப்ப்ட்டவர். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க...........
நரசிங்க முனையரையர் அவரையும் உபசரித்து வணங்கி மற்ற அடியார்களுக்கு வழங்கியதை விட அதிகப் பொற்காசு கள் வழங்கினார். அதன் பின்னர் அந்த அடியார் நாணித்தலை கவிழ்ந்து தன் நிலை உணர்ந்து திருந்தினார் என்று சொல்லவும் வேண்டுமா?
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
(குறள்)
திருக்குறட்செல்வர்!-15
பழிக்குப்பயந்தவர்
பழி!
இதற்குப் பயப்படாதவர்கள் பலர் உண்டு, குற்றங்களினால் ஏற்படும் பழிக்குப் பயப்படாது தனது குற்றத்தை நியாயப்படுத்துபவர்கள் இவர்கள் இவர்களைப் பஞ்ச மாபாதகர்கள் என்பர் பெரியவர்கள் தன்னுடைய குற்றங்களை நியாயப் படுத்துபவர்கள் துராத்மாக்கள்.
ஆனால் நல்லவர்கள் பழிக்கு அஞ்சுவார்கள், அதற்குப் பிராய் சித்தம் தேடுவார்கள். அதவது தாங்கள் நேரடியாகத் தவறு செய்யாவிட்டாலும் தன்னைச் சார்ந்தவர்கள் தவறு செய்தாலும் அந்தக் குற்றங்களுக்குத் தாமும் காரணம் என்று தார்மீகப் பொறுப்பு ஏற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மகாத்மாக்கள். வீண் பழியினால் அவச்சொல் அவமானம், மன உளைச்சல் என பல் வேறு நெருக்கடிகள்.
"சாரி செளரா" காவல் நிலையத்துக்குத் தொண்டர்கள் தீ வைத்ததற்குத் தாமே பொறுப்பு என்று உண்ணா விரதம் மேற் கொண்டார் கந்தி அடிகள். அரியலூரில் பெரு வெள்ளம் காரணமாக ஏற்பட்ட ரயில் விபத்துக்குத் தாமே பொறுப்பு என்று கூறி பதவி விலகினார் ரயில்வே அமைச்சர் "லால் பகதூர் சாஸ்திர்" அவர்கள். இப்படி பழிக்கு அஞ்சிய இவர்களால் நாம் பெருமிதம் கொள்கிறோம்! நம் நாட்டின் பெருமை அகில உலகத்திலும் பேசப்படுகிறது!! இது இன்று நேற்று ஏற்பட்டப் பழக்கம் அல்ல! தொன்று தொட்டு நிலவி வரும் நம் பாரம்பரிய பழக்கம் இது!
ஆம்!
பல்லாண்டுகளுக்கு முன்னே புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் இயற்பெயரே புகழ்ச்சோழனா அல்லது பழிக்கு அஞ்சி செயற்கரிய பிராயசித்தம் செய்தமையால் ஏற்பட்டக் காரணப் பெயரா யாமறியோம் நமக்குத் தெரிந்தது எல்லாம் இவனது புகழ்பெற்ற செயல்கள் மட்டுமே.
ஒரு சமயம் இவன் கருவூரில் தங்கி இருந்த போது சிவகமி ஆண்டால் எனும் சிவனடியார் சிவனுக்காக கொண்டு சென்ற பூக்குவலையை பட்டத்து யானை துவைத்து நாசம் செய்து விட்டது. அபயம் என்று அவர் அழுத குரல் கேட்டு எறிபத்த நாயனார் என்னும் அன்பர் மன்னரின் பட்டத்து யானையையும் உடன் வந்த வீரர்களையும் கொன்று குவித்தார். செய்தி கேட்டு வந்த புகழ்ச்சோழன் கோபம் கொண்டான். யானையை வெட்டியது சிவனடியார் என்றும் யானை சிவனுக்கு உரிய மலர்களை சிதைத்ததையும் அறிந்தான். யானையை வெட்டியது போதாது யானையின் உரிமையாளன் என்னையும் வெட்டுக என்று த்லை கொடுக்கிறான்.தடுத்து தன் தலையை வெட்ட எறிபத்த நாயனார் முற்பட இறைவன் காட்சியளித்து இறந்தவர்களையும் யானையையும் உயிர்ப்பிக்கிறான். இவன் புகழ் ஒங்க ஆசி கூறினான்.
அப்படிப்பட்டப் புகழ் சோழன் சிலகாலம் சென்றதும் தனக்குக் கப்பம் கட்ட மறுத்த அதிகன் என்ற மன்னன் மீது போர் தொடுத்தான் போரில் தோற்று அதிகன் ஒடி ஒளிய வீரர்களைக் கொன்று அவன் நாட்டைக் கைகொண்டனர் சோழ வீரர்கள்.
சோழ வீரர்கள் அதிகனின் வீரர்களின் தலைகளைக் கொய்து புகழ்ச்சோழன் காலடியில் சமர்ப்பித்தனர். தலைகளை பார்வையிட்ட மன்னனின் தலையில் இறங்கியது இடி, வெட்டுண்ட ஒரு தலையில் சிவச் சின்னமானசடை இருந்தது.சிவனடியாரைக் கொன்றபழிக்கு ஆளானேன் என்று கூறி வருந்தினான், மெய் கோர்ந்து அழுது அரற்றினான். பின் தெளிந்தான்.
தன் மகனிடம் ஆட்சி ஒப்படைத்து, வெட்டுண்ட சிவனடியார் தலையை தன் தலையில் சுமந்து தீக்குளித்தான். தேவர்கள் தந்துபி முழங்கி மலர் மாரி பொழிய இறைவன் திருவடி நிழலை அடைந்தான்.
தினைத்துனையாம் குற்றம் வரினும் பனைத்துனையாக்
கொள்வர் பழி நானுவார் -
(குறள்)