ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.
முன்னுரை:
தேவாரம் முதலிய பக்தி நூல்களின் தொகுப்புக்கு திருமுறைகள் என்று பெயர். தமிழில் உயிர் எழுத்துக்கள் பண்ணிரண்டு, அது போல் பக்திக்கு உயிர் நாடியான திரு முறைகளும் பண்ணிரண்டு.முறை என்றால் நூல் என்று பொருள், திரு முறை என்றால் இறைவனை போற்றிப் பாடும் நூல்கள் என்று பெயர்.
மேலும் முறை என்றால் நெறி, வழி என்றும் பொருள், திருமுறை என்றால் செம்மையான நெறி ,சிறந்த வழி என்றும் பொருள் கொள்ளலாம். நமது வாழ்வுக்குத் தேவையான நெறிகளையும்,முறைகளையும் தெள்ளத் தெளிவாகப் புகட்டுவது இந்தத் திருமுறைகளே ஆகும்.
கிட்ட தட்ட 6 ம் நூற்றாண்டு இருதியில் பாடதலை பட்டு இவை 10 ம் நூற்றாண்டில் தொடுக்கப்பட்டது. இருப்பினும் இவை பாமரர்களை அதிகம் சென்றடைய வில்லை காரணம் பல்வேறு படை எடுப்புகள்.ஆட்சி மற்றங்கள்.
இந்த நிலை மாறியது 20 ம் நூற்றாண்டில் தான் மாற்றியவர் அமரர் திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். தேவாரப் பண்ணை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் இவரே. இவரது தேவார இசை தட்டுகள் ஒலிக்காத ஆலயங்களே இல்லை எனலாம் . குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி , திருவெம்பாவை மார்கழி பனியுடன் இவரது குரலைக் கேட்கும் போது நமக்கு சிலிர்க்கும். மனம் சில்லிட்டுப் போகும். இவரது குரலை இசைத்தட்டில் கொண்டுவந்த பெருமை தருமை ஆதீனத்தையேசாரும்.
அடுத்து தருமபுரம் சுவாமினாதன் அவர்கள்,திருமுறை சித்தராகவே வாழ்ந்தவர் தற்போது சாமி தண்டபாணி அவர்கள் பெரிதும் தன்னை திருமுறைக்காவவே அர்ப்பணித்து கொண்டவர்.
பின்னர் இசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தை "சிம்பொனியில்" தந்து உலக அரங்கில் உன்னத இடம் பெறச்செய்தார்.நமது தமிழ் மேலை நாடுகளிலும் ஒலிக்கச்செய்தவர் இவரே. இப்படிப்பட்ட தேவார திரு வாசக பண்களை ஒதுபவர்கள் ஒதுவார்கள் என்று அழைக்கப்பட்டனர் ஒதுதல் என்றால் பாராயணம் என்றுப்பொருள்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.1
ஒதுவது ஒழியேல்...
ஒதாமல் ஒரு நாலும் இருக்க வேண்டாம்... என்பது மரபு. ஒதுவது என்பது படிப்பது,படிப்பிப்பது,கற்பது,கற்றுக் கொடுப்பது எனபல் வேறு பொருள்கள் உண்டு.வேதம் ஒதுதல் என்பதே வழக்கு.அதாவது வேத பாராயனம் செய்வது,அந்தக் காலத்தில் எழுதிப் படிக்கும் வழக்கம் இல்லை.வாய்வழி கேட்டே கல்வி பயின்றார்கள்.அதுவும் இசையுடன்.அவர்கள்வேத விற்பன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
திருமுறைகளுக்கும் திராவிட வேதம் என்றே பெயர் வழங்கப்பட்டது.இருப்பினும் திராவிட வேதத்திற்கு அதிகம் முக்கியதுவம் கிடைக்கவில்லை காரணம்.ராஜராஜன் காலத்தேதான் தேவாரங்கள் சிதம்பரத்தில் கண்டு எடுக்கப்பட்டன.இருந்தும் அவன் காலத்தே தேவாரம் அதிக முக்கியதுவம் பெறவில்லை.ஆயினும் இவன் காலம் தொட்டே 63 மூவருக்கு சிலைகள் ஆலயத்தில் அமைக்கப்பட்டன.இருப்பினும் ஆட்சியிலும் ஆலயத்திலும் வடமொழிக்கே அதிகம் முக்கியதுவம் தரப்பட்டது.ஆலயத்தை ஒட்டி அவர்கள் வசிக்க அக்கிரஹாரம் என்று வீதி அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டனர்.ஆலயத்தில் நான்கு வேதங்களே முழங்கியது,திராவிடவேதம் ஒதுக்கப்பட்டது.அ+கிரக+ஹாரம், அந்தனர்கள் வசிக்கும் வீடுகளின் மாலை என்ற பொருளில் அக்கிரஹாரம் என்ற சொல் வழக்கில் வந்தது இது இன்றும் பல ஊர்களில் உண்டு இது இனாம் சாசனம் செய்யப்பட்டது.
களப்பிரர்கள் ஆட்சியில்தமிழகம் இருண்டுகிடந்த போது,ஒளியேற்ற வந்தவர்கள் பல்லவர்கள். இவர்கள்தொண்டைமான்,இளந்திரையன் வழி வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். சோழ இளவரசனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவன் இவன்.இவர்கள்பயனித்தக் கப்பல் புயலில் சிக்கியது தொண்டைக் கொடியால் பாலகனை ஒரு பலகையில் கட்டிக் கடலில் இட்டனர், பெற்றோர்.இளம்திரைகளால் கடற்கரையில் ஒதுங்கியவனே பின்னாளில் தொண்டைமான் இளந்திரையன் ஆனான். இவன் வழிவந்தவர்கள்களே பல்லவர்கள் இளம் திரை என்றால் கடல் அலைகள்.தொண்டைக் கொடியால் பினைக்கப்பட்டு இளம்திரையில் மிதந்து வந்தவன் ஆனதால் தொண்டைமான் இளந்திரையன் என்று பெயர்பெற்றான்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.2
இந்தத் தொண்டைமான் இளந்திரையன் பற்றி அமரர் கல்கி அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" நாவலில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.அவர் நடையும்,மணியம்,வினுவின் ஒவியக் கொடையும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் அற்புத அனுபவங்கள்,அது சொல்லில் அடங்காத அனுபவம், சொல்லில் புரியவக்க முடியாத அனுபவம்.
இந்த இளந்திரையன் வழி வந்த சிம்ம விஷ்னுவே களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன். இவன் மகன் மகேந்திரவர்மன் கல்லிலே லலை வண்ணம் கண்டவன்.சித்திரகாரப்புலி என்ற பட்டம் பெற்றவன்.புதியதொரு யாழைக்கண்டு பிடித்தவன்,குடுமியான் மலை கல்வெட்டுகள் இவன் இசைத்திறமை புகழ் பாடுகிறது. செங்கல்,இரும்பு,இன்றிகற்றளி கோவில்கள் கண்ட கதா நாயகன் இவனே. இவனது கொடையே மாமல்லபுரம்,சமயச்சீரழிவு பற்றி ஒரு நாடகமும் இயற்றி இருக்கிறான் இவன்.
இவன் கி.பி. 6 ம் நூற்றாண்டு இறுதியிலும் 7 ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவன். இவன் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமுறை தந்த நாவுக்கரசரும்,ஞானசம்பந்தரும்.மன்னன்சமணத்தைச்சார்ந்தவன்.நாவுக்கரசரின் ஆரம்பகாலப் பெயர் மருள் நீக்கியார் இவரும் சமணத்தைச்சார்ந்தவரே,இவரது சகோதரியின் முயற்சியால் இவர் மீண்டும் சைவத்திற்கு திரும்பினார்.மன்னனையும் சைவத்திற்கு திருப்பினார்.
இறைவன் நாவுக்கரசரை சூலை (நோய்)தந்து ஆட்கொண்டான், சம்பந்தரை பாலைத் தந்து ஆட்கொண்டான்,சுந்தரரை ஒலைதந்து ஆட்கொண்டான்.
நாவுக்கரசர் தன்னை அடிமையாகவும் ஆண்டவனை ஆண்டானகவும் பாவித்து பாடியவர் எனவே இவர் தமிழ் "கெஞ்சுதமிழ்" ,சம்பந்தர் தந்தையாகவே இறைவனைக் கண்டார்.எனவே இவரது பாடல்கள் தகப்பனிடம் மகன் பேசுவது போன்றது. எனவே அது "கொஞ்சு தமிழ்" சுந்தரர் இறைவனைத் தன் தோழனாகவே கண்டார். பறவையிடம் தூது சென்றார், திருக்குவளையிலிருந்து ஆருருக்கு நெல் கொணர்ந்தார் எனவே இவர் தமிழ் "விஞ்சுதமிழ்" என்று வாகீசகலா நிதி அமரர் கி.வா.ஜகன் நாதன் அவர்கள் அழகுறப்பட்டியல் இடுகிறார்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.3
மகேந்திரவர்மனுக்கும், அவன் மகன் மாமல்லனுக்கும் படைத்தளபதியாக அமைந்த பரஞ்சோதியே பின்னாளில் பிள்ளைக் கறியமுது தந்து சிறுதொண்டராக உயர்ந்தவர். இவர் தலைமையிலே மாமல்லன் இரண்டாம், புலிகேசியை வெற்றி கொண்டான்.வாதாபியிலிருந்து கொணர்ந்த கணபதியைத் தனது ஊரான "திருச்செங்காட்டான் குடியில்" பிரதிஷ்டை செய்தார் பரஞ்சோதி,திருவாருரில் இருப்பதே வாதாபி கணபதி என்று வாதிடுவோரும் உண்டு,எது எப்படி இருந்தாலும்"வாதாபி கணபதியாக" பல்வேறு கீர்த்தனையில் இடம் பெற்ற கீர்த்தி இவருக்கு உண்டு.நாவுக்கரசருக்கு முன்னரே கரைக்கால் அம்மையார் பல பதிகங்கள் பாடி இருக்கிறார். இது மூத்த திருப்பதிகம் என்றசிறப்பு பெயர் கொண்டது. இறைவனே இவரை அம்மையே என்று எதிர் கொண்டு அழைத்தப் பேறு பெற்றவர் இவர்.எனவேதான் 63 வரில் அனைவரும் நிற்க இவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் ஞான ஒளி வீசிட்ட நங்கையவள் இந்த புனிதவதி.
கி.பி. 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுந்தரர் தனது விஞ்சுதமிழ் திருத் தொண்டர்கள் 60 பேரை தனது திருத் தொண்டர் தொகையில் அடையாளம் காட்டினார், இதுவே முதல் நூல்.
ராஜராஜன் காலத்தில் அவனுடைய பெரியதாயார் "செம்பியன்மாதேவி"யின் முயற்சியால் தேவராப் பாடல்கள் சேகரிக்கப்பட்டன.இவர் சிவ நேசச்செல்வர் கண்டராதித்த சோழரின் மனைவி, திருனாகேஸ்வரத்தில் வசித்தவர்.அத்தலத்து இறைவன் மீது மாளாக் காதல் கொண்டவர்.
இவருடைய முயற்சியால் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையை அடிப்படையாக கொண்டு "திரு நாரையூர் நம்பியாண்டார் நம்பி" அவர்களால் "திருத்தொண்டத்திரு அந்தாதி" நூல் இயற்றப்பட்டது. இது "வழி நூல்" வடமொழியில் வேதங்களைத் தொகுத்தவர் வியாசர். அது போல் தமிழில் திருமுறைகளை தொகுத்ததால் இவருக்குத் தமிழ் வியாசர் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னரே சேக்கிழார் கி.பி.12 ம் நூற்றாண்டில் பெரியபுராணத்தை இயற்றினார் இது "சார்பு நூல்", பெரியர் புராணம் என்பதே பின்னாளில் பெரிய புராணம் என்று மருவியது.
ராஜராஜன் காலத்தே தேவராச்சுவடிகளை சிதம்பரத்தில் கண்டு பிடித்ததாகக் கூறுவர். அவன் பின்னே வந்த ஆதித்த சோழனே கண்டுபிடித்தான் என்றும் ஒரு சாரார் கூறு கின்றனர்...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-4
கி.பி.12ம் நூற்றாண்டு வரை வடமொழியே உயரிய இடத்தில் இருந்தது. தமிழுக்கு உரிய இடம் கிட்ட வில்லை.பின்னர் தஞ்சைச்சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. வேங்கி நாட்டு சோழர் எனும் ராஜராஜனின் மகள் வழித் தோன்றல்கள் சோழசாம்ராஜ்யத்தை ஆளத் தொடங்கினர்.
இதில் முக்கிய மானவன் " அநபாய குலோத்துங்கன்" இவனது ஆட்சி சீரும் சிறப்புமாகபல ஆண்டுகள் நீடித்தது கம்பரும்,ஒட்டக் கூத்தரும் இவனது அவைப் புலவர்கள். இவன் புகழ் பாடும் "குலோத்துங்கன் உலா" எனும் நூல் இதனை இயற்றியது மூலம் உலாவுக்கு ஒரு ஒட்டக்கூத்தன் என்ற சிறப்புப் பெயர் கிட்டியது. ஆலயங்கள் புத்துயிர் பெற்றன.
தனது தாய் வழிப் பாட்டனான ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலை போன்றே "திருபுவனம்" ஆலயத்தை அமைத்தான். அற்புதசிற்பக் களஞ்சியம் இந்த ஆலயம் அத்தோடு "சரபேஸ் வரர்" ஆலயம் அமைத்தவனும் இவனே அத்தோடு சூரியனார் கோவில் ஆலயத்தை நிர் மானித்தவனும் இவனே.
இவனை கதா நாயகனாக வைத்து அமரர் "ஜெகசிற்பியன்" அவர்கள் 55ஆண்டுகலுக்கு முன்னே ஆனந்த விகடனில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். ரூ.5000 பரிசும் பெற்ற நாவல் இது அதில் இவனைப் பற்றிய விபரமும் அந்நாளைய மதம் அரசியல், படை எடுப்பு பெரியபுராண அரங்கேற்றம் என அனைத்து விபரங்களும் ஆதாரபூர்வமாக விளக்கி இருக்கிறார். இதனை படித்தால் அந்நாளில் தமிழக நிலை ப்ற்றி நன்கு உணரலாம் வரலாற்று நாவலில் இது ஒரு மைல்கல், என்றே சொல்லலாம்...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-5
அநபாய குலோத்துங்கனுக்கு ஒரு ஆசை தனது காலத்தில் தமிழில் ஒரு சிறந்த காவியம் இயற்றப்பட வேண்டும். அது காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே அந்த ஆசை, கம்பராமயனம் இவன் காலத்தே அரங்கேறினாலும் அது வடமொழி நூலின் தழுவலே.எனவே தன் மந்திரி அவைக்களப் புலவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்கிறான், கம்பரும் ஒட்டக் கூத்தரும் இவனது அரசவைக் கவிஞர்கள் இருப்பினும் இவர்களால் அவனது ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.
இவனது மந்திரி " அருண் மொழித்தேவர்" கூறுகிறார், சிவனடியார்களைத் தொகுத்து ஒரு நூல் இயற்றலாம். ஏற்கனவே சுந்தரரின் "திருத்தொண்டத் தொகையும்" நம்பியாண்டார் நம்பியின் "திருத் தொண்டர் திருவந்தாதியும்" இருந்தாலும் அது நாயன் மார்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் கூறவில்லை. எனவே அது பற்றி விரிவாக எழுதலாம் என்கிறார், தாங்களே அதைச் செய்ய வேண்டும் என்று மன்னன் கேட்டு கொள்ள ஒப்புக் கொள்கிறார் அமைச்சர், அதை சிரமேற்கொண்டு செயல் படுகிறார், கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இவரை பற்றி தனது "மாண்புமிகு முதலமைச்சர்" என்ற நாவலில் கோவி.மணிசேகரன் அவர்கள் அற்புதமாக எழுதி இருக்கிறார், இது கல்கியில் தொடராக வந்த நாவல் ,தமிழக அரசின் விருது பெற்ற நாவல்.இவர் திரு நாகேஸ்வரம் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அந்த ஆலயத்தில் இவருடைய சிலையும், இவரது தம்பியும் படைத்தளபதியுமான பாலவறாயர் சிலையும் இவர்களது தாயின் சிலையும் இன்றும் இவர் புகழ் பாடு கின்றன. இதே திரு நாகேஸ்வரன் மீது மாளாக் காதல் கொண்டவர் தான் திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றக் காரணமான ராஜராஜனின் பெரியதாயார் செம்பியன் மாதேவி, ஒத்தகருத்துகள் ஒன்றை ஒன்று ஈர்த்து செயல் படும் என்பது உளவியலாரின் கூற்று. அப்படி ஒத்தகருத்து உடைய இவர்கள் இனைந்து செயல் படக் காரணமானவன் அந்த திரு நாகேஸ்வரம் இறைவனே..*
*{பார்க்க "தஞ்சை தரணியிலே" (எனது நூல்) காவியம் படைக்கக் கருனை புரிந்தவன்..}
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-6
காலப் போக்கில் அருண்மொழித்தேவர் என்ற இவருடைய பெயர் மறைந்து சேக்கிழார் என்றே அழைக்கப்பட்டார். கிழார் என்றால் பொதுவாக விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர் என்று பெயர், இவர்களே வேளாளர்கள் என்று பின்னாளில் அழைக்கப்பட்டார்கள்.
இதில் கார்காத்த வேளாளர் என்று ஒரு பிரிவு, இவர்கள் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்பவர்கள்.கார் என்றால் மழைமேகம் எனவே மழையை நம்பி விவசாயம் செய்பவர் என்று பொருள்.இவர்கள் தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் இது மருவி "கார கெட்டார்" என்று ஆயிற்று இவர்கள் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்கள்.
சோழ நாட்டைச்சேர்ந்த வேளாலர்கள் சோழிய வேளாளர் என்றும் பின்னர் துளுவ நாட்டில் இருந்து குடி பெயர்ந்த வேளாளர்கள் துளுவ வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.இதுவே வெள்ளாழர் என்று திரிந்தது.
இவர்களில் சிலர் வியாபாரத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். முத்ம் முதலில் வியாபாரம் செய்தவர்கள் என்பதாலும் முதலீடு செய்தவர்கள் என்பதாலும் இவர்கள் முதலீட்டார்கள் என்று அழைக்கப்பட்டனர். அதுவே முதலியார் என்று வழக்கில் உருமாறியது .இதில் கைத்தறி நெசவை மேற் கொண்டவர்கள் கைக் கோள முதலியார் என்று அழைக்கப்பட்டனர். கைக் கோளம் என்றால் கைத்தறி நெசவு என்று பொருள்.
இவ்வாறு வேளாளர்களிடையே செய் தொழில் காரணமகப் பல பிரிவுகள் ஏற்பட்டன அதுவே பின்னர் பலசாதிகள் உருவாகக் காரணமாக அமைந்தது, ஆதியில் வேளாளர் என்ற ஒரு சமுகமாக வாழ்ந்த மக்கள் தொழில் நிமித்தம் பல் வேறு சமுதாயங்களை உருவாக்கவும் முனைந்தனர். இந்த சமுதாயம் தங்களுக்கென தனிதனி பாணிகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக சாதி ஆழமாக வேருன்ற ஆரம்பித்தது. ஆனாலும் இவர்கள் வேற்றுமை இன்றி ஒற்றுமையாக இனைத்து வந்தது விவசாயமே, ஏனெனில் அனைத்துத் தொழிலுக்கும் ஆதாரமாக உள்ளது விவசாயம் தனே எனவேதான் வள்ளுவன் கூறினான்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-7
மனிதனின் அடிப்படைத் தேவை மூன்று;
1.உணவு
2.உடை
3.உறைவிடம்.
முதல் தேவையான உணவை உற்பத்தி செய்த வேளாளர்களே இரண்டாவது தேவையான உடையையும் உற்பத்தி செய்பவர்களாக உயர்ந்தார்கள் பின்னர் உறைவிடம் அமைக்கும் கட்டுமானப் பொறியாளர்களாகவும் மாறினார்கள், நதிகள் பிறக்குமிடம் பலவானாலும் கலக்குமிடம் கடல்மட்டுமே.
இப்படி இந்த வேளாளர்கள் பல அவதாரம் எடுத்தாலும் அவர்கள் நாடியது இறைவனை மட்டுமே. 63 வரலாற்றில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் உண்டு இவர்கள் அனைவரையுமே இறைவன் ஆட்கொண்டு அருள் புரிந்து இருக்கிறான். மண்பாண்டம் செய்பவர்களை இன்றும் வேளார் என்றே அழைக்கிறோம். ஏனெனில் அனைவரும் "வேளாளர்" என்ற பெரும் பிரிவில் இருந்து பிரிந்தவர்களே. 63 வரலாற்றில் 1.முற்பட்டோர் 2.பிற்பட்டோர் 3.மிகவும்பிற்பட்டோர் 4.பட்டியல் வகுப்பினர் 5.பழங்குடியினர் என அனைவரும் உண்டு அனைவருமே ஆண்டவனின் அருள் பெற்றவர்களே. எனவேதான் வள்ளுவன் கூறினான்;
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்"
ஆதியில் சாதிகள் இல்லை பாதியில் வந்தவையே இந்தபாகுபாடு ஆண்டவனே இதனை அங்கீகரிக்கவில்லை* 1.'இதில் சைவ வேளாளர் என்று ஒரு பிரிவு' அதாவது சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில் ஏற்பட்ட பிரிவு பின்னர் சைவம் -அசைவம் என்று இரு பிரிவாகவும் மாறியது *2.'தொழிலில் பிரிவு கண்ட இவர்கள் தோழமையில் பிரிவு காணவில்லை. ஒற்றுமையாகவே இறை வழிபாடு கண்டனர். அனைவரும் இணைந்தே வாழ்ந்தனர்...
குறிப்பு: * "பார்க்க" எனது "அருமையான தலங்களும் விரிவான விளக்கங்களும் "நூலில் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" கட்டுரை.
* வலைத்தளத்தில் "சைவம் என்றால் என்ன?" என்ற எனது கட்டுரையைக் காண்க....
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-8
உத்தம சோழன் பல்லவன் என்று சிறப்பிக்கப்பட்ட சேக்கிழார் கள ஆய்வு செய்து பல தகவல்களையும் திரட்டுகிறார். அடியார்கள் வாழ்ந்த இடம் அவர்கள் சென்ற இடம் பாடிய பாடல்கள் அனைத்தையும் திரட்டுகிறார். தில்லையில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு ஆகிறது ஏனெனில் சபா நாயகனாக நடராஜனாக இறைவன் கொலுவீற்று இருக்கும் இடம் தில்லை அல்லவா? அதனால் தில்லையைத் தேர்ந்து எடுக்கிறார். புராணத்தை வடிவமைத்தாலும் முதல் பாடல் மட்டும் அவருக்கு சரிவர பிடிபடவில்லை. ஸ்டாட்டிங் டிரபிள்! தயங்குகிறார், தடுமாறுகிறார், ஈசனை வேண்டுகிறார்.
"உலகெலாம்" என்று அசரீரி ஒலிக்கிறது அனைவரும் ஹரஹர என்று அரற்றிக் கண்ணீர் மல்க சேக்கிழார் பாடுகிறார் கம்பீரமாக.
"உலகெலாம் உணர்ந்து ஒதற்கறியவன்
நிலவுலாகிய நீர்மல வேணியன்
அலகின் சோதியான் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கு வோம்"
பாடல் வரிகளுக்கு ஏற்ப சிலம்பொலி ஒலிக்க நடராஜனின் நடனம் அனைவரின் மன அரங்கிலும் அரங்கேறியது.சிவனுக்கு உகந்த திருவாதிரை நாளன்று அரங்கேற்றம் தொடங்கி அடுத்த திருவாதிரைத் திரு நாள்வரை ஒராண்டு அரங்கேற்றம் தொடர்ந்தது.அரங்கேற்றம் கண்ட சேக்கிழாரையும் அவரது நூலையும் பட்டத்து யானையில் ஏற்றி தானே பாகனாக அமர்ந்து நகர் வலம் வந்தான் மன்னன் குலோத்துங்கன் "பெரியர் புராணம் " என்று பெயர் சூட்டப்பட்ட நூல் திரிந்து "பெரிய புராணம்" ஆயிற்று 12 ஆம் திருமுறையாக ஏற்கப்பட்டது.
அது முதல் ஆலயத்தில் திருமுறைகளுக்கு என்று ஒரு சன்னதி ஏற்பட்டது. ஆலயம் தோறும் தேவாரம் ஒத ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டனர் பெரியபுராணமும் ஆலயங்களில் ஒலிக்கச் செய்தான். 63 வர் குருபூஜைகள் சிறப்பாக ஏற்பாடு செய்தான் மக்களிடையே தேவாரத்தின் செல்வாக்கு ஒங்கியது...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-9
படிப்படியாக வடமொழியின் ஆதிக்கம் ஆலயங்களில் குறைந்து தமிழின் முழக்கம் ஆரம்பித்தது.திராவிட வேதம் என்ற சிறப்புப் பெயருடன் தேவாரம் சிறப்பிடம் பெற்றது. சைவ வேளாள குலத்தவரே தேவாரம் ஒத நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆலயமே வசிப்பிடம் அமைத்து தந்தது. மேலும் ஆண்டு தோறும் சம்பளமாக நெல் வழங்கப் பட்டது.
இந்த ஒதுவார்கள் சில இடங்களில் பண்டாரத்தார் என்று அழைக்கப்பட்டனர். பண்+ஆரம்=பண்ணாரம் அதாவது தேவராப்பண்ணை இசை மாலையாகத் தொடுத்து வழங்குபவர்கள் என்று பெயர். மேலும் பண்டாரகம் என்றால் நூல் நிலையம் என்றும் ஒரு பொருள் உண்டு. பண்டைய நாளில் ஆலயங்களே நூல் நிலையமாக செயல்பட்டது. இதனை நிர்வகித்தவர்கலும் ஒதுவாரே. மேலும் பண்ணிரு திருமுறைகளும் சன்னதியில் வழிபாடு செய்யபட்டது.இதைப் பரமரித்தவர்களும் ஒதுவார்களே.எனவே இவர்கள் பண்டாரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர்.
சில இடங்களில் இவர்கள் தேசிகர் என்று அழைக்கப்பட்டனர்.தேவர்கள் தலைவன் தேசிகன் அவனைப் பாடிப் பரவியவர்கள் தேசிகர்கள் வலிவலம் சுவாமி பெயரே "மனத்துனை நாத தேசிகர்" இவரை பாடிப் பரவிய ஒதுவார்கள் தேசிகர் என்று அழைக்கப்பட்டனர்.
சில இடங்களில் இவர்கள் குருக்கள் என்று அழைக்கப்பட்டனர் குருகுல வாசம் மூலம் தேவாரம் பயிற்று வித்தவர்கள் இவர்கள் எனவே குருக்கள் என்ற அடைமொழியும் உண்டு மேலும் இவர்கள் பாமாலையோடு பூமாலையும் தொடுத்து வழங்கினர் .சிதம்பரத்தில் இவர்கள் வசித்த வீதிக்கு மாலைக் கட்டித் தெரு என்றே இன்றும் பெயர் இவர்கள் பல்வேறு அடைமொழியில் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் இவர்கள் வேளாளர்களே. தொழில் நிமித்தமாகவே பல்வேறு பெயர்கள் தமிழகம் எங்கும் தேவார இன்னிசை முழங்கியது பாடல் பெற்றத் தல்ங்கள் என ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டன. அடியார்கள் பிறந்த மண் புண்ணிய பூமியாக மதிக்கப்பட்டது...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-10
பின்னர் ஆதீனங்கள் உருவாயின.ஆலயங்கள் இவற்றின் கீழ் அருமையாகப் பராமரிக்கப்பட்டன. தேவார இசை பயிற்றுவிக்க அனைத்து ஆதீனங்கலும் பயிற்சி வகுப்புகள் நடத்தின. தங்களது ஆலயங்களிலேயே அவர்களை பணி நியமனம் செய்தன சிறந்த தேவாரகலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆலய நிர்வாகங்களில் பல குழப்பங்கள்,வருமானம் இழந்த ஆலயங்கள் தங்கள் பொலிவிழந்தன. பல ஆலயங்களுக்கு ஒதுவார் இல்லாத நிலை,இருந்த ஒதுவார்களுக்கும் போதிய வருவாய் இல்லை. எனவே இவர்கள் தங்களது வாரிசுகளுக்கும் வேறு வேலை வாய்ப்பு தேட ஆரம்பித்தனர், இதன் காரணமாக தேவாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது, கச்சேரி மேடைகளிலும் தெலுங்குக் கீர்த்தனைகளே களைகட்டியது.
இந்த நிலை மாறியது 1920 பின்னரே. ஆம்! 1908ல் திருச்செங்காட்டாங்குடியில் ஒரு தெய்வீகக் குழந்தை பிறந்தது.தனது ஒன்பதாவது வயதில் திருமருகள் ஆலயத்தில் தமிழிசைக் கச்சேரி செய்தது,தனது 12 வது வயதில் திருவாரூரில் தமிழிசை முழங்கியது அது கேட்ட முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாராட்டிப் பரிசு வழங்கினார். பின்னர் நகரத்து செட்டியார் வைர மோதிரம் வைரக்கடுக்கனும் வழங்கிக் கெளரவித்தார்கள் குறளுக்கு இசையமைத்து மேடையில் முழங்கியது. குழந்தை அத்தோடு தேவார இசையையும் உருகி உருகிப் பாடியது. பல சொந்த சாகித்தியங்களையும் இயற்றிப்பாடியது.அந்தக் குழந்தை தான் அமரர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். இவரது பெருமுயற்சியால் மீண்டும் தேவாரம் தழைத்து புத்துயிர் பெற்றது.
தருமை ஆதின வித்துவான் இவர். இவரது இசையை இசைத்தட்டில் கொண்டு வந்து சிறப்பித்தது ஆதினம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இசைத்துறைத் தலைவராக இவரை ஏற்றுப் பெருமை படுத்தியது. இசையரசு திருமுறை கலா நிதி என பலபட்டங்கள்,ஜனாதிபதி விருது,மைசூர் மன்னர் விருது, ராஜாசர்முத்தையா செட்டியார் விருது என பல விருதுகளுக்குச் சொந்தக் காரர் இவர், பலபுதிய ராகங்களையும் உருவாக்கியவர் இவர். இசை உலகில் முடிசூடா மன்னராக இவர் திகழ்ந்தார்* அத்தோடு நில்லாது திரைத்துறையையும் ஒரு கலக்குக் கலக்கியவர் இவர்...இவர் நடித்த பட்டிணத்தார் திரைப்படம் ஒர் ஆண்டு திரையிடப்பட்டு வசூலில் அபார சாதனை புரிந்தது. இவர் நடித்தப் படங்களில் இடம் பெற்றப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை..
நந்தனார் திரைப்படத்தில் இவர் நந்தனராக நடித்து இருக்கிறார். முதலில் இவரால் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளாளர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்,கர் நாடக இசையும் திரை இசையும் வேறு வேறு எனவே யோசித்தார் தயாரிப்பாளர். ஆனால் படம் வெளியானதும் இவருடைய பாடலுக்குப் போட்டி வத்து முதல் பரிசு ரூ.10,000 வழங்கியதும் அவரேதான்* ரூபாய்க்கு 10படி அரிசியும் பவுன் சவரன் 40,ரூபாயைத் தாண்டாத அந்த நாளில் இந்த புரட்சி என்பதைக் கேட்கும் போதே நமக்கு ஒரு மிரட்சி...
இவருடைய பாடல்கள் மக்களை மட்டும் ஈர்க்க வில்லை அந்த மகேசனையும் ஈர்த்தது.எனவே இவரது 65 வயதில் அவரை தன்னில் ஈர்த்துக் கொண்டான் இறைவன், இறை நிழலில் அவர் புகழ் பாடி நிற்கிறார் என்றும் நமது தண்டபாணி தேசிகர் அவர்கள். அவர் தேவார இசையைக் கேட்டால் கல்லும் கனியாகும்,முள்ளும் மலராகும், இனியாவது நாம் கேட்டு உய்வோமா???
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-11
சரி இப்படி தேவாரம் பாட வேண்டும் என்பது ஏன்? சாதாரணமாக சாமி கும்பிட்டால் போதாத? அதுவும் அந்த அந்தப் பண்ணில் அந்தந்த தாளத்தில் ஏன் பாட வேண்டும் என்ற அவசியம் என்ன? பாடல் தோன்றிய போதே பண்ணும் தாளமும் நிர்ணையிக்கப்பட்டு விட்டன இது ஏன்? இதனால் என்னபலன் என்பதே நம்முள் பரவலாக எழும் சந்தேகம்..
இதற்கு விடை தேட இசைபற்றி சற்றே விரிவாக அலச வேண்டும். வேதங்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன? ஏன் எழுதிப் படிக்காது வாய் வழியே பாடக் கேட்டுப் படித்தார்கள் காரணம், இங்கு பொருள் மட்டுமல்ல அதற்குப் பொருத்தமான இசையுமே சேர்ந்து முக்கியத்துவம் பெற்றது.பொருள் சிவன் என்றால் சக்தி ஒசை எனவேதான் அவள் சம்பந்தர் பெற்றப் பொற்றாளத்திற்கே ஒசை தந்து ஒசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்றாள்.**
ஆரம்பத்தில் சூரியனின் ஒருபகுதி வெடித்து சிதறியது.அதுவே பூமியாக மாறியது என்பது இன்றைய விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்ட உண்மை. அதை அன்றே உணர்ந்தவர்கள் நம்மவர்கள்.அப்படி வெடித்த போது ஏற்பட்ட ஒலியே "ஒம்" என்ற ஒலி.அதுவே நமது பிரணவ மந்திரமாக அமைந்தது.
இதைச் சொல்லும் போது நமது அடிவயிறு உள்ளிழுக்கப்பட்டு மூச்சு மெல்ல மெல்ல வெளியேறுகிறது. இது ஒரு ஆரோக்கியமான மூச்சுப் பயிற்சியாகவும் அமைகிறது.எனவேதான் பிள்ளையாரின் வடிவத்தையே ஒங்காரவடிவில் அமைத்தார்கள். பிள்ளையார் பூஜை முதலில் செய்த பின்னரே மற்ற பூஜைகள் என்று வலியுறுத்தப்பட்டது. வணவக் கோவிலிலும் இவருக்குத் தும்பிக்கை அழ்வார் என்று பெயர்,பிள்ளையாரைப் பார்க்கும் தோறும் நம்முள் "ஒம்" ஒலிக்கும் . எதைப் பார்க்கிறோமோ எதை நினைக்கிறோமோ, அதாகவே நாம் ஆவோம் என்பது உளவியல் தத்துவம்,பார்த்தால் மட்டும் போதுமா? அதுவாகவே ஆவது சாத்தியமா என்பதை விளக்க ஒரு சிறிய கதை சிறிதாக இருந்தாலும் இதில் பெரிய உளவியல் உண்மை அடங்கி இருக்கிறது அந்தக் கதையை அடுத்தவாரம் சொல்கிறேன்.
முன்னுரை:
தேவாரம் முதலிய பக்தி நூல்களின் தொகுப்புக்கு திருமுறைகள் என்று பெயர். தமிழில் உயிர் எழுத்துக்கள் பண்ணிரண்டு, அது போல் பக்திக்கு உயிர் நாடியான திரு முறைகளும் பண்ணிரண்டு.முறை என்றால் நூல் என்று பொருள், திரு முறை என்றால் இறைவனை போற்றிப் பாடும் நூல்கள் என்று பெயர்.
மேலும் முறை என்றால் நெறி, வழி என்றும் பொருள், திருமுறை என்றால் செம்மையான நெறி ,சிறந்த வழி என்றும் பொருள் கொள்ளலாம். நமது வாழ்வுக்குத் தேவையான நெறிகளையும்,முறைகளையும் தெள்ளத் தெளிவாகப் புகட்டுவது இந்தத் திருமுறைகளே ஆகும்.
கிட்ட தட்ட 6 ம் நூற்றாண்டு இருதியில் பாடதலை பட்டு இவை 10 ம் நூற்றாண்டில் தொடுக்கப்பட்டது. இருப்பினும் இவை பாமரர்களை அதிகம் சென்றடைய வில்லை காரணம் பல்வேறு படை எடுப்புகள்.ஆட்சி மற்றங்கள்.
இந்த நிலை மாறியது 20 ம் நூற்றாண்டில் தான் மாற்றியவர் அமரர் திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். தேவாரப் பண்ணை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் இவரே. இவரது தேவார இசை தட்டுகள் ஒலிக்காத ஆலயங்களே இல்லை எனலாம் . குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி , திருவெம்பாவை மார்கழி பனியுடன் இவரது குரலைக் கேட்கும் போது நமக்கு சிலிர்க்கும். மனம் சில்லிட்டுப் போகும். இவரது குரலை இசைத்தட்டில் கொண்டுவந்த பெருமை தருமை ஆதீனத்தையேசாரும்.
அடுத்து தருமபுரம் சுவாமினாதன் அவர்கள்,திருமுறை சித்தராகவே வாழ்ந்தவர் தற்போது சாமி தண்டபாணி அவர்கள் பெரிதும் தன்னை திருமுறைக்காவவே அர்ப்பணித்து கொண்டவர்.
பின்னர் இசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தை "சிம்பொனியில்" தந்து உலக அரங்கில் உன்னத இடம் பெறச்செய்தார்.நமது தமிழ் மேலை நாடுகளிலும் ஒலிக்கச்செய்தவர் இவரே. இப்படிப்பட்ட தேவார திரு வாசக பண்களை ஒதுபவர்கள் ஒதுவார்கள் என்று அழைக்கப்பட்டனர் ஒதுதல் என்றால் பாராயணம் என்றுப்பொருள்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.1
ஒதுவது ஒழியேல்...
ஒதாமல் ஒரு நாலும் இருக்க வேண்டாம்... என்பது மரபு. ஒதுவது என்பது படிப்பது,படிப்பிப்பது,கற்பது,கற்றுக் கொடுப்பது எனபல் வேறு பொருள்கள் உண்டு.வேதம் ஒதுதல் என்பதே வழக்கு.அதாவது வேத பாராயனம் செய்வது,அந்தக் காலத்தில் எழுதிப் படிக்கும் வழக்கம் இல்லை.வாய்வழி கேட்டே கல்வி பயின்றார்கள்.அதுவும் இசையுடன்.அவர்கள்வேத விற்பன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
திருமுறைகளுக்கும் திராவிட வேதம் என்றே பெயர் வழங்கப்பட்டது.இருப்பினும் திராவிட வேதத்திற்கு அதிகம் முக்கியதுவம் கிடைக்கவில்லை காரணம்.ராஜராஜன் காலத்தேதான் தேவாரங்கள் சிதம்பரத்தில் கண்டு எடுக்கப்பட்டன.இருந்தும் அவன் காலத்தே தேவாரம் அதிக முக்கியதுவம் பெறவில்லை.ஆயினும் இவன் காலம் தொட்டே 63 மூவருக்கு சிலைகள் ஆலயத்தில் அமைக்கப்பட்டன.இருப்பினும் ஆட்சியிலும் ஆலயத்திலும் வடமொழிக்கே அதிகம் முக்கியதுவம் தரப்பட்டது.ஆலயத்தை ஒட்டி அவர்கள் வசிக்க அக்கிரஹாரம் என்று வீதி அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டனர்.ஆலயத்தில் நான்கு வேதங்களே முழங்கியது,திராவிடவேதம் ஒதுக்கப்பட்டது.அ+கிரக+ஹாரம், அந்தனர்கள் வசிக்கும் வீடுகளின் மாலை என்ற பொருளில் அக்கிரஹாரம் என்ற சொல் வழக்கில் வந்தது இது இன்றும் பல ஊர்களில் உண்டு இது இனாம் சாசனம் செய்யப்பட்டது.
களப்பிரர்கள் ஆட்சியில்தமிழகம் இருண்டுகிடந்த போது,ஒளியேற்ற வந்தவர்கள் பல்லவர்கள். இவர்கள்தொண்டைமான்,இளந்திரையன் வழி வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். சோழ இளவரசனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவன் இவன்.இவர்கள்பயனித்தக் கப்பல் புயலில் சிக்கியது தொண்டைக் கொடியால் பாலகனை ஒரு பலகையில் கட்டிக் கடலில் இட்டனர், பெற்றோர்.இளம்திரைகளால் கடற்கரையில் ஒதுங்கியவனே பின்னாளில் தொண்டைமான் இளந்திரையன் ஆனான். இவன் வழிவந்தவர்கள்களே பல்லவர்கள் இளம் திரை என்றால் கடல் அலைகள்.தொண்டைக் கொடியால் பினைக்கப்பட்டு இளம்திரையில் மிதந்து வந்தவன் ஆனதால் தொண்டைமான் இளந்திரையன் என்று பெயர்பெற்றான்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.2
இந்தத் தொண்டைமான் இளந்திரையன் பற்றி அமரர் கல்கி அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" நாவலில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.அவர் நடையும்,மணியம்,வினுவின் ஒவியக் கொடையும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் அற்புத அனுபவங்கள்,அது சொல்லில் அடங்காத அனுபவம், சொல்லில் புரியவக்க முடியாத அனுபவம்.
இந்த இளந்திரையன் வழி வந்த சிம்ம விஷ்னுவே களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன். இவன் மகன் மகேந்திரவர்மன் கல்லிலே லலை வண்ணம் கண்டவன்.சித்திரகாரப்புலி என்ற பட்டம் பெற்றவன்.புதியதொரு யாழைக்கண்டு பிடித்தவன்,குடுமியான் மலை கல்வெட்டுகள் இவன் இசைத்திறமை புகழ் பாடுகிறது. செங்கல்,இரும்பு,இன்றிகற்றளி கோவில்கள் கண்ட கதா நாயகன் இவனே. இவனது கொடையே மாமல்லபுரம்,சமயச்சீரழிவு பற்றி ஒரு நாடகமும் இயற்றி இருக்கிறான் இவன்.
இவன் கி.பி. 6 ம் நூற்றாண்டு இறுதியிலும் 7 ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவன். இவன் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமுறை தந்த நாவுக்கரசரும்,ஞானசம்பந்தரும்.மன்னன்சமணத்தைச்சார்ந்தவன்.நாவுக்கரசரின் ஆரம்பகாலப் பெயர் மருள் நீக்கியார் இவரும் சமணத்தைச்சார்ந்தவரே,இவரது சகோதரியின் முயற்சியால் இவர் மீண்டும் சைவத்திற்கு திரும்பினார்.மன்னனையும் சைவத்திற்கு திருப்பினார்.
இறைவன் நாவுக்கரசரை சூலை (நோய்)தந்து ஆட்கொண்டான், சம்பந்தரை பாலைத் தந்து ஆட்கொண்டான்,சுந்தரரை ஒலைதந்து ஆட்கொண்டான்.
நாவுக்கரசர் தன்னை அடிமையாகவும் ஆண்டவனை ஆண்டானகவும் பாவித்து பாடியவர் எனவே இவர் தமிழ் "கெஞ்சுதமிழ்" ,சம்பந்தர் தந்தையாகவே இறைவனைக் கண்டார்.எனவே இவரது பாடல்கள் தகப்பனிடம் மகன் பேசுவது போன்றது. எனவே அது "கொஞ்சு தமிழ்" சுந்தரர் இறைவனைத் தன் தோழனாகவே கண்டார். பறவையிடம் தூது சென்றார், திருக்குவளையிலிருந்து ஆருருக்கு நெல் கொணர்ந்தார் எனவே இவர் தமிழ் "விஞ்சுதமிழ்" என்று வாகீசகலா நிதி அமரர் கி.வா.ஜகன் நாதன் அவர்கள் அழகுறப்பட்டியல் இடுகிறார்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.3
மகேந்திரவர்மனுக்கும், அவன் மகன் மாமல்லனுக்கும் படைத்தளபதியாக அமைந்த பரஞ்சோதியே பின்னாளில் பிள்ளைக் கறியமுது தந்து சிறுதொண்டராக உயர்ந்தவர். இவர் தலைமையிலே மாமல்லன் இரண்டாம், புலிகேசியை வெற்றி கொண்டான்.வாதாபியிலிருந்து கொணர்ந்த கணபதியைத் தனது ஊரான "திருச்செங்காட்டான் குடியில்" பிரதிஷ்டை செய்தார் பரஞ்சோதி,திருவாருரில் இருப்பதே வாதாபி கணபதி என்று வாதிடுவோரும் உண்டு,எது எப்படி இருந்தாலும்"வாதாபி கணபதியாக" பல்வேறு கீர்த்தனையில் இடம் பெற்ற கீர்த்தி இவருக்கு உண்டு.நாவுக்கரசருக்கு முன்னரே கரைக்கால் அம்மையார் பல பதிகங்கள் பாடி இருக்கிறார். இது மூத்த திருப்பதிகம் என்றசிறப்பு பெயர் கொண்டது. இறைவனே இவரை அம்மையே என்று எதிர் கொண்டு அழைத்தப் பேறு பெற்றவர் இவர்.எனவேதான் 63 வரில் அனைவரும் நிற்க இவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் ஞான ஒளி வீசிட்ட நங்கையவள் இந்த புனிதவதி.
கி.பி. 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுந்தரர் தனது விஞ்சுதமிழ் திருத் தொண்டர்கள் 60 பேரை தனது திருத் தொண்டர் தொகையில் அடையாளம் காட்டினார், இதுவே முதல் நூல்.
ராஜராஜன் காலத்தில் அவனுடைய பெரியதாயார் "செம்பியன்மாதேவி"யின் முயற்சியால் தேவராப் பாடல்கள் சேகரிக்கப்பட்டன.இவர் சிவ நேசச்செல்வர் கண்டராதித்த சோழரின் மனைவி, திருனாகேஸ்வரத்தில் வசித்தவர்.அத்தலத்து இறைவன் மீது மாளாக் காதல் கொண்டவர்.
இவருடைய முயற்சியால் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையை அடிப்படையாக கொண்டு "திரு நாரையூர் நம்பியாண்டார் நம்பி" அவர்களால் "திருத்தொண்டத்திரு அந்தாதி" நூல் இயற்றப்பட்டது. இது "வழி நூல்" வடமொழியில் வேதங்களைத் தொகுத்தவர் வியாசர். அது போல் தமிழில் திருமுறைகளை தொகுத்ததால் இவருக்குத் தமிழ் வியாசர் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னரே சேக்கிழார் கி.பி.12 ம் நூற்றாண்டில் பெரியபுராணத்தை இயற்றினார் இது "சார்பு நூல்", பெரியர் புராணம் என்பதே பின்னாளில் பெரிய புராணம் என்று மருவியது.
ராஜராஜன் காலத்தே தேவராச்சுவடிகளை சிதம்பரத்தில் கண்டு பிடித்ததாகக் கூறுவர். அவன் பின்னே வந்த ஆதித்த சோழனே கண்டுபிடித்தான் என்றும் ஒரு சாரார் கூறு கின்றனர்...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-4
கி.பி.12ம் நூற்றாண்டு வரை வடமொழியே உயரிய இடத்தில் இருந்தது. தமிழுக்கு உரிய இடம் கிட்ட வில்லை.பின்னர் தஞ்சைச்சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. வேங்கி நாட்டு சோழர் எனும் ராஜராஜனின் மகள் வழித் தோன்றல்கள் சோழசாம்ராஜ்யத்தை ஆளத் தொடங்கினர்.
இதில் முக்கிய மானவன் " அநபாய குலோத்துங்கன்" இவனது ஆட்சி சீரும் சிறப்புமாகபல ஆண்டுகள் நீடித்தது கம்பரும்,ஒட்டக் கூத்தரும் இவனது அவைப் புலவர்கள். இவன் புகழ் பாடும் "குலோத்துங்கன் உலா" எனும் நூல் இதனை இயற்றியது மூலம் உலாவுக்கு ஒரு ஒட்டக்கூத்தன் என்ற சிறப்புப் பெயர் கிட்டியது. ஆலயங்கள் புத்துயிர் பெற்றன.
தனது தாய் வழிப் பாட்டனான ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலை போன்றே "திருபுவனம்" ஆலயத்தை அமைத்தான். அற்புதசிற்பக் களஞ்சியம் இந்த ஆலயம் அத்தோடு "சரபேஸ் வரர்" ஆலயம் அமைத்தவனும் இவனே அத்தோடு சூரியனார் கோவில் ஆலயத்தை நிர் மானித்தவனும் இவனே.
இவனை கதா நாயகனாக வைத்து அமரர் "ஜெகசிற்பியன்" அவர்கள் 55ஆண்டுகலுக்கு முன்னே ஆனந்த விகடனில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். ரூ.5000 பரிசும் பெற்ற நாவல் இது அதில் இவனைப் பற்றிய விபரமும் அந்நாளைய மதம் அரசியல், படை எடுப்பு பெரியபுராண அரங்கேற்றம் என அனைத்து விபரங்களும் ஆதாரபூர்வமாக விளக்கி இருக்கிறார். இதனை படித்தால் அந்நாளில் தமிழக நிலை ப்ற்றி நன்கு உணரலாம் வரலாற்று நாவலில் இது ஒரு மைல்கல், என்றே சொல்லலாம்...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-5
அநபாய குலோத்துங்கனுக்கு ஒரு ஆசை தனது காலத்தில் தமிழில் ஒரு சிறந்த காவியம் இயற்றப்பட வேண்டும். அது காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே அந்த ஆசை, கம்பராமயனம் இவன் காலத்தே அரங்கேறினாலும் அது வடமொழி நூலின் தழுவலே.எனவே தன் மந்திரி அவைக்களப் புலவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்கிறான், கம்பரும் ஒட்டக் கூத்தரும் இவனது அரசவைக் கவிஞர்கள் இருப்பினும் இவர்களால் அவனது ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.
இவனது மந்திரி " அருண் மொழித்தேவர்" கூறுகிறார், சிவனடியார்களைத் தொகுத்து ஒரு நூல் இயற்றலாம். ஏற்கனவே சுந்தரரின் "திருத்தொண்டத் தொகையும்" நம்பியாண்டார் நம்பியின் "திருத் தொண்டர் திருவந்தாதியும்" இருந்தாலும் அது நாயன் மார்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் கூறவில்லை. எனவே அது பற்றி விரிவாக எழுதலாம் என்கிறார், தாங்களே அதைச் செய்ய வேண்டும் என்று மன்னன் கேட்டு கொள்ள ஒப்புக் கொள்கிறார் அமைச்சர், அதை சிரமேற்கொண்டு செயல் படுகிறார், கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இவரை பற்றி தனது "மாண்புமிகு முதலமைச்சர்" என்ற நாவலில் கோவி.மணிசேகரன் அவர்கள் அற்புதமாக எழுதி இருக்கிறார், இது கல்கியில் தொடராக வந்த நாவல் ,தமிழக அரசின் விருது பெற்ற நாவல்.இவர் திரு நாகேஸ்வரம் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அந்த ஆலயத்தில் இவருடைய சிலையும், இவரது தம்பியும் படைத்தளபதியுமான பாலவறாயர் சிலையும் இவர்களது தாயின் சிலையும் இன்றும் இவர் புகழ் பாடு கின்றன. இதே திரு நாகேஸ்வரன் மீது மாளாக் காதல் கொண்டவர் தான் திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றக் காரணமான ராஜராஜனின் பெரியதாயார் செம்பியன் மாதேவி, ஒத்தகருத்துகள் ஒன்றை ஒன்று ஈர்த்து செயல் படும் என்பது உளவியலாரின் கூற்று. அப்படி ஒத்தகருத்து உடைய இவர்கள் இனைந்து செயல் படக் காரணமானவன் அந்த திரு நாகேஸ்வரம் இறைவனே..*
*{பார்க்க "தஞ்சை தரணியிலே" (எனது நூல்) காவியம் படைக்கக் கருனை புரிந்தவன்..}
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-6
காலப் போக்கில் அருண்மொழித்தேவர் என்ற இவருடைய பெயர் மறைந்து சேக்கிழார் என்றே அழைக்கப்பட்டார். கிழார் என்றால் பொதுவாக விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர் என்று பெயர், இவர்களே வேளாளர்கள் என்று பின்னாளில் அழைக்கப்பட்டார்கள்.
இதில் கார்காத்த வேளாளர் என்று ஒரு பிரிவு, இவர்கள் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்பவர்கள்.கார் என்றால் மழைமேகம் எனவே மழையை நம்பி விவசாயம் செய்பவர் என்று பொருள்.இவர்கள் தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் இது மருவி "கார கெட்டார்" என்று ஆயிற்று இவர்கள் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்கள்.
சோழ நாட்டைச்சேர்ந்த வேளாலர்கள் சோழிய வேளாளர் என்றும் பின்னர் துளுவ நாட்டில் இருந்து குடி பெயர்ந்த வேளாளர்கள் துளுவ வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.இதுவே வெள்ளாழர் என்று திரிந்தது.
இவர்களில் சிலர் வியாபாரத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். முத்ம் முதலில் வியாபாரம் செய்தவர்கள் என்பதாலும் முதலீடு செய்தவர்கள் என்பதாலும் இவர்கள் முதலீட்டார்கள் என்று அழைக்கப்பட்டனர். அதுவே முதலியார் என்று வழக்கில் உருமாறியது .இதில் கைத்தறி நெசவை மேற் கொண்டவர்கள் கைக் கோள முதலியார் என்று அழைக்கப்பட்டனர். கைக் கோளம் என்றால் கைத்தறி நெசவு என்று பொருள்.
இவ்வாறு வேளாளர்களிடையே செய் தொழில் காரணமகப் பல பிரிவுகள் ஏற்பட்டன அதுவே பின்னர் பலசாதிகள் உருவாகக் காரணமாக அமைந்தது, ஆதியில் வேளாளர் என்ற ஒரு சமுகமாக வாழ்ந்த மக்கள் தொழில் நிமித்தம் பல் வேறு சமுதாயங்களை உருவாக்கவும் முனைந்தனர். இந்த சமுதாயம் தங்களுக்கென தனிதனி பாணிகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக சாதி ஆழமாக வேருன்ற ஆரம்பித்தது. ஆனாலும் இவர்கள் வேற்றுமை இன்றி ஒற்றுமையாக இனைத்து வந்தது விவசாயமே, ஏனெனில் அனைத்துத் தொழிலுக்கும் ஆதாரமாக உள்ளது விவசாயம் தனே எனவேதான் வள்ளுவன் கூறினான்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-7
மனிதனின் அடிப்படைத் தேவை மூன்று;
1.உணவு
2.உடை
3.உறைவிடம்.
முதல் தேவையான உணவை உற்பத்தி செய்த வேளாளர்களே இரண்டாவது தேவையான உடையையும் உற்பத்தி செய்பவர்களாக உயர்ந்தார்கள் பின்னர் உறைவிடம் அமைக்கும் கட்டுமானப் பொறியாளர்களாகவும் மாறினார்கள், நதிகள் பிறக்குமிடம் பலவானாலும் கலக்குமிடம் கடல்மட்டுமே.
இப்படி இந்த வேளாளர்கள் பல அவதாரம் எடுத்தாலும் அவர்கள் நாடியது இறைவனை மட்டுமே. 63 வரலாற்றில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் உண்டு இவர்கள் அனைவரையுமே இறைவன் ஆட்கொண்டு அருள் புரிந்து இருக்கிறான். மண்பாண்டம் செய்பவர்களை இன்றும் வேளார் என்றே அழைக்கிறோம். ஏனெனில் அனைவரும் "வேளாளர்" என்ற பெரும் பிரிவில் இருந்து பிரிந்தவர்களே. 63 வரலாற்றில் 1.முற்பட்டோர் 2.பிற்பட்டோர் 3.மிகவும்பிற்பட்டோர் 4.பட்டியல் வகுப்பினர் 5.பழங்குடியினர் என அனைவரும் உண்டு அனைவருமே ஆண்டவனின் அருள் பெற்றவர்களே. எனவேதான் வள்ளுவன் கூறினான்;
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்"
ஆதியில் சாதிகள் இல்லை பாதியில் வந்தவையே இந்தபாகுபாடு ஆண்டவனே இதனை அங்கீகரிக்கவில்லை* 1.'இதில் சைவ வேளாளர் என்று ஒரு பிரிவு' அதாவது சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில் ஏற்பட்ட பிரிவு பின்னர் சைவம் -அசைவம் என்று இரு பிரிவாகவும் மாறியது *2.'தொழிலில் பிரிவு கண்ட இவர்கள் தோழமையில் பிரிவு காணவில்லை. ஒற்றுமையாகவே இறை வழிபாடு கண்டனர். அனைவரும் இணைந்தே வாழ்ந்தனர்...
குறிப்பு: * "பார்க்க" எனது "அருமையான தலங்களும் விரிவான விளக்கங்களும் "நூலில் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" கட்டுரை.
* வலைத்தளத்தில் "சைவம் என்றால் என்ன?" என்ற எனது கட்டுரையைக் காண்க....
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-8
உத்தம சோழன் பல்லவன் என்று சிறப்பிக்கப்பட்ட சேக்கிழார் கள ஆய்வு செய்து பல தகவல்களையும் திரட்டுகிறார். அடியார்கள் வாழ்ந்த இடம் அவர்கள் சென்ற இடம் பாடிய பாடல்கள் அனைத்தையும் திரட்டுகிறார். தில்லையில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு ஆகிறது ஏனெனில் சபா நாயகனாக நடராஜனாக இறைவன் கொலுவீற்று இருக்கும் இடம் தில்லை அல்லவா? அதனால் தில்லையைத் தேர்ந்து எடுக்கிறார். புராணத்தை வடிவமைத்தாலும் முதல் பாடல் மட்டும் அவருக்கு சரிவர பிடிபடவில்லை. ஸ்டாட்டிங் டிரபிள்! தயங்குகிறார், தடுமாறுகிறார், ஈசனை வேண்டுகிறார்.
"உலகெலாம்" என்று அசரீரி ஒலிக்கிறது அனைவரும் ஹரஹர என்று அரற்றிக் கண்ணீர் மல்க சேக்கிழார் பாடுகிறார் கம்பீரமாக.
"உலகெலாம் உணர்ந்து ஒதற்கறியவன்
நிலவுலாகிய நீர்மல வேணியன்
அலகின் சோதியான் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கு வோம்"
பாடல் வரிகளுக்கு ஏற்ப சிலம்பொலி ஒலிக்க நடராஜனின் நடனம் அனைவரின் மன அரங்கிலும் அரங்கேறியது.சிவனுக்கு உகந்த திருவாதிரை நாளன்று அரங்கேற்றம் தொடங்கி அடுத்த திருவாதிரைத் திரு நாள்வரை ஒராண்டு அரங்கேற்றம் தொடர்ந்தது.அரங்கேற்றம் கண்ட சேக்கிழாரையும் அவரது நூலையும் பட்டத்து யானையில் ஏற்றி தானே பாகனாக அமர்ந்து நகர் வலம் வந்தான் மன்னன் குலோத்துங்கன் "பெரியர் புராணம் " என்று பெயர் சூட்டப்பட்ட நூல் திரிந்து "பெரிய புராணம்" ஆயிற்று 12 ஆம் திருமுறையாக ஏற்கப்பட்டது.
அது முதல் ஆலயத்தில் திருமுறைகளுக்கு என்று ஒரு சன்னதி ஏற்பட்டது. ஆலயம் தோறும் தேவாரம் ஒத ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டனர் பெரியபுராணமும் ஆலயங்களில் ஒலிக்கச் செய்தான். 63 வர் குருபூஜைகள் சிறப்பாக ஏற்பாடு செய்தான் மக்களிடையே தேவாரத்தின் செல்வாக்கு ஒங்கியது...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-9
படிப்படியாக வடமொழியின் ஆதிக்கம் ஆலயங்களில் குறைந்து தமிழின் முழக்கம் ஆரம்பித்தது.திராவிட வேதம் என்ற சிறப்புப் பெயருடன் தேவாரம் சிறப்பிடம் பெற்றது. சைவ வேளாள குலத்தவரே தேவாரம் ஒத நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆலயமே வசிப்பிடம் அமைத்து தந்தது. மேலும் ஆண்டு தோறும் சம்பளமாக நெல் வழங்கப் பட்டது.
இந்த ஒதுவார்கள் சில இடங்களில் பண்டாரத்தார் என்று அழைக்கப்பட்டனர். பண்+ஆரம்=பண்ணாரம் அதாவது தேவராப்பண்ணை இசை மாலையாகத் தொடுத்து வழங்குபவர்கள் என்று பெயர். மேலும் பண்டாரகம் என்றால் நூல் நிலையம் என்றும் ஒரு பொருள் உண்டு. பண்டைய நாளில் ஆலயங்களே நூல் நிலையமாக செயல்பட்டது. இதனை நிர்வகித்தவர்கலும் ஒதுவாரே. மேலும் பண்ணிரு திருமுறைகளும் சன்னதியில் வழிபாடு செய்யபட்டது.இதைப் பரமரித்தவர்களும் ஒதுவார்களே.எனவே இவர்கள் பண்டாரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர்.
சில இடங்களில் இவர்கள் தேசிகர் என்று அழைக்கப்பட்டனர்.தேவர்கள் தலைவன் தேசிகன் அவனைப் பாடிப் பரவியவர்கள் தேசிகர்கள் வலிவலம் சுவாமி பெயரே "மனத்துனை நாத தேசிகர்" இவரை பாடிப் பரவிய ஒதுவார்கள் தேசிகர் என்று அழைக்கப்பட்டனர்.
சில இடங்களில் இவர்கள் குருக்கள் என்று அழைக்கப்பட்டனர் குருகுல வாசம் மூலம் தேவாரம் பயிற்று வித்தவர்கள் இவர்கள் எனவே குருக்கள் என்ற அடைமொழியும் உண்டு மேலும் இவர்கள் பாமாலையோடு பூமாலையும் தொடுத்து வழங்கினர் .சிதம்பரத்தில் இவர்கள் வசித்த வீதிக்கு மாலைக் கட்டித் தெரு என்றே இன்றும் பெயர் இவர்கள் பல்வேறு அடைமொழியில் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் இவர்கள் வேளாளர்களே. தொழில் நிமித்தமாகவே பல்வேறு பெயர்கள் தமிழகம் எங்கும் தேவார இன்னிசை முழங்கியது பாடல் பெற்றத் தல்ங்கள் என ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டன. அடியார்கள் பிறந்த மண் புண்ணிய பூமியாக மதிக்கப்பட்டது...
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-10
பின்னர் ஆதீனங்கள் உருவாயின.ஆலயங்கள் இவற்றின் கீழ் அருமையாகப் பராமரிக்கப்பட்டன. தேவார இசை பயிற்றுவிக்க அனைத்து ஆதீனங்கலும் பயிற்சி வகுப்புகள் நடத்தின. தங்களது ஆலயங்களிலேயே அவர்களை பணி நியமனம் செய்தன சிறந்த தேவாரகலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆலய நிர்வாகங்களில் பல குழப்பங்கள்,வருமானம் இழந்த ஆலயங்கள் தங்கள் பொலிவிழந்தன. பல ஆலயங்களுக்கு ஒதுவார் இல்லாத நிலை,இருந்த ஒதுவார்களுக்கும் போதிய வருவாய் இல்லை. எனவே இவர்கள் தங்களது வாரிசுகளுக்கும் வேறு வேலை வாய்ப்பு தேட ஆரம்பித்தனர், இதன் காரணமாக தேவாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது, கச்சேரி மேடைகளிலும் தெலுங்குக் கீர்த்தனைகளே களைகட்டியது.
இந்த நிலை மாறியது 1920 பின்னரே. ஆம்! 1908ல் திருச்செங்காட்டாங்குடியில் ஒரு தெய்வீகக் குழந்தை பிறந்தது.தனது ஒன்பதாவது வயதில் திருமருகள் ஆலயத்தில் தமிழிசைக் கச்சேரி செய்தது,தனது 12 வது வயதில் திருவாரூரில் தமிழிசை முழங்கியது அது கேட்ட முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாராட்டிப் பரிசு வழங்கினார். பின்னர் நகரத்து செட்டியார் வைர மோதிரம் வைரக்கடுக்கனும் வழங்கிக் கெளரவித்தார்கள் குறளுக்கு இசையமைத்து மேடையில் முழங்கியது. குழந்தை அத்தோடு தேவார இசையையும் உருகி உருகிப் பாடியது. பல சொந்த சாகித்தியங்களையும் இயற்றிப்பாடியது.அந்தக் குழந்தை தான் அமரர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். இவரது பெருமுயற்சியால் மீண்டும் தேவாரம் தழைத்து புத்துயிர் பெற்றது.
தருமை ஆதின வித்துவான் இவர். இவரது இசையை இசைத்தட்டில் கொண்டு வந்து சிறப்பித்தது ஆதினம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இசைத்துறைத் தலைவராக இவரை ஏற்றுப் பெருமை படுத்தியது. இசையரசு திருமுறை கலா நிதி என பலபட்டங்கள்,ஜனாதிபதி விருது,மைசூர் மன்னர் விருது, ராஜாசர்முத்தையா செட்டியார் விருது என பல விருதுகளுக்குச் சொந்தக் காரர் இவர், பலபுதிய ராகங்களையும் உருவாக்கியவர் இவர். இசை உலகில் முடிசூடா மன்னராக இவர் திகழ்ந்தார்* அத்தோடு நில்லாது திரைத்துறையையும் ஒரு கலக்குக் கலக்கியவர் இவர்...இவர் நடித்த பட்டிணத்தார் திரைப்படம் ஒர் ஆண்டு திரையிடப்பட்டு வசூலில் அபார சாதனை புரிந்தது. இவர் நடித்தப் படங்களில் இடம் பெற்றப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை..
நந்தனார் திரைப்படத்தில் இவர் நந்தனராக நடித்து இருக்கிறார். முதலில் இவரால் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளாளர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்,கர் நாடக இசையும் திரை இசையும் வேறு வேறு எனவே யோசித்தார் தயாரிப்பாளர். ஆனால் படம் வெளியானதும் இவருடைய பாடலுக்குப் போட்டி வத்து முதல் பரிசு ரூ.10,000 வழங்கியதும் அவரேதான்* ரூபாய்க்கு 10படி அரிசியும் பவுன் சவரன் 40,ரூபாயைத் தாண்டாத அந்த நாளில் இந்த புரட்சி என்பதைக் கேட்கும் போதே நமக்கு ஒரு மிரட்சி...
இவருடைய பாடல்கள் மக்களை மட்டும் ஈர்க்க வில்லை அந்த மகேசனையும் ஈர்த்தது.எனவே இவரது 65 வயதில் அவரை தன்னில் ஈர்த்துக் கொண்டான் இறைவன், இறை நிழலில் அவர் புகழ் பாடி நிற்கிறார் என்றும் நமது தண்டபாணி தேசிகர் அவர்கள். அவர் தேவார இசையைக் கேட்டால் கல்லும் கனியாகும்,முள்ளும் மலராகும், இனியாவது நாம் கேட்டு உய்வோமா???
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்-11
சரி இப்படி தேவாரம் பாட வேண்டும் என்பது ஏன்? சாதாரணமாக சாமி கும்பிட்டால் போதாத? அதுவும் அந்த அந்தப் பண்ணில் அந்தந்த தாளத்தில் ஏன் பாட வேண்டும் என்ற அவசியம் என்ன? பாடல் தோன்றிய போதே பண்ணும் தாளமும் நிர்ணையிக்கப்பட்டு விட்டன இது ஏன்? இதனால் என்னபலன் என்பதே நம்முள் பரவலாக எழும் சந்தேகம்..
இதற்கு விடை தேட இசைபற்றி சற்றே விரிவாக அலச வேண்டும். வேதங்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன? ஏன் எழுதிப் படிக்காது வாய் வழியே பாடக் கேட்டுப் படித்தார்கள் காரணம், இங்கு பொருள் மட்டுமல்ல அதற்குப் பொருத்தமான இசையுமே சேர்ந்து முக்கியத்துவம் பெற்றது.பொருள் சிவன் என்றால் சக்தி ஒசை எனவேதான் அவள் சம்பந்தர் பெற்றப் பொற்றாளத்திற்கே ஒசை தந்து ஒசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்றாள்.**
ஆரம்பத்தில் சூரியனின் ஒருபகுதி வெடித்து சிதறியது.அதுவே பூமியாக மாறியது என்பது இன்றைய விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்ட உண்மை. அதை அன்றே உணர்ந்தவர்கள் நம்மவர்கள்.அப்படி வெடித்த போது ஏற்பட்ட ஒலியே "ஒம்" என்ற ஒலி.அதுவே நமது பிரணவ மந்திரமாக அமைந்தது.
இதைச் சொல்லும் போது நமது அடிவயிறு உள்ளிழுக்கப்பட்டு மூச்சு மெல்ல மெல்ல வெளியேறுகிறது. இது ஒரு ஆரோக்கியமான மூச்சுப் பயிற்சியாகவும் அமைகிறது.எனவேதான் பிள்ளையாரின் வடிவத்தையே ஒங்காரவடிவில் அமைத்தார்கள். பிள்ளையார் பூஜை முதலில் செய்த பின்னரே மற்ற பூஜைகள் என்று வலியுறுத்தப்பட்டது. வணவக் கோவிலிலும் இவருக்குத் தும்பிக்கை அழ்வார் என்று பெயர்,பிள்ளையாரைப் பார்க்கும் தோறும் நம்முள் "ஒம்" ஒலிக்கும் . எதைப் பார்க்கிறோமோ எதை நினைக்கிறோமோ, அதாகவே நாம் ஆவோம் என்பது உளவியல் தத்துவம்,பார்த்தால் மட்டும் போதுமா? அதுவாகவே ஆவது சாத்தியமா என்பதை விளக்க ஒரு சிறிய கதை சிறிதாக இருந்தாலும் இதில் பெரிய உளவியல் உண்மை அடங்கி இருக்கிறது அந்தக் கதையை அடுத்தவாரம் சொல்கிறேன்.