வலைவிரிப்பு
கற்றலின் கேட்டல் நன்று. கேட்டலின் பார்த்தல் நன்று. இது பழமொழி. இன்றைய வலைதளம் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறது. அதாவது அனைவரையும் பார்த்துக் கற்க வைக்கிறது. பார்த்து சந்தேகம் கேட்க வைக்கிறது. இந்த வலை வீச்சு புதியதொரு அலைவீச்சு.
இந்த வலைதளம் எனது பேரன் எனக்காக விரிக்கப்பட்டவலை இந்த பாச வலையில் வசமாக மாட்டிக்கொண்டேன் ஆயுளுக்கும் மீளமுடியாத வலை. இந்த வலையில் அளவளாகி மகிழ உங்களை அழைக்கிறேன்.
எட்டாம் வகுப்பில் இடை நிறுத்தம் செய்த நான் எழுத வந்தது எப்படி என்று எல்லோரிடமும் ஒருகேள்வி. இது எனக்குள்ளும் எழும் கேள்வியும் கூட. அந்த கேள்விக்குத் தற்போது தான் விடை கிடைத்தது. எந்த காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்பது இயற்கையின் நியதி. அதாவது "காஷ் அண்ட் எபெக்ட்". நான் எழுத அமைந்த காரணம் ஒரு பெரிய பிளாஷ்பேக்!
குரு சீடர்களுக்குத் தீட்சைத் தருவதை மூன்று வகையில் பிரிப்பார்கள்.
1.நயனதீட்கை:
கண்களால் உணர்த்துவது. மீன் தன் முட்டைகளைத் தன் பார்வையாலேயே அடைகாக் காத்து குஞ்சு பொரிக்கச் செய்வது. எனவேதான் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர். பால்பிரண்டன் ரமணமகரிஷியிடம் பெற்றது இந்தவகை தீட்சையே.
2. ஞானதீட்சை:
குரு இருந்த இடத்தில் இருந்தே ஞான திருஷ்டி மூலமாகதீட்சை அருளுவது. ஆமைகடற்கரையில் முட்டையிட்டு கடலுக்குச் சென்றுவிடும். அங்கிருந்தபடி தன் எண்ணங்களால் அடைகாத்து குஞ்சு பொறிக்க வைத்து கடலுக்கு அழைத்துக் கொள்ளும். இந்தியரான அரவிந்தர் பிரான்ஸ் நாட்டு "மிர்ரா"வுக்கு உபதேசித்தது இந்த வகையான தீட்சையே.
3. ஸ்பரிசதீட்சை
தொடு உணர்ச்சி மூலம் ஞானத்தை உணர்த்துவது. "ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்" விவேகானந்தரைத் தன் கால் பெரு விரலால் அழுத்தித்தீட்சைத் தந்தார் என்பது வரலாறு. உதாரணமாக கோழி தன் முட்டை மீது அமர்ந்து குஞ்சு பொறிக்கச் செய்வது.
இரண்டு மாமேதைகள் எனக்குச் சிறுவயதிலேயே எனக்குத் தெரியாமலேயே தந்த ஸ்பரிச தீட்சையே எனக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியது என்பது தான் உண்மை. அந்த மேதைகள்.
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத்தலைவர் அமரர் எம். எம். தண்டபாணிதேசிகர் அவர்கள்.
2. அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் அமரர் ச.தண்டபாணிதேசிகர் அவர்கள்.
இவர்கள் இருவருமே என் தந்தை வழியில் நெருங்கிய உறவு. அவர்களின் உயரம் தெரியாமலே அவர்கள் மடியில் விழுந்து புரண்டு விளையாடி இருக்கிறேன். அப்போது தற்செயலாக ஏற்பட்ட ஸ்பரிசதீட்சை காரணமாகவே 50 வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலமாக வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றேன். 60 வயதில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியைப்" பட்டயப்படிப்பில் தேர்வு பெற்றேன்.
59 வயதில் எழுத ஆரம்பித்தேன். திருமலைராயன் பட்டணத்தில் பிரஞ்சு வழியில் எட்டாம் வகுப்பை பயின்ற எனக்கு கவிதையும் கதையும் கட்டுரையும் கைவந்தது அன்று அவர்கள் தந்த ஸ்பரிச தீட்சையே என்று நம்புகிறேன்!
அவர்கள் ஆசியுடன் பேரன் எனக்காக விரித்த வலையில் உங்களைச் சந்திக்க ஆவல். வலை பெரிதாக இருந்தால் நிறைய மீன் கிடைக்கும் என்பது பழமொழி. அந்த வகையில் இந்த பாசவலையில் இணைந்து பெரிய வலையாக்க எங்களோடு உங்களை இணைக்கக் கவலையோடு காத்து நிற்கும்,
உங்கள்
மாங்குடிபாலா
கற்றலின் கேட்டல் நன்று. கேட்டலின் பார்த்தல் நன்று. இது பழமொழி. இன்றைய வலைதளம் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறது. அதாவது அனைவரையும் பார்த்துக் கற்க வைக்கிறது. பார்த்து சந்தேகம் கேட்க வைக்கிறது. இந்த வலை வீச்சு புதியதொரு அலைவீச்சு.
இந்த வலைதளம் எனது பேரன் எனக்காக விரிக்கப்பட்டவலை இந்த பாச வலையில் வசமாக மாட்டிக்கொண்டேன் ஆயுளுக்கும் மீளமுடியாத வலை. இந்த வலையில் அளவளாகி மகிழ உங்களை அழைக்கிறேன்.
எட்டாம் வகுப்பில் இடை நிறுத்தம் செய்த நான் எழுத வந்தது எப்படி என்று எல்லோரிடமும் ஒருகேள்வி. இது எனக்குள்ளும் எழும் கேள்வியும் கூட. அந்த கேள்விக்குத் தற்போது தான் விடை கிடைத்தது. எந்த காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்பது இயற்கையின் நியதி. அதாவது "காஷ் அண்ட் எபெக்ட்". நான் எழுத அமைந்த காரணம் ஒரு பெரிய பிளாஷ்பேக்!
குரு சீடர்களுக்குத் தீட்சைத் தருவதை மூன்று வகையில் பிரிப்பார்கள்.
1.நயனதீட்கை:
கண்களால் உணர்த்துவது. மீன் தன் முட்டைகளைத் தன் பார்வையாலேயே அடைகாக் காத்து குஞ்சு பொரிக்கச் செய்வது. எனவேதான் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர். பால்பிரண்டன் ரமணமகரிஷியிடம் பெற்றது இந்தவகை தீட்சையே.
2. ஞானதீட்சை:
குரு இருந்த இடத்தில் இருந்தே ஞான திருஷ்டி மூலமாகதீட்சை அருளுவது. ஆமைகடற்கரையில் முட்டையிட்டு கடலுக்குச் சென்றுவிடும். அங்கிருந்தபடி தன் எண்ணங்களால் அடைகாத்து குஞ்சு பொறிக்க வைத்து கடலுக்கு அழைத்துக் கொள்ளும். இந்தியரான அரவிந்தர் பிரான்ஸ் நாட்டு "மிர்ரா"வுக்கு உபதேசித்தது இந்த வகையான தீட்சையே.
3. ஸ்பரிசதீட்சை
தொடு உணர்ச்சி மூலம் ஞானத்தை உணர்த்துவது. "ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்" விவேகானந்தரைத் தன் கால் பெரு விரலால் அழுத்தித்தீட்சைத் தந்தார் என்பது வரலாறு. உதாரணமாக கோழி தன் முட்டை மீது அமர்ந்து குஞ்சு பொறிக்கச் செய்வது.
இரண்டு மாமேதைகள் எனக்குச் சிறுவயதிலேயே எனக்குத் தெரியாமலேயே தந்த ஸ்பரிச தீட்சையே எனக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியது என்பது தான் உண்மை. அந்த மேதைகள்.
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத்தலைவர் அமரர் எம். எம். தண்டபாணிதேசிகர் அவர்கள்.
2. அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் அமரர் ச.தண்டபாணிதேசிகர் அவர்கள்.
இவர்கள் இருவருமே என் தந்தை வழியில் நெருங்கிய உறவு. அவர்களின் உயரம் தெரியாமலே அவர்கள் மடியில் விழுந்து புரண்டு விளையாடி இருக்கிறேன். அப்போது தற்செயலாக ஏற்பட்ட ஸ்பரிசதீட்சை காரணமாகவே 50 வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலமாக வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றேன். 60 வயதில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியைப்" பட்டயப்படிப்பில் தேர்வு பெற்றேன்.
59 வயதில் எழுத ஆரம்பித்தேன். திருமலைராயன் பட்டணத்தில் பிரஞ்சு வழியில் எட்டாம் வகுப்பை பயின்ற எனக்கு கவிதையும் கதையும் கட்டுரையும் கைவந்தது அன்று அவர்கள் தந்த ஸ்பரிச தீட்சையே என்று நம்புகிறேன்!
அவர்கள் ஆசியுடன் பேரன் எனக்காக விரித்த வலையில் உங்களைச் சந்திக்க ஆவல். வலை பெரிதாக இருந்தால் நிறைய மீன் கிடைக்கும் என்பது பழமொழி. அந்த வகையில் இந்த பாசவலையில் இணைந்து பெரிய வலையாக்க எங்களோடு உங்களை இணைக்கக் கவலையோடு காத்து நிற்கும்,
உங்கள்
மாங்குடிபாலா